Search This Blog

20.4.12

உ.வே.சா.வின் தமிழ்ப் பற்றின் தன்மை?


உ.வே.சா


ஓர் ஏழை வேலைக் காரனைப் பார்த்து சோறு தின்றாயா என்று கேட்கலாம்; ஆனால் ஒரு கனவானைப் பார்த்து போஜனம் ஆயிற்றா என்று கேட்க வேண் டும். துறவிகளைப் பார்த்து பிக்ஷை ஆயிற்றா என்று கேட்க வேண் டும்

--------------- 1942இல் வானொலியில் உ.வே.சா.வின் பேச்சிலிருந்து இது தரப்படுகிறது.

இதன் மூலம் உ.வே. சாமிநாதய்யரின் தமிழ்ப் பற்றின் தன்மையும், வருணாசிரமக் கண்ணோட்டமும், முதலாளித்துவ மனப்பான்மையும் பளிச் என விளங்குமே!

இப்பொழுது உ.வே.சா. எங்கிருந்து வந்தார்? இந்த விமர்சனம் எதற்காக? என்ற வினாக்கள் எழுலாம்.

திருவல்லிக்கேணி கலாச்சார அகாதமி சார்பில் கஸ்தூரி சீனிவாசன் நூலகத்தின் பொன் விழா மற்றும் உ.வே. சாமி நாதய்யரின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளன.

உ.வே.சா. படத்தினைத் திறந்து வைத்த தினமணி ஆசிரியர் திருவாளர் கே. வைத் தியநாதய்யர் உரையாற்றுகையில் தமிழ் செம்மொழியானதற்குக் காரணம் உ.வே.சா என்று பேசியுள்ளார்.

இது உண்மை என்றால் தமிழ் செம்மொழியாக எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? மத்தியில் பிஜேபி ஆட்சியின்போது ஏன் கொண்டு வரப்படவில்லை?

தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் தளரா முயற்சியால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழ் செம்மொழி ஆனதை மனந்திறந்து ஏற்றுக் கொள்ள முடியாத ஆற்றாமையால் இப்படிப் பேசி யுள்ளார் என்றே கருத வேண் டும்.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் வரவேற்புக் குழு ஒன்றில் அங்கம் வகிப்பதற்கு இதே வைத்தியநாதய்யர் எப்படியெல்லாம் முரண்டு பிடித்தார் என்பது நமக்குத் தெரியாதா?

தமிழ்செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா என்று கேட்ட தினமலர்; செம்மொழி மாநாட் டுக்கு எதற்காக அரசு விடுமுறை என்று எழுதிய துக்ளக்குக்கு தினமணி சவுக்கடி கொடுத்திருந்தால் இப்பொழுது தமிழ் செம்மொழி ஆனது பற்றிப் பேச திருவாளர் வைத்தியநாத அய்யர்வாளுக்குத் தகுதி வந்திருக்கக் கூடும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ் செம்மொழி ஆனதை சாக்காகக் கொண்டுதான் இப்பொழுது சமஸ்கிருதமும் அந்தப் பட்டியல் இடம் பிடித்தது என்பதை எந்தப் பார்ப்பனராவது அவர்களின் எந்த ஏடாவது - இதழாவது தெரிவித்ததுண்டா?

இன்னொரு கூடுதல் தகவல்:

தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்று 1918ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது.

1918 மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மா நாட்டுத் தீர்மானங்களில் ஒன்று.
தீர்மானம் 8(ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பல, திறன்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக்கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

முன்மொழிந்தவர்: திரு. ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ.பி.எல். மதுரை.

வழிமொழிந்தவர்: திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார். தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

ஆதரித்தவர்: திருமதி. அலர்மேலு மங்கை தாயாரம் மாள், சென்னை.

தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணையிலும் பதிவு செய்யப்பட்டது.

--------------- மயிலாடன் அவர்கள் 19-4-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

மாசிலா said...

பகிர்வுக்கு நன்றி.