Search This Blog

18.5.12

கடவுள் காளியின் பெயரால் பீர் விற்பனை!


இந்துக்களின் கடவுளான காளியின் பெயரால் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பீர் விற்பனை செய்து வருகிறதாம். ஒரேகான் மாநிலத்தில் பர்ன்சைட் பிரவிங் என்ற நிறுவனம் காளி-மா என்ற பெயரில் பீர் விற்பனை செய்து வருகிறதாம் - பீர்பாட்டிலில் காளி படமும் ஒட்டப்பட் டுள்ளதாம். இது இந்துக் களின் மனதைப் புண்படுத்துகிறதாம். உடனடி யாக இந்திய அரசு இதில் தலையிட வேண்டுமாம்! அமெரிக்கத் தூதருக்குத் தாக்கீது அனுப்பி நேரில் அழைத்து விசாரிக்க வேண்டுமாம். இப்படி மாநிலங்களவையில் பிஜேபியைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத் என்ற உறுப்பினர் வற்புறுத்தி யுள்ளார்.


இதில் என்ன குடி மூழ்கிப் போய் விட்டதாம்? இந்துக் கடவுள்கள் குடிப் பழக்கம் உள்ளவர்கள் என்று எத்தனை எத்தனையோ புராணங்கள் கூறுகின்றனவே.

இந்திரன் என்ற கடவுள் மகாக்குடியன் -மொடாக்குடியன் என்று ரிக்வேதம் கூறவில்லையா?


இந்திரனே உனக்காகப் பிழிந்துள்ள நின் சோமபானத்தைக் குடிக்க வா! தாடியில் ஒட்டியுள்ள சோமச் சிதறவைத் தட்டி விடு!


------------------(ரிக் - 2112 சுலோகம்)

அத்வர்யுக்களே பசுக்களை ஒட்டிச் சென்ற திரீபிகனைக் கொன்று அவைகளை மீட்டுக் கொண்டு வந்தவனும், வலனைக் கண்டுபிடித்துக் கொன்றவனுமான இந் திரனுக்குச் சோமரசத்தைக் கொடுங்கள். இந்திரனை சோமபானத்தில் குளிப்பாட் டுங்கள்

------------------------(ரிக் 2145)

இந்த யோக்கியதையில் உள்ள குடிகாரன்கள் எல்லாம் இந்து மதத்தில் கட வுள்களாக வைத்துக் கொண்டு, எங்கோ அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனம் காளியின் பெயரால் பீர் விற்கிறது என்றவுடன் மீசை(?) துடிப்பது ஏன்?
இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா? கொலை செய்யாத கடவுள் உண்டா?

பெற்ற மகள் சரசுவதியையே பெண்டாண்ட வன்தானே - இந்து மதத்தின் படைப்புக் கடவுள் என்று கூறப்படும் பிர்மா!


இதைவிடக் கேவலம் உலகத்தில் எங்கே இருக்கிறது? மனிதர்களையே நெருப்பில் போட்டுப் பொசுக்கி யாகம் நடத்தியவர்கள் நல்லது பற்றி யெல்லாம் பேச நாக்கைச் சுழற்றலாமா?

சிவபுரம் நடராசன் சிலை கடத்திக் கொண்டு செல்லப்படவில்லையா? அதனை விலை கொடுத்து வாங்கிய நாட்ரன் என்பார். அந்தச் சிலையின் கையில் இருந்த தட்டினை சிகரெட் சாம்பலைத் தட்டுவதற்குப் பயன்படுத்திக் கொண் டாரே! (ஹளா கூசயல) திரிபுரம் எரித்ததாகக் கதை கட்டுகிறார்களே - அந்த சிவனான நடராசன், நாட்ரன் பிரபுவை என்ன செய்து கிழித்தான்? பேசாமல் கண்டு கொள்ளாமல் செல்லுங்கள் - அதுவரை நல்லது.

--------------- மயிலாடன் அவர்கள் 17-5-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

பிராமணர்களின் உதடுகளில் உலாவுவது என்ன?


நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில் அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?) இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன. இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான்.

நாளை அவன் செல்வனும், கற்றறிவாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொருவரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.

நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியாவெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர் உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்?

நாமும் மனிதர்களா? அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற்காகவும் நாம் என்ன செய்கின்றோம், நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா?

அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தியாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங்களுக்காக என்ன செய்கிறார்கள்? தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவுகின்றது? நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப்பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக்கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது; மற்றெங்குமன்று....


அன்பும் நல்லெண்ணமுமடைய உங்கள்

விவேகாநந்தா
(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)
- குன்றவாணன் குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்

தமிழ் ஓவியா said...

குன்னமிர்தல் கூறுகிறார்!


மக்களிடையே இருப்பது சமுதாய, பொருளாதாரப் பிளவுகளும், அவற்றுடன் சமுதாய நலன்கள், வேலை வருவாய் வாய்ப்புகள் இவற்றில் கொடிய சமமின்மையும் ஆகும். சமமற்ற ஏற்றத்தாழ்வுள்ள சமுதாய அமைப்பு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அகற்றமுடியாத பெரும் பகையாக உள்ளது. (ஆசியன் டிராமா - பக்கம் 258)

இந்திய சமுதாய பழக்க வழக்கங்களில் சாதிப் பாகுபாடு ஊடுருவிப் பாய்ந்துள்ளது கடுமையான அறுவை சிகிச்சையாலன்றி, வேறு முறையால் அதனை வீழ்த்திட முடியாது


(பக்கம் 278 - அதே நூல்)
(குன்னமிர்தல் எழுதிய ஆசியன் டிராமா என்ற இந்நூல் நோபல் பரிசு பெற்றது

தமிழ் ஓவியா said...

இந்துமதவாதிகளுக்கு சித்பவானந்தரின் கேள்விகள்!


(முஸ்லீம், கிருஸ்துவம், இந்துமதம் இவற்றை ஒப்பிட்டு, ஒரு இந்துமதத் தலைவரே விமர்சிக்கிறார் - ஆ-ர்)

ஒற்றுமை இஸ்லாமிய மதத்தை அலங்கரிக்கிறது. கடவுள் சன்னிதானத்தில் முஸ்லீம்களுக்கிடையில் உயர்வு தாழ்வு இல்லை. வெறுப்பு வேற்றுமையில்லை. தனியுரிமை இல்லை. சகோதர பாவனை ஒன்றே உளது எனும் உயர் கொள்கைகளை அவர்கள் செய்கையிற் காட்டுகின்றனர். இவைகளை ஹிந்துக்கள் ஏற்றுக் கொண்டு மானுடவர்க்கம் அனைத்தையும் ஒரே குடும்பமாகப் பாராட்டுவவர்களாக.

அமைப்பிற் சிறந்தது கிறிஸ்துமதம் ஓர் அதிபதியின் ஆணையின்படி நடக்கும் சேனைக்கும் ஆட்டுக் கூட்டத்துக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அவ்வளவு வித்தியாசம் கிறிஸ்துவர் களுக்கும் ஹிந்துகளுக்கும் இடையில் இப்போது இருக்கிறது. ஆயிரக்கணக்கான பேர் எனினும் அவர்கள் ஆலயங்களுக்குச் செல்லுதலிலும், உள்ளே அமர்ந்திருப் பதிலும், கடவுளை வழுத்துதலிலும், பின்பு வெளியேகுத லிலும் எவ்வளவு அமைதி, எவ்வளவு ரீதி பொலிகின்றது. ஆலயங்களில் கூடுகையில் அவர்கள் கொள்ளும் அடக்கமும், நேர்த்தியுமே உள்ளத்தைக் கவர்வனவாகின்றன. (பக்கம் -449, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் 1935)

நம்நாட்டில் ஆலயங்களில் பெரிய உற்சவங்கள் நிகழ்கின்றன. அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விடங்களில் கூடுகின்றனர். ஒழுங்காகக் கோவிலுக்குள் போகவும் வெளியே வரவும் அவர்களுக்கு தெரியாது. இருக்குமிடத்தை சுத்தமாக வைத்திருக்கவும் அவர்களுக்கு தெரியாது. (கல்வி, பக்கம் 177)

கடவுள் சாந்நித்தியத்துக்கு வந்திருப்பதாக உணருகிறார்களா? ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு அவர்கள் கோவிலினுள் முந்துகின்றனர். அவர்கள் செயலைப் பார்த்து மெய்ப்பொருளாகிய இறைவன் மெச்சுவாரா? மக்கள் இன்னும் மாண்பு அடையப் பெறவில்லையென்பதற்கு ஆலயத்தினுள் அவர்கள் நடந்து கொள்ளுவதே நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

(நூல்: கல்வி, சுவாமி சித்பவானந்தர், பக்கம் 8)