Search This Blog

5.12.13

சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானதா?

 படம் எடுக்கும் ஆரியம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

சிதம்பரம் நடராஜன் கோயில் மீண்டும் பிரச்சினையின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எந்தக் காலத்திலும் கோயில் கட்டுவதற்காக எந்த சிறு உழைப்பையும், பொருளையும் தராத பார்ப்பனர்கள், கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல  கோயில்களைத் தங்கள் வசப்படுத்திப் படம் எடுத்து ஆடுகிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காப்பாற்றப்பட்ட தமிழர் பண்பாட்டுக் கருவூலச் சிந்தனைக்கான ஏற்பாடுகளையும், சட்டங்களையும் தலைகீழாகப் புரட்டும் ஒரு வேலை இப்பொழுது திட்டமிட்ட வகையில் அரங்கேறி வருகிறது.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் செம்மொழி, உள்ளிட்டவைகளை சீர்குலைத்தது போல, இந்து சமய அற நிலையத் துறையின் கீழ் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் கோயிலை மறுபடியும் தீட்சதர் கைக்குக் கொண்டு வர திட்டமிட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில்தான் சிதம்பரத்தில் மக்கள் மன்றம் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று கொட்டும் மழையில் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதில் ஆத்திகம் - நாத்திகம் என்ற பிரச்சினை இடம் பெறவில்லை; கோயிலின் பெயரால் அதன் செல்வம் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த பார்ப்பனர்களால் சுரண்டப்படுகிறது. இதைத் தடுப்பதுதான் அதன் நோக்கம்.

சிதம்பரம் கோயில் தங்களுக்கே சொந்தம் என்று அடம் பிடிக்கும் தீட்சதர்கள் அதற்கான ஆதாரங்களைக் காட்டுவதில்லை; புராணங்களைக் கொண்டு வந்து காட்ட முயற்சிக்கிறார்கள். புராணங்கள் நீதி மன்றங்களுக்கான ஆவணங் களாக இருக்க முடியாது என்பதை நீதிபதிகள் தெரிந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.

அவர்கள் சொல்லும் அந்தப் புராணங்களில்கூட முரண்பாடுகள் உண்டு. கோயில் புராணம் என்பதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஒரு நாள் தில்லை வாழ் அந்தணர்கள் தாங்கள் மூவாயிரம் பேர் இருக்கிறோமா என்று கணக்கெடுத்தார்களாம். எண்ணும்போது 2999 பேரே கணக்கில் வந்தது. அவர்களில் ஒருவர் எண்ணியவரைப் பார்த்து உம்மை விட்டு விட்டு எண்ணி விட்டீரா? என்றாராம். அதனால் மீண்டும் ஒரு முறை தம்மையும் சேர்த்து எண்ணினாராம். மீண்டும் 2999 பேரே கணக்கில் வந்தது - எங்குற்றார் ஒருவர்? என யாவரும் கவலையுற்றார்களாம்.

அது சமயம் கடவுளாகிய நடராசர் இங்குள்ளேன் நான் எனச் சொல்லி அக்கூட்டத்தில் கலந்து கொண்டாராம்; கடவுளையும் சேர்த்து மூவாயிரம் பேராம்.

இது உண்மையல்ல என்பதற்கு வேறு யாரையும் அழைக்கத் தேவையில்லை. கோயில் புராணம் இயற்றப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மாணிக்க வாசகர் வாழ்ந்தார். அவர் தாம் இயற்றிய இரு நூல்களுள் ஒன்றாகிய திருக்கோவையார் என்னும் நூலில் நடுங்க நாட்டம் என்னும் துறையுள் ஒரு பாடலைக் கூறுகிறார் அப்பாடலாவது-

ஆவா விருவர் அறியா அடிதில்லை யம் பலத்து
மூவாயிரவர் வணங்க நின்றோனையுன்னாரின் முன்னித்
தீவா யுழுவை கிழித்தந் தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணி கொண்ட வாறின்றோ - ராண்டகையே!

இப்பாட்டில் மூவாயிரவர் வேறு; கடவுள் வேறு என்னும் குறிப்பைக் காண முடிகிறதே! மூவாயிர நான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி (திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி) என்பதும் இதையே கூறுகிறது.

அவர்கள் கூறும் கோயில் சம்பந்தமான ஆதாரங்களே முரண்பட்டு நிற்கும் பொழுது, எந்தத் தைரியத்தில் சிதம்பரம் நடராஜன் கோயில் தங்களுக்கே சொந்தமானது என்று தீட்சதர்கள் கூறுகிறார்கள்?

இதில் இன்னொரு வினாவும் இருக்கிறது. அந்தணர் என்று தான் கூறப்பட்டுள்ளது. தீட்சதர் என்று கூறப்படவில்லையே!  அந்தணர்கள் எப்படி தீட்சதர்கள் ஆவார்கள்? திருவள்ளுவர் கருத்துப்படி அந்தணர் என்போர் அறவோர் அவ்வளவுதானே தவிர - குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பது விளங்கவில்லையா?

எந்தக் காலத்திலோ ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சி வலைகளைப் பின்னினார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த 2013 ஆம் ஆண்டிலும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சிதம்பரம் கோயில் பித்தலாட்டம் ஒன்று  போதாதா?

ஆரியம் மீண்டும் மகுடம் சூட படம் எடுக்கத் துடித்துக் கொண்டு இருக்கிறது - தமிழர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!

                            ------------------------- ”விடுதலை” தலையங்கம் 5-12-2013
 

38 comments:

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை

சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை. - (விடுதலை, 26.8.1967)

தமிழ் ஓவியா said...


போர்க் குற்றங்கள்மீது நடவடிக்கை:


இலங்கைக்கு,அமெரிக்காஎச்சரிக்கை

சர்வதேச சமூகம் பொறுமை காக்காது!

இலங்கை உள்நாட் டுப் போரில், ராணுவத் தின் அட்டூழியம் மற் றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விடில், சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது என்று தெற் காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளி யுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ் வால் கூறினார்.

போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கை யில் வரும் மார்ச் மாதத் துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால் அய்.நா. தலைமையி லான விசாரணை கோரு வோம் என்று இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த மாதம் கூறியிருந்தார். இக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் நிஷா பிஸ் வால் இவ்வாறு கூறி யுள்ளார்.

அய்.நா. அறிக்கை

2009-ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங் களில், சிங்கள ராணுவத் தால் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என் றும், ராணுவத்தினர் கடும் போர்க் குற்றங் களில் ஈடுபட்டதாகவும், அய்.நா. அறிக்கை கூறு கிறது.

இந்நிலையில், போர்க் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்கும் விவகாரத்தில் இலங்கை அரசு தாமாக முன்வந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிஷா பிஸ்வால் கூறியுள் ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கை தங்கள் நாட்டு சட்ட திட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ் வாறு நடந்து கொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும் போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத் தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லா விட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறு மையாக இருக்காது என்றார் நிஷா பிஸ்வால்.

இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனு மதிக்க முடியாது என்று கூறிவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, உள் நாட்டு விசாரணைக்கும் உத்தரவிட மறுத்து வருகிறார். ராணுவத்தின் அத்துமீறல் குற்றச்சாட் டுகளையும் அவர் மறுத்து வருகிறார்.

அதிகாரப் பகிர்வை நோக்கி சிறு நடவடிக் கையாக கடந்த செப் டம்பர் மாதம் நடை பெற்ற இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்ற போதி லும், அங்கு ஊடகங்கள் மீதான நெருக்குதல், மனித உரிமை மீறல்கள் போன்ற சமீபத்திய செய் திகள் அதிர்ச்சி அளிக் கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மோடிக்கான விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு


வாஷிங்டன், டிச.5- அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந் தாலும் அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வும், மோடிக்கு விசா வழங்குவது தொடர் பான கொள்கையில் மாற்றம் எதுவும் செய் யப்படவில்லை என்றும் அதிபர் ஒபாமாவின் அமெரிக்க நிர்வாகம் மீண்டும் தெரிவித்துள் ளது.

இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியா விற்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

அமெரிக்க விசா விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின் றேன். அனைவரது விசா விண்ணப்பத்தின் மீதும் உரிய ஆய்வு நடத்தப் படும். அதன்படி விசா விண்ணப்பம் சமர்ப்பிக் கும் அனைவரது விண் ணப்பமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அந்த நடைமுறையின் இறுதி முடிகள் குறித்து பேச இயலாது என்றார் பிஸ் வால்.

அப்போது நரேந்திர மோடிக்கு விசா வழங் குவது குறித்து செய்தி யாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப் பினர். அதற்கு பதில் அளித்த பிஸ்வால், "அமெரிக்க விசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. விசா விண்ணப்பங்கள் எப்போதும் விண்ணப் பத்துக்கு தகுந்தவாறு பரிசீலனை செய்யப் படுகின்றன.

அரசு விசா, அரசு அதிகாரிகளுக்கான விசா, சுற்றுலா விசா என விசாக்களில் பல்வேறு விசாக்கள் உள்ளன.

எனவே, விசா விண் ணப்பத்தின் தன்மை மற்றும் யார் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைப் பொறுத்தே அதன் மீதான முடிவுகள் இருக்கும்' என்று கூறினார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவ ரத்தைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. அதே நிலைதான் தற்போ தும் நீடித்து வருகிறது என்பதை அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் சமத்துவபுரத்தில் கோயிலா?


கரூர் மாவட்டம், வெள்ளியணையில் இம்மாவட்டத்தில் முதல் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இச்சமத்துவபுரத்தில் கடந்த 2010 ஆண்டு மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி அவர்கள் மார்பளவு பெரியார் சிலையை நிறுவினார். சிலையின் அருகில் புற்றுக் கண் கோயில் திடீரென முளைத்துள்ளது. சமத்துவபுரத்தின் உள்ளே பால நாகம்மா கோயில் என இரண்டு கோயில்கள் சமத்துவபுரத்தில் உள்ளன. இந்த இரண்டு கோயில்களிலும் பாம்பு புற்றின் அருகில் சாமி படங்களும், மஞ்சள் துணி கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் தெளித்து தினம் பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த கோயில் அருகே வேப்ப மரம், மற்றும் கோயிலை கீற்றுக் கொட்டகை அமைத்து பெரியார் சமத்துவபுரத்தின் நுழைவு பகுதியில் பெரியார் சிலை அருகே கோயில் அமைத்து சில சமூக விரோதிகள் தீய செயலில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்த கோயிலை அப்புறப்படுத்தி ஜாதி சமய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் கழகத் தோழர்களையும், பகுத்தறிவு சிந்தனை யாளர்களையும் ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடைபெறுவதை தவிர்க்க உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். எந்த நோக்கத்துக்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டதோ அதை உருக்குலைக்க சதி நடக்கிறது. அரசு தலையிடட்டும்.

தமிழ் ஓவியா said...


சென்னை சிறைச்சாலையில் மிசா கைதியாக ஆசிரியரோடு இருந்து அவரின் ஆலோசனைகளைப் பெற்றவன் நான்!



அவர் பிறந்த நாளில் பங்கேற்பது எனக்குக் கிடைத்த பெரும்பேறு

தஞ்சை விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் உரை

தஞ்சை, டிச.5- 95 மிசா கைதியாக சென்னை சிறைச்சாலையில் ஆசிரியர் அவர்களோடு இருந்து அவருடைய ஆலோசனைகள், கொள் கைகள் இவற்றைப் பெற்றவன் நான். அவருடைய 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்றார் திராவிட முன்னேற்றக் கழகப் பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

2.12.2013 அன்று மாலை தஞ்சையில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - பெரியார் உலகத்திற்காக 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

கொள்கை வீரருக்கு வாழ்த்து!

தந்தை பெரியார் அவர்களின் 95 அடி பேருருவச் வெண்கலச் சிலையை அமைப்பதற்கு ஆயிரம் பவுன் வழங்கும் விழாவும், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் - இந்த சிறப்புமிகு விழாக்கள் எழுச்சியோடு நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன.

இன்று இந்த விழா எழுச்சியோடு, சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கொள்கை வீரருக்கு வாழ்த்துகளை சொல்லக்கூடிய விழா வாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.

இங்கு என்னை அறிமுகப்படுத்தி உரையாற்றப் போவதாக எடுத்துச் சொல்லும் நேரத்தில், ஏற் காடு தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத் தினை முடித்துவிட்டு வந்திருப்பதாகக் குறிப் பிட்டுச் சொன்னார்கள். உண்மைதான், அதனால் தான் குறிப்பிட்ட நேரத்திற்கு என்னால் வர முடிய வில்லை. 5 மணியளவில் பிரச்சாரம் முடிவுற்று, அதற்குப் பிறகு தேர்தல் பணிகள் குறித்து சில ஆய்வு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, 6.30 மணியளவில் அங்கிருந்து கிளம்பி, வரும் வழியில் எல்லாம் மழை குறுக்கிட்டதால், குறித்த நேரத் தில் வந்து சேர முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி, இங்கு வந்திருக்கிறோம். அதற்காக நான் முதலில் அய்யா அவர்களுக்கும், இந்த நிகழ்ச் சியை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் முதலில் என்னுடைய வருத்தத்தை இந்தநேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட் டிருக்கிறேன்.

எனக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு பேறு!

பெரியார் உலகம் - 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு வெண்கலச் சிலையை அமைக்க - அதற்காக 1000 பவுன் நிதி தரக்கூடிய நிகழ்ச்சி - அதனைத் தொடர்ந்து நம்முடைய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அந்த விழாக் களில் நானும் உங்களோடு சேர்ந்து பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன்; பூரிப்படைகிறேன். எல்லாவற்றையும் கடந்து நான் பெருமையோடு சொல்லவேண்டுமென்று சொன் னால், என்னுடைய வாழ்நாளில் எனக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு பேறாக இந்த விழாவை நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

நம்முடைய சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியார் அவர்களுக்கு வெண்கலத்தில் 95 அடி உயரத்தில் சிறுகனூரில் சிலை அமைக்கப்பட விருக்கிறது.

வரலாற்றினை உருவாக்கியவர் தந்தை பெரியார்!

தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென் றிருக்கக்கூடிய இந்த மாபெரும் பேரியக்கத்தைக் கட்டிக் காப்பாற்றக்கூடிய ஒரு மாபெரும் பொறுப்பினை நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, அதனை முறையாக, செம்மை யாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரையில் நான் கேள்விப்பட்டிருக்கும் வரையில், எந்த நாட்டிலும் 200 ஆண்டுகளில் செய்து முடிக்காத ஒரு பெரும் சாதனையை - தந்தை பெரியார் அவர்கள் 20 ஆண்டு காலத் திலே செய்து முடித்திருக்கக்கூடிய வரலாற்றினை உருவாக்கி இருக்கின்றார்கள்.

1929 இல் செங்கற்பட்டு மாநாடு!

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய 50 வயதில், சுயமரியாதை இயக்கத்தை, அதனுடைய வரலாற்றினை பதிய வைக்கக்கூடிய ஒரு செய்தியை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால், மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடு - 1929 ஆம் ஆண்டு செங்கற் பட்டில் நடைபெற்ற நேரத்தில், அந்த மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் முன்னின்று, 34 தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற் றினார்கள்.

அப்படி நிறைவேற்றப்பட்டிருக்கின்ற தீர்மா னங்கள்தான், 1967 ஆம் ஆண்டு முதன் முதலில் அண்ணா தலைமையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஆட்சி நடை பெற்ற அந்தக் காலகட்டங்களில், தந்தை பெரியார் அவர்களால், 1929 ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட 34 தீர்மானங்களில் பல்வேறு தீர் மானங்களைத்தான், தன்னுடைய ஆட்சிக் காலத்திலே நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள்.

வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று!

அதில் நான் ஒன்றைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்று சொன்னால், சொத்தில் பெண் களுக்கு சம உரிமை வழங்கிடவேண்டுமென்று, அந்த 34 தீர்மானங்களில் ஒரு தீர்மானமாக இருந்தது. ஆகவே அந்தத் தீர்மானத்தைத்தான் 1989 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது, சட்டப்பேரவையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றித் தந்தார்கள். 60 ஆண்டு கள் கழித்து அந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்று சொன்னால், அது வரலாற்றிலே பதிவாக வேண்டிய ஒன்று.

அதேபோல், பொதுச் சாலைகள், கிணறுகள், குளங்கள், பாடசாலைகள் எந்த இடத்திலும் தீண்டாமையை உருவாக்கக் கூடாது.

பெண்களுக்கு விவாகரத்து; விதவை மறு மணம் உரிமை வேண்டும்; தாய்மொழி கல்வி; தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசு நிலங்கள்; ஆரம்பக் கல்வியில் பெண்களுக்கு ஆசிரியப் பொறுப்பில் நியமிக்கக்கூடிய அந்த உரிமை ஆக, இப்படி 34 தீர்மானங்கள் கொண்டுவந்து நிறை வேற்றப்பட்டது என்று சொன்னால், அவைதான் தி.மு.க. ஆட்சிகாலத்திலே அது நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்பதையும் இங்கே நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலம்; நான் அதை இங்கு பெருமையோடு குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன். அவர் வாழ்ந்த காலம், 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாள்கள்.

தமிழ் ஓவியா said...

உலகத்தில் எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத பெருமை தந்தை பெரியாருக்கு உண்டு!

இப்பொழுது இருக்கின்ற மாதிரி போக்கு வரத்து வசதி, சாலை வசதிகளெல்லாம் அப் பொழுது கிடையாது. ஆக, அப்படிப்பட்ட அந்த சூழ்நிலையில், தான் கொண்டிருந்த கொள்கை களில், தன்னுடைய குறிக்கோளை இந்த நாட் டிலே பிரச்சாரம் செய்வதற்கு, அதனைப் பரப் புவதற்கு, அதனை நிறைவேற்றுவதற்கு, தந்தை பெரியார் அவர்கள் எத்தனை நாள்கள் பயணத் திற்காகவே செலவு செய்திருக்கிறார்கள். சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் அவர் பயணம் செய்து, 10 லட்சத்து 700 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று, அப்படி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றியிருக்கக்கூடிய உரையின் நேரம் எவ்வளவு என்று கேட்டால், 21 ஆயிரத்து நான்கு மணிநேரம் தந்தை பெரியார் அவர்கள் உரை யாற்றி இருக்கிறார்கள் என்று சொன்னால், நான் பெருமையோடு குறிப்பிடுகிறேன், உலகத்தில் எந்த ஒரு தலைவரும் இப்படி பணியாற்றிய வரலாறு கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூறிட முடியும்.

எங்களோடு சிறையில் இருந்தவர் ஆசிரியர்!

அதேபோலதான், அவர் வழி வந்து, அவ ருடைய கொள்கைகளைத் தாங்கி, இன்றைக்கு இந்த சமுதாயத்திற்காகத் தொடர்ந்து பாடு பட்டுக் கொண்டிருக்கக்கூடிய, இன்றைக்கு 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினைக் காணக்கூடிய அய்யா ஆசிரியர் அவர்கள், இதுவரையில் 40-க் கும் மேற்பட்ட முறை சிறை சென்றிருக்கிறார்கள். அதில் ஒன்றை நான் குறிப்பிடவேண்டுமென்று சொன்னால், ஓராண்டு காலம் மிசா என்ற கொடுமையான சட்டத்தில் கைது செய்யப்பட்டு, எங்களைப் போன்றவர்கள் எல்லாம் சிறையில் இருந்த நேரத்தில், எங்களோடு அன்றைக்கு சிறையில் இருந்தவர் ஆசிரியர் அவர்கள்.

எதற்காக இந்த மிசா சட்டம் வந்தது என்று சொன்னால், 1975 ஆம் ஆண்டு, இந்தியாவில் ஒரு நெருக்கடி நிலை. அன்றைக்கு இந்திய நாட்டி னுடைய பிரதமராக இருந்த அம்மையார் இந்திரா காந்திக்கு ஒரு நெருக்கடி நிலை ஏற்பட் டது. அவருக்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த நாட்டிலே நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார். அப்படி அமல்படுத்திய நேரத்தில், இந்திய திருநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கின்ற தலைவர் களையெல்லாம் கைது செய்து சிறைக் கொட்ட டியில் அடைத்தார்கள்.

மிசா என்ற கொடுமையான சட்டத்தின்கீழ் கைது செய்து சிறைகளில் அடைத்தார்கள். வட மாநிலத்தில் இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்திருக்கக்கூடிய அந்தப் பெருமைக்குரிய தலைவர்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கக்கூடிய ஜெ.பி. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படக் கூடிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் பல கொடு மைகளுக்கு அப்பொழுது ஆளாக்கப்பட்டார்.

இந்திரா காந்தி அம்மையார் எழுதிய கடிதம்!

வாஜ்பேயி கைது; அத்வானி கைது; ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் கைது செய்யப்படக் கூடிய சூழலில் தப்பித்து, பல மாதக் காலம் தலைமறைவாக வாழ்ந்தார். இப்படி பல தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டிருந்த அந்தக் காலகட்டத் தில்தான், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பொழுது, டில்லியிலிருந்து அம்மையார் இந்திரா காந்தி யினுடைய தூதுவர்களாக இரண்டு பேர் வந் தார்கள். அப்படி வந்த தூதுவர்கள் சென்னைக்கு வந்து நேராக தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து சந்திக்கிறார்கள். அப்படி சந்திக்கும் நேரத்தில், ஒரு கடிதத்தினை தரு கிறார்கள்; அந்தக் கடிதம் அம்மையார் இந்திரா காந்தி அவர்களே கையொப்பமிட்டு எழுதி அனுப்பி வைக்கப்பட்டிருக்கக்கூடிய கடிதம். அதனை வாங்கி கலைஞர் அவர்கள் படிக்கிறார்;

தமிழ் ஓவியா said...

அதில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால்,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே, நான் கொண்டு வந்திருக்கக்கூடிய நெருக்கடி நிலையை - அவசரப் பிரகடனத்தை நீங்கள் ஆதரிக்கவேண்டாம் - ஆனால், எதிர்க்கக் கூடாது; எதிர்த்தால், தமிழ்நாட்டில் உங்கள் ஆட்சி இருக்காது. அடுத்த விநாடி உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படும் என்ற வாசகத்தைப் படித்து, அதன் பிறகு கலைஞர் அவர்கள் கடிதத்தைக் கொண்டு வந்த தூதுவர் களிடம் சிரித்துக்கொண்ட சொன்னாராம்,

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா வழிவந்தவன் நான்: கலைஞர்!

நான் தந்தை பெரியார் அவர்களால், பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர் களால் உருவாக்கப்பட்டவன், வளர்க்கப்பட்டிருக் கக் கூடியவன். எனவே, இந்த அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படமாட்டேன்; ஆட்சியல்ல, நெருக்கடியை எதிர்க்கின்ற காரணத்தினால், என்னுடைய ஆட்சியல்ல, என்னுடைய உயிரே போனாலும் நான் கவலைப்படமாட்டேன் என்று வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி யனுப்பிவிட்டு, அடுத்த நாளே, சென்னை கடற்கரையில் ஒரு கூட்டத்தினைக் கூட்டி, திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான தமிழ்ப் பெருங் குடி மக்கள் அத்தனைப் பேரையும் தலைவர் கலைஞர் அவர்கள் எழுந்து நிற்க வைத்து, ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அம்மையார் இந்திரா காந்தி அவர்களே, நீங்கள் கொண்டுவந்திருக்கக்கூடிய நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்திடவேண்டும். அவசரகால பிரகடனத்தை உடனடியாக நீங்கள் ரத்து செய்யவேண்டும். கைது செய்து சிறையில் வைத்திருக்கக்கூடிய தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தை முன்மொழிய, கூடியிருந்த அத்தனைப் பேரும் அதனை வழிமொழிய, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...

தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப்பட்டது

நிறைவேற்றப்பட்ட அடுத்த விநாடி, கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது; கவிழ்க்கப்பட்ட அடுத்த விநாடி மிசா கைதிகளாக திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் உள்பட, அதேபோல், பல்வேறு தலைவர்கள், பல நண்பர்கள், ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைக் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டோம்.

அப்படி அடைக்கப்பட்டிருந்தபொழுது, அண்ணன் நம்முடைய ஆசிரியர் அவர்களோடு அருகிலிருந்து பழகக்கூடிய, அவருடைய கொள் கைகளை, அவருடைய லட்சியங்களையெல்லாம் நாங்கள் உணர்ந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு அப்பொழுது எங்களுக்குக் கிடைத்தது. நான் அதைத்தான் இப்பொழுது எண்ணிப் பார்க்கி றேன்.

என்னை உற்சாகப்படுத்தியவர், ஊக்கப்படுத்தியவர்!

அதுமட்டுமல்ல, அவர் முதல் நாளே கைது செய்யப்பட்டு சிறைக் கொட்டடியில் அடைக்கப் பட்டிருக்கிறார். நான் அடுத்த நாள்தான் கைது செய்யப்படுகிறேன். கைது செய்யப்பட்டு, இரவு 12 மணியளவில், என்னை சிறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். சிறைச்சாலை இருட்டாக இருக் கிறது. ஒரு துளி வெளிச்சம்கூட கிடையாது. அந்தச் சூழ்நிலையில் என்னைக் கொண்டு போய், சிறைக் கூடாரத்தில் இருக்கக்கூடிய கடைசி பிளாக் 9 ஆம் நம்பர் கொட்டடி; அந்தக் கொட்ட டியில் கொண்டு போய், ஒரு அறையின் கதவைத் திறந்து, என்னை உள்ளே விடுகிறார்கள். அப்படி உள்ளே போகும் வேளையில், அங்கே ஒரு ஏழு, எட்டு பேர் படுத்துக் கொண்டிருக்கிறார்கள், அது எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளே போகும் பொழுது, யாருடைய காலையோ தவறாக மிதித்து விடுகிறேன்; அப்படி நான் மிதித்தது யாருடைய கால் என்றால், நம்முடைய ஆசிரிய ருடைய கால்தான்.

அப்பொழுதே, என்னை அருகில் அமர வைத்து, வந்துவிட்டாயா, உனக்கு இது தேவை. இந்தப் பயிற்சி உனக்கு அவசியம் தேவை என்று சொல்லி, அப்பொழுதே என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். நான் அதைத் தான் இந்த நேரத்திலே எண்ணிப் பார்க்கிறேன்.

ஆசிரியர் என்று அழைக்கப்படக் கூடியவர்!

1962 ஆம் ஆண்டில், விடுதலை ஏட்டினுடைய ஆசிரியராகப் பொறுப்பேற்று, பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி பணியாற்றிய காரணத்தால்தான், எப்பொழுதுமே தலைவர் கலைஞர் அவர்களே, எல்லோரும் ஆசிரியர் என்றுதான் அழைப்பார்கள். ஆனால், இன் றைக்கும் நம்முடைய அய்யா ஆசிரியரை, ஆசிரியர், ஆசிரியர் என்றுதான் நாமும் இன்றைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

தலைவர் கலைஞர் அவர்களே சில நேரங் களில், நம்முடைய ஆசிரியர் அவர்களைப் பார்த்து, இன்றைக்கும் ஆசிரியர் என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆக, அந்த அளவிற்கு அவர் தன்னுடைய பணியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக் கிறார்கள். தந்தை பெரியாரோடு இணைந்து பணியாற்றிய நாள்கள் என் வாழ்வினுடைய வசந்தம் என்று அண்ணா அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

தந்தை பெரியாரோடு குடிஅரசு ஏட்டில் பணியாற்றியதுதான்...

அதேபோல், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரோடு குடிஅரசு ஏட்டில் பணியாற்றியதுதான் என்னுடைய குரு குலவாசம் என்று நம்முடைய கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

ஆக, வாழ்வில் வசந்தமும், குருகுல வாசமும் ஒருங்கே பெற்றவராகத்தான் இன்றைக்கு நம் முடைய ஆசிரியர் விளங்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது நாம் பெருமைப்படுகிறோம்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டுச் சொன்னார்கள், திராவிட முன் னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட் டைக் குழல் துப்பாக்கி என்று பலமுறை குறிப் பிட்டிருக்கிறார்கள்.

இரட்டைக் குழல் துப்பாக்கியாகத்தான்....

தந்தை பெரியார் வாழ்ந்த பொழும் சரி அல்லது தந்தை பெரியார் மறைந்த பொழுதும் சரி அந்த இரட்டைக் குழல் துப்பாக்கியாகத்தான் இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் நம்முடைய ஆசிரியர் அவர்கள்தான் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, ஆக, ஆசிரியர் அய்யா அவர்களை இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு அவரை வாழ்த்து கின்ற காரணத்தினால், நானும் பெருமைப்படு கிறேன், திராவிட முன்னேற்றக் கழகம் பெருமைப் படுகிறது. எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து, நேரமின்மை காரணத்தினால், இந்த அளவில் எனது உரையை நிறைவு செய்து கொள்கிறேன்.

- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உரையாற் றினார்.

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால்...!


உலகளவில் கணினிகளில் தீங்கிழைக்கும் மென்பொருள் அதிகமாகக் கொண்டுள்ள நாடு களின் பட்டியலில் இந்தியாவுக் குள்ள இடம் மூன்று.

(இதுபோன்றவற்றில் இந்தியா தானே பொதுவாக முதலிடத்தைப் பிடிக்கும். கோட்டை விட்டுவிட்டதோ!).

நாடாளுமன்றம் நேற்று கூடி யது.

(கூடியது சரி... நடக்குமா என்பதுதான் கேள்வி)

டில்லியில் தேர்தலில் இரவிலும் வாக்குப் பதிவு.

(இரவில் வந்த சுதந்திர மாயிற்றே!)

மின் கணக்கீட்டில் முறைகேடு களைத் தடுக்க ரிமோட் மீட்டர்கள்.

(பெரும்பாலோருக்கு அதிர்ச்சி (ஷாக்)யாக இருக்குமே!)

ஒரே நாளில் மூன்று இடங் களில் சென்னை மாணவர்கள் தகராறு.

(படித்துக் கிழிப்பது என்பது இதுதானோ!).

லஞ்சம் கேட்கும் அதிகாரி களைக் கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

(இலஞ்சமே ஒருவகைப் போதைதானே!).

கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் சாராய உற்பத்திக்கு எதிர்ப்பு!

(சர்க்கரை இல்லாவிட்டால் என்ன? சாராயத்தை உற்பத்தி செய்ய வேறு மார்க்கங்கள் இல்லையா, என்ன?)

மது அருந்த மாட்டோம்; போனில் பேச மாட்டோம்! - ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உறுதிமொழி!

(ஓடுற தண்ணீரில் எழுதிய எழுத்தாக இருக்கக்கூடாது!)

கடுங் குற்றங்களுக்கு எஃப்.அய்.ஆர். பதிவு கட்டாயம்.

(அப்படி எஃப்.அய்.ஆர். செய்யாத அதிகாரிகள்மீது எஃப்.அய்.ஆர். பதிவு செய்வார்களா?)

சவுதியில் தவிக்கும் 30 தமிழர்கள் இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம்!

(உலகுக்கு இளைத்தவர்கள் இந்தத் தமிழர்கள்தானே!)

தென்னக ரயில்வேக்கு ஒதுக் கீடு குறைகிறது.

(ஒழுங்காக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்கிறவர்கள் இவர்கள்தானே - அதற்குத் தண்டனை வேண்டாமா?)

ராட்சத பளு தூக்கும் லிப்ட் அறுந்து விழுந்தது - வாலிபர் பலி!

(ராட்சத பளு தூக்கியைவிட வாலிபர் கனபாடியோ!)

மின்வெட்டுக் காரணமாக தமிழ்நாட்டில் ரூ.65 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு!

(மின்வெட்டா? தமிழ்நாட்டிலா? இருக்காதே, ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் சரி செய்துவிட்டார்களே, ஹி....ஹி...)

தமிழ் ஓவியா said...


அந்தோ, தென்னாப்பிரிக்க விடுதலைச் சிங்கத்தின் குரல் ஓய்ந்துவிட்டதே!


உலகின் மனித உரிமைப் போரில் கறுப்பினத்தின் மறுக்கப்பட்ட உரிமை களுக்காக, மண்டியிடாத போர் முழக்கத்தை உரிமை முழக்கமாகச் செய்து, அதற்குரிய கடும் விலையாக 27 ஆண்டு வெஞ்சிறையில் வாடி, இருட்டினை சுவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்று, இறுதிவரை போராடி, எந்த வெள்ளை இனம் நிறத்தைக் காட்டி அதிகாரம் செய்ததோ அவர்களுக்கும் சேர்த்த அதிபராக, அமர்ந்து, தனது இயக்கத்தின் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்ட மாவீரர் நெல்சன் மண்டேலாவின் (வயது 95) மறைவு, தென்னாப்பிரிக்க மக்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள சமத்துவ, சமவாய்ப்பு, சமூகநீதிப் போராளிகள் அனைவருக்குமே இழப்பு ஆகும்!

இளைய தலைமுறைகள் இவர்தம் லட்சியத் தியாகத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும்!

நெல்சன் மண்டேலாவை வெறும் படமாகப் பார்க்காதீர்கள் இளைஞர்களே,

பாடமாகக் கொண்டு, நெல்சன் மண்டேலாவின் நெறியில் நடைபோட உறுதியேற்று, சூளுரையுங்கள்!

நெறியோடு சுதந்திரப் போர் நடத்தி, வெற்றி கண்ட அம்மனிதகுல மாணிக்கத்திற்கு எமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்



சென்னை
6.12.2013

தமிழ் ஓவியா said...


மறக்க முடியாத டிசம்பர் 6


டிசம்பர் 6 என்றால் மனித உரிமை ஆர்வலர்கள் அண்ணல் அம்பேத்கரை நினைவு கூர்வார்கள்.

சங்பரிவார் கும்பலோ பாபர் மசூதி இடிப்பு நாள் என்று மகிழ்ந்து கொண்டாடும்; உலக நாடுகள் முன் இந்தியா தலைகுனிய பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று காந்தியார் படுகொலை, இரண்டு பாபர் மசூதி இடிப்பு, மூன்று குஜராத் படுகொலைகள்.

இந்த மூன்றுக்கும் காரணமானவர்கள் இந்துத் துவா நஞ்சு கக்கும் சங்பரிவார்க் கும்பல்!

பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு பிரிட்டனும், அமெரிக்காவும் இன்றுவரை விசா கொடுக்க மறுப்பது ஏன்? அதன் பின்னணி அவமானகரமானது அல்லவா!

ஒரு பட்டப்பகலில் பல்லாயிரக்கணக்கான மத வெறியர்களை ஒன்று திரட்டி, 500 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்து நொறுக்கித் தள்ளி விட்டார்கள். அதன் மூலம் இந்தியாவின் மானம் மரியாதை எல் லாம் அடித்து நொறுக்கப்பட்டு விட்டன என்று பொருள்.

இதுகுறித்து அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணை ஆணையம் 68 பேர்கள் மீது குற்றவாளிகள் என்று பட்டியலிட்டது.

அதில் அடல் பிஹாரி வாஜ்பேயும் ஒருவர். இதில் வெட்கக் கேடு என்னவென்றால் வாஜ்பேயியை அந்தக் குற்றச்சாற்றுப் பட்டியலில் எப்படி சேர்க்கலாம் என்று கூறி நாடாளுமன்றத்தை முடக்கினார்களே அதுதான்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் எப்பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மவாதிகள் அவர்கள்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் இதே வாஜ்பேயி உ.பி. தலைநகரமான லக்னோவில் என்ன பேசினார்?

நாளைய தினம் அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள் மீது அமர்ந்து கொண்டு பஜனைப் பாடல்களைப் பாட முடி யாது. மண்ணை சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்யவேண்டும் - என்று பேசினாரே!

இதுபற்றி அவுட்லுக் நிருபர் பின்னர் வினா எழுப் பியபோது வாஜ்பேயி சொன்ன பதில் அபாயகரமானது.

நான் லக்னோவில் பேசியது உண்மைதான். அது நகைச்சுவைக்காக கூறப்பட்ட - வேடிக்கையான பேச்சு - என்றாரே பார்க்கலாம்.

500 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களுக்கான வழிபாட்டுத் தலத்தை இடிக்கச் சொன்னது வாஜ்பேயிகளுக்கு வேடிக்கையானதாம். அதன் விளைவாக நாடெங்கும் கலவரங்கள் நடை பெற்று பன்னூறு பேர்கள் கொலையுண்டது - நகைச் சுவையா!

இவர்தான் அவர்கள் கட்சியிலேயே யோக்கிய மான மனிதராம். தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார் என் வீட்டுப் பிள்ளைகளிலேயே மிகவும் நல்லவன் - அதோ கூரை மீது ஏறிக் கொள்ளி வைக்கிறானே அவன்தான்! என்றானாம் ஒருவன். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளி அதற்குப்பின் இந்தியாவில் துணைப் பிரதமராகக் கூட (எல்.கே.அத்வானி) வந்துவிட்டார். இன்னொருவர் முரளி மனோகர் ஜோஷி; அவர் இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறை (கல்வி) அமைச்சகராகவே வந்து விட்டார்.
இவர்கள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்கு களும் சாதாரணமானவையல்ல. இந்தியன் குற்ற வியல் சட்டம் 147, 153(ஜெ), 153(பி) மற்றும் 505 பிரிவுகள்; கலகம் விளைவித்தல், மக்களிடையே குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோத மாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் துணிதல், பிரிவினை உண்டாக்கும் என்ற குற்றங்கள் இதில் அடங்கும்.

21 ஆண்டுகள் ஓடிவிட்டன; ஆனாலும் பெரிய மனிதர்களாக பெரிய பதவிக்காரர்களாக இவர்கள் நாட்டில் ராஜ நடை போட்டுத் திரிகிறார்களே, எப்படி?

இதில் குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று - பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பாபர் மசூதி இடிப்புக் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

இந்துக்கள் ஆண்மையுள்ளவர்கள்; பேடிகள் அல்லர் என்று நிரூபித்து விட்டார்களாம்.
இந்தத் தன்மை உள்ளவர்களின் கைகளில் ஆட்சி சென்றால் நாடு என்னவாகும்? சுடுகாடாகும்- எச்சரிக்கை!

பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழக பொதுக் குழுவும், தலைமைச் செயற் குழுவும் பலமுறை தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளன என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வும் விரும்புகிறோம்.

தமிழ் ஓவியா said...


மனிதக் கொடுமை

தன் இனத்தையே அடிமைப்படுத்தி, அதைக் கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்து வருகின்றது.
(உண்மை, 15.5.1977)

தமிழ் ஓவியா said...


கலைவாணர் பற்றி பெரியார்


புராணம், மோட்சம், நரகம், சாஸ்திரம், கடவுள்கள் ஆகியவை பற்றிய அபிப்பிராயங்கள் மக்கள் உயிரோடு கலந்தும், வாழ்வோடு கலந்தும், மதத்தோடு கலந்தும் பலவிதமான ஸ்தாபனங்களோடு செல்வாக்காய் பத்திரமாய் அனேக காவலாளிகளோடு இருப்பதை வெறுக்கும்படியாக சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் படியில் - அதுவும் இதைப் பார்க் கவும் கேட்கவும் பணங்கொடுத்து விட்டு வந்து பகலும் இரவும் காத்துக்கிடக்கும்படியாகச் செய்து வருகிறார் என்.எஸ். கிருஷ்ணன்.

சாகும்வரை செய்துகொண் டே இருக்கப் போகிறார் என்றால் இதைவிட ஒரு புரட்சி வீரனை நாம் எங்கு காணமுடியும்? வேறு எத்தனை பேர்தான் இருக் கிறார்கள்? நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்ப்போம்.

(பேராசிரியர் அன்புக் கொடி நல்லதம்பி எழுதிய சிரிப்பில் மலர்ந்த சிந்தனை மலர்கள் என்ற நூலிலிருந்து....)

தமிழ் ஓவியா said...


பிறப்பில் தீண்டாமை கருதலாமா?


தீண்டாதாரிடையே ஒழுக்கமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடையரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன்.

தீண்டாதார் என்று சொல்லப்படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதாரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண்டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

-திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

தமிழ் ஓவியா said...


மூன்று ஆண்டுகளுக்குள் சிறுகனூரில் பெரியார் சிலை அமையும் விடுதலை வாசகர் வட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு


மதுரை, டிச. 6- மதுரையில் விடுதலை வாசகர் வட்டம் முதலாம் ஆண்டு விழா மாட் டுத்தாவணி பேருந்து நிலை யத்தின் எதிரில் உள்ள செய் தியாளர் அரங்கத்தில் 5.12.2013 அன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழின எழுச்சிப் பாடகர் இளைய இசைமுரசு இராசா முகமதுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று விடுதலை வாசகர் வட்டத் துணைத் தலைவர் ச.பால்ராஜ் உரையாற்றினார்.

விடுதலை வாசகர் வட்டத் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பொ.நடராசன் தலைமை உரை நிகழ்த்தினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, மதுரை செல்வம், எஸ்.முனிய சாமி, மா.பவுன்ராசா, க.அழகர், அ.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட முன்னேற்ற கழக பேச்சாளர் துரை.எழில்விழியன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் முனைவர் நம்.சீனிவாசன், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோ ரது வாழ்த்துரைக்கு பின்னர் இந்துத்துவா நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் தமி ழர் தலைவர் உரையாற்றினார்.

மாமுத்து மகள் பெரியார் பிஞ்சு சர்மதி கடவுள் மறுப்பு

அவர் தமது உரையில் நேர நெருக்கடியைப் பற்றி சொன் னார்கள். நெருக்கடி காலத்தையே (Emergency Period) சமாளித்த வர்கள் நாங்கள். இந்த நேர நெருக்கடி காலத்தையும் சமா ளிப்போம். பெரியார் உலகத் தைப் பற்றி சொல்லும்போது எங்களின் உயரம் பற்றி துரை. எழில்விழியன் குறிப்பிட்டார்.

நான் உயரமானவன் அல்ல. உயரம் குறைவானவன். ஆயிரக் கணக்கான பெரியார் தொண் டர்களின் உயரத்தால் நான் உயர்வாக நிற்கின்றேன். அதற் கும் மேலாக தந்தை பெரியாரின் தோள்களுக்கு மேலாக நிற்ப தால் நான் உயரமாக இருக்கி றேன். தந்தை பெரியாரின் தன் னலமற்ற உழைப்பால் தியாகத் தால் அவர்களின் தோள்களுக்கு மேலாக இருக்கக் கூடிய நாங் கள் உயரமாக இருக்கின்றோம்.

தமிழின எழுச்சிப் பாடகர் இளைய இசைமுரசு இராசா முகம்மதுவின் இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது

பெரியார் உலகம் என்பது 15 ஆண்டுகால திட்டம். ஆனால் மூன்று மூன்று ஆண்டுகளாக வேலை நடைபெறும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பெரி யார் சிலை அமையும். பெரியார் உலகம் முடியும்போது உள்ளே சென்று வெளியே வருபவர்கள் ஒரு விழிப்புணர்வைப் பெறு வார்கள் அறிவியல் மனப்பான் மையைப் பெறுவார்கள். அவர் களுக்கு மிகப்பெரிய தெளிவு ஏற்படும்.

இந்துத்துவா என்பது நேற்று கொடுமையான சட்டங்களால் ஆனது. பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று ஆனது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனர்கள் ஏமாற்றிய விதத்தை ஆதாரங்க ளோடு எடுத்துரைத்தார். சூத்திர னுக்கு எது கொடுத்தாலும் கல் வியைக் கொடுக்காதே என்பது நேற்றைய இந்துத்துவா.

இன்று ஊடகங்களில் இணைய தளங்களில் கோய பல்ஸ் பிரச்சாரம் செய்கிறார் கள். மோடி வந்தால் அனைத் தும் மாறிவிடும் என்கிறார்கள். 2002 கோத்ரா சம்பவம் அதற் குப் பிறகு நடைபெறும் தொடர்ச் சியான சம்பவங்கள் மோடி யார் என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள் ளது. ஆனால் ஏதோ வெளிநாட் டில் உள்ள பேருந்து நிலை யத்தை போட்டு அது குஜராத் தில் உள்ளது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதைப் போன்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பதவிக்கு வரத்துடிக்கின் றார்கள். இவர்கள் வரமாட் டார்கள். ஆனால் நாளை இவர் கள் வந்தால் பழைய மனுதர்ம ஆட்சி மறுபடியும் வரும். ஜாதி அடிப்படையிலான வேலைக்கு கட்டாயப்படுத்தப் படுவோம்; அண்ணல் அம்பேத் கர் குறிப்பிட்ட சமமில்லாத பாகுபாடு என்பதுதான் அவர் களுடைய அடிப்படை தத்து வம்.

வர்ணதருமத்தை நியாயப் படுத்துவார்கள்; அதைப்புகுத் துவார்கள் எனக் குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸினுடைய அதிகா ரப்பூர்வ புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி விளக் கினார். இந்துத்துவாக்களின் அபா யத்தை உணர்வோம் என்று குறிப்பிட்டு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

நிறைவாக விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ.முருகா னந்தம் நன்றி கூறினார். நிகழ்ச்சி யின் துவக்கத்தில் பெரியார் பிஞ்சு கடவுள் மறுப்பு கூறியது அனைவரையும் வியக்கவைத்தது. விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பெரி.காளியப்பன், வழக்குரைஞர் ந.தமிழ்மணி, விடுதலை ராதா, பொ.தனராசு, வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், இரா.வே.சுசீலா, மு.கனி, திருமதி மோகனா வீரமணி, ஆசிரியர் இராமசாமி மற்றும் ஏராளமா னோர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சிருங்கேரியார்?


சிருங்கேரி மடம்பற்றி ஒரு நூல் வெளி வந்துள் ளது. நூலின் பெயர் - சிருங்கேரி மடம் - ஓர் ஆய்வு; அதன் ஆசிரியர் முனைவர் இரா. இரா ஜேஸ்வரன்.

இந்த நூலைப்பற்றி கல்கி இதழ் (25.11.2013) நூல் அறிமுகம் என்ற பகுதியில் மதிப்புரை எழுதியுள்ளது.

வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என்று குறிப்பிடப்பட் டுள்ள அதில் காஞ்சி மடம்பற்றி குறிப்பேதும் இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்....

ஓர் அற்புதத்தை அவர் மீது ஏற்றிக் கூறுகிறது இந்நூல்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ப்ளேக் என் னும் ஆட்கொல்லி நோய் பரவியபோது, சிறீ சச்சி தானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் ஏதாவந்தம் ஸமயம் ஸர்வாபத் பயோசபி ரக்ஷ ணம் க்ருத்வா... என்று தொடங்கும் துர்காஸ் தவம் ஸ்லோகத்தை மனமுருகிப் பாடி நோய்ப் பரவாமல் காத்தார் என் றும் எழுதுகிறார் இந்த ஆய்வாளர்; நல்ல நூல் என்று குறிப்பிட்டுள்ளது கல்கி இதழ்.

ப்ளேக் என்னும் நோய்க்குக் காரணம் ஒரு வகைக் கிருமி. அதனைக் குணப்படுத்துவதற்கென அறிவியல் முறையில் மருத்துவம் உண்டு.

ஒரு சுலோகத்தை மன முருகிப் பாடி சங்க ராச்சாரியார் விரட்டினார் என்றால் அது எப்படி? என்ன நிரூபணம்? ஊருக் குள்ளேயே வரவிடாமல் விரட்டி விட்டாராமே?

சுலோகத்தால் இது போன்று நோய்களை விரட்ட முடியுமென்றால் கருநாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனை களை யெல்லாம் இழுத்து மூடிவிடலாமே!

இந்தியா முழுமையும் இவரைச் சுற்றுப் பயணம் செய்யச் சொல்லி அல் லது காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் சுலோகத்தைச் சொல்லச் சொல்லி நோய் களை விரட்டலாம் அல் லவா!

ஆனால் இது போன்ற அற்புதங்களையெல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வதில்லை.

கொல்கத்தாவில் சந்திரசேகரேந்திர சரஸ் வதி தங்கி இருந்தபோது மந்திர மாயாஜாலங்கள் பற்றி செய்தியாளர் ஒரு வர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:

மந்திரங்கள், மாயா ஜாலங்கள் மதத் துறை யைப் பிடித்த ஒரு சாபக்கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும், தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்க ளாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகள் கொண்டதல்ல (23.10.1974 செய்தி ஏடுகளில் வெளி வந்தது) என்றாரே - கல்கி என்ன சொல்லு கிறது?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

நெல்சன் மண்டேலா மறைவிற்கு இரங்கல் தீர்மானம்!

6.12.2013 வெள்ளி மாலை, சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்ற தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் வருமாறு: தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து அமைதி தவழும் முறையில் தொடர் போராட்டங்களை நடத்தி, அதன் காரணமாக 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவரும், அதன் விளைவாக தென்னாப்பிரிக்காவில் மனித உரிமையை நிலைநாட்டி, ஆட்சித் தலைவராக விளங்கியவரும், மனித குல வரலாற்றில் மிகச் சிறந்த மனித உரிமைப் போராளியாக நிலை பெற்றவருமான நெல்சன் மண்டேலா (வயது 95)வின் மறைவிற்கு (5.12.2013) இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மனித குலத்திற்கு அவர் ஆற்றிய அரும்பெரும் தொண்டிற்கு வீர வணக்கத்தையும் செலுத்துகிறது.

(அனைவரும் எழுந்து நின்று இரு மணித்துளிகள் அமைதி காத்தனர்!)

தமிழ் ஓவியா said...


மதச் சார்பின்மை பற்றிய மதி விளக்கம்!


நாட்டு மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. 77 சதவீத மக்களின், நாள் வருமானம் 20 ரூபாய் என்று கூறப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் குந்த குடிசைகூட இல்லாத மக்கள் 30 லட்சம் பேர் என்பது இன்னொரு புள்ளி விவரம்.

இன்னும் வறுமைக்கோடு பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம். இதைப்பற்றியெல்லாம் பாரதீய ஜனதா கட்சிக்குக் கவலையில்லை; அவர்களின் எண்ண மெல்லாம் அடுத்த மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பது, இடித்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவது என்பதுதான்.

சென்னையில் நேற்று (6.12.2013) தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழக மூதறிஞர் குழுத் தலைவருமான நீதியரசர் திரு எஸ். மோகன், திரு மணிசங்கர அய்யர் எம்.பி., ஆகியோர் இந்தியாவில் மதச் சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்கள் பற்றி சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லுகிறவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையை எப்படிக் காப்பாற்றுவார்கள் என்ற வினாவை எழுப்பினர்.

மக்கள் தொகையில் 85 சதவீதத்தினர் இந் துக்கள் மற்ற 15 சதவீதத்தினர் வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இந்து ராஜ்ஜியத்தை அமைத்தால் மீதி 15 சதவீத மக்களின் நிலை என்ன? ஆட்சி அதி காரத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன? பாதுகாப்பு என்ன? என்ற வினாக்களும் எழுப்பப்பட்டன.

பாகிஸ்தான் பிரிந்தபோது - இந்தியாவில் உள்ள முசுலிம்கள் பாகிஸ்தான் பகுதிக்குச் செல்ல விரும்பினால் தாராளமாகச் செல்லலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது. சென்றவர்கள் போக மீதி உள்ளவர்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டார்கள். உலகில் இந்தோனேசியாவை அடுத்து அதிக முசுலீம் மக்கள் வாழும் நாடு இந்தியா, அடுத்துதான் பாகிஸ்தான்.

சுதந்திரத்திற்குப்பின் பாகிஸ்தானுக்குச் செல்ல அவர்களுக்கு வாய்ப்பு இருந்தும், அங்கே செல்ல விரும்பாமல் இந்தியாவிலேயே தங்கினார்களே - அவர்களின் உணர்வினை மதிக்க வேண்டாமா? பாராட்ட வேண்டாமா? என்ற வினாவும் சிறப்புக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது.
இன்னொரு தகவல், திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் முன் வைக்கப்பட்டது. இந்தியாவில் வாழும் அந்த முசுலீம்கள்கூட, அரேபியாவிலிருந்து வந்தவர்கள் அல்லர்; கிறித்தவர்கள் இசுரேலிலி ருந்தும் வந்தவர்கள் அல்லர்.

இந்து மதத்தில் இருந்த அவர்களை வேற்று மதங்களுக்கு விரட்டியவர்கள் யார்? இந்து மத - வருணாசிர வெறியர்கள்தானே! கிட்டே வராதே! என்றாய், தொடதே என்றாய், தீண்டத்தகாதவன் என்றாய், தீட்டு! என்றாய். மற்ற மதக்காரர்களோ அவர்களைத் தீண்டினார்கள், கட்டியணைத்தார்கள் தழுவினார்கள்.

தங்களைச் சக மனிதர்களாக மதித்தவர்களின் மதங்களின் பக்கம் அவர்கள் சென்றார்கள். அது, அவர்கள் மீது குற்றமா? என்ற அறிவுப் பூர்வமான கருத்து எடுத்து வைக்கப்பட்டது.

தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

இந்துவாக இருந்தால் தேசியவாதியாக இருக்க முடியுமா? தேசியவாதியாக இருந்தால் இந்துவாக இருக்க முடியுமா? இந்தியாவா? இந்துவா? என்ற வினாக்களை எடுத்து வைத்தார் திராவிடர் கழகத் தலைவர்.

ஒரு மதத்தைச் சேர்ந்த ஆட்சியாக இருந்தால் பாகிஸ்தானில் இப்பொழுது நடக்கும் குழப்பமும், அமைதியின்மையும்தான் மிஞ்சும். இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொண்டு இருப்பதுதான் என்றார் திரு மணிசங்கர அய்யர் அவர்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் வெளிப்பட்ட கருத்துக்கள் நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டியவை! மதச் சார்பற்ற சக்திகள் இணைந்து செயல்படட்டும்!

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.
(விடுதலை, 12.10.1967)

தமிழ் ஓவியா said...


மக்கள் நீதிமன்றம்


நாடு தழுவிய லோக் அதாலத் என்னும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் அமைப்பின் மூலமாக நிலுவையிலுள்ள தேங்கிக்கிடக்கும் வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற அரிய நோக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பி.சதாசிவம் மேற்கொண்ட நடவடிக்கையை கருநாடகத் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி வரவேற்கிறது. வாகன விபத்துகளில் இழப்பீடு வழங்குதல், வங்கி செக் வழங்குதலில் மோசடி வழக்குகள், வங்கிகளில் கடன் பெற்றோர் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், சொத்துகள் தொடர்பான சிவில் நடமுறை வழக்குகள் மற்றும் சமூக சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க் கையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற் படும் மன முறிவு வழக்குகள் போன்றவற்றை இரு தரப்பினரையும் நேருக்கு நேர் அழைத்து காலம் கடத்தாது பேச்சு வார்த்தைகளின் மூலமாக பேசி தீர்வு காணும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஒரே நாளில் 39 லட்சம் வழக்குகளில் முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்றங்களின் விரைவு நடவடிக்கை பாராட்டி வரவேற்கிறது.

ஆற்றலாளரும், சமூக அக்கறையாளரும் ஆட்சி அதிகாரப் பொறுப்புக்கு வந்தால்தான் குறிஞ்சிப்பூ பூப்பது போன்ற அதிசயம் நிகழும். அந்த வகையில் நாடு தழுவிய அளவில் நீதித்துறையில் அரிய செயல்புரிந்த உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிதேவன் மாட்சிமைத் தாங்கிய அய்யா பி.சதாசிவம் அவர்களை கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி மகிழ்ந்து, இந்நிகழ்வினை வரவேற்கிறோம்.

- எம். ஜானகிராமன், தலைவர், கர்நாடக மாநில திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


என் வாழ்நாளில் நீக்கமற நிறைந்திருக்கும் முதல் நிகழ்ச்சி தந்தை பெரியார் - அறிஞர் அண்ணாவின் சந்திப்புத்தான்



முத்தமிழ் அறிஞர் கலைஞர்

சென்னை, டிச. 7 - என் வாழ்நாளில் நீக்கமற நிறைந்திருக்கும் நிகழ்ச்சி என்பது முதன்முதலில் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் சந்தித்தது தான் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள். நியஸ் சைரன் வார இதழுக்கு கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி :- தங்களது நீண்ட வாழ்வில் முதன்முதலாக நினைவில் பதிந்த நிகழ்ச்சி எது என்று நினைவலைகளில் தேடிச் சொல்ல முடியுமா?

கலைஞர் :- தந்தை பெரியார் அவர்களையும், பேரறிஞர் அண்ணா அவர்களையும் முதன் முதலாக நான் சந்தித்த நிகழ்ச்சிதான் என் நினைவில் என்றென்றும் நீக்கமற நிறைந் திருக்கும் நிகழ்ச்சியாகும்.

கேள்வி :- பகுத்தறிவுவாதியாக தங்களை மாற்றியது எது?

கலைஞர் :- சிறு வயதில் பள்ளிக்கூடம் போவது மட்டுமின்றி, இசைக் கல்விக்கும் என் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இசைப் பயிற்சியில் எனக்கு நாட்டம் செல்லவில்லை. பெரிய மனிதர்கள் இருக்குமிடத்தில் சட்டை போட்டுக் கொண்டு போக முடியாது. மேல் துண்டையும் எடுத்து இடுப்பிலே கட்டிக் கொள்ள வேண்டும். செருப்பு அணிந்து கொள்வதும் தவறு. இப்படியெல்லாம் கடுமையான அடிமைத்தனம்; தெய்வீகத்தின் பெயராலும், ஜாதி, மத, சாத்திரச் சம்பிரதாயங்களின் பெயராலும் ஒரு சமுதாயத் தைக் கொடுமைக்கு ஆளாக்குவதை என் பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியது. அதன் காரணமாகவே இசைப் பயிற்சியை வெறுத்தேன். இதுவே என்னை ஒரு பகுத்தறிவுவாதியாக அந்த வயதிலேயே மாற்றியது.

கேள்வி :- நண்பர்களுடன் கூடி கலாட்டா செய்த அனுபவம் உண்டா?

கலைஞர் :- கலாட்டா என்று கூற முடியாது. சிறு வயதிலேயே நண்பர்களுடன் இணைந்து ஈடுபட்ட சம்பவம் ஒன்றை வேண்டுமானால் கூறுகிறேன். ஏற்கனவே கூறியதுதான். கிருபானந்த வாரியார் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஆத்தீகப் பழம். அப்படிப் பட்டவர் நான் இளைஞனாக, பள்ளி மாணவனாக இருந்த போது அடிக்கடி திருவாரூருக்கு வருவார். திருவாரூரில் ஆலயத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் அவருடைய நிகழ்ச்சி நடைபெறும். ஒரு முறை அப்பர் திருவிழாவிற்காகப் பேச வந்திருந்தார். நாங்கள் மாணவர்கள் எல்லாம் என் தலைமையிலே சென்று அங்கே அமர்ந்திருந்தோம். பேசும்போது அவர் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசினார். அப்பர் திருநாள் என்பதால் புலால் சாப்பிடக் கூடாது, உயிர்களைக் கொல்லக்கூடாது என்று அவர் பேசிக் கொண்டு வரும்போதே, நான் எழுந்து - மனிதர்களுக்கு நீங்கள் இந்த உபதேசத்தைச் செய்கிறீர்கள். இது எல்லா உயிர்களுக்கும் பொது வானதா? என்று கேட்ட போது அவர் ஆமாம் என்று சொன்னார். சாப்பிடுவதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை, ஆடு - மாடு - கோழி போன்றவைகளையெல்லாம் சாப்பிடுவதற்காக ஆண்டவன் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து - சிங்கம், புலி சாப்பிடுவதற்காக ஆண்டவன் எந்த உயிரைப் படைத்தான்? என்று கேட்டேன். அவ்வளவு பெரிய அவையிலே ஒரு சின்னப் பையன் எழுந்து அப்படிக் கேட்டது தவறுதான். ஆனால் கேட்ட கேள்வியிலே இருந்த தத்துவம் தவறானது அல்ல. அதைப் புரிந்து கொண்ட வாரியார் அவர்கள், உட்கார், உட்கார் பிறகு சொல்கிறேன் என்று முதலில் சொல்லி விட்டு - பிறகு கூறும்போது, அந்த உயிர்கள் வாழ்வதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை என்று சொன்னேன், சில குறும்புக் கார பையன்கள் குறுக்கிட்டு ஏதோ கேட்டு விட் டார்கள். அவர்கள் எல்லாம் வேறு ஆட்கள் என்பது எனக்குத் தெரியும், அதனால் நான் பதில் சொல்ல வில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு சொன்னார்.

தாவரங்களிலே முருங்கைக்காய், கத்தரிக்காய் என்றெல்லாம் இருக்கிறது, தாவரங்களைச் சாப் பிட்டால் உயிருக்கு ஆபத்து இல்லையா என்றுகூட பையன் கேட்பான். அப்படி தாவரங்களைச் சாப் பிடுவதால் உயிர்களுக்கு ஆபத்தில்லை. ஏனென்றால் முருங்கைக்காயைச் சாப்பிடுவதால் மரம் சாகாது, கத்தரிக்காயை சாப்பிடுவதால் செடி சாகாது, ஆகவே அது பாவம் இல்லை என்றார். நான் விடவில்லை, எழுந்து அய்யா, கீரைத் தண்டை அப்படியே பிடுங்கி, அடியோடு குழம்பு வைத்துச் சாப்பிடுகிறார்களே; அப்போது செடி முழுதும் சாகவில்லையா என்று கேட்டேன். அப்போது அப்படிக் கேட்டாலும் நான் கிருபானந்த வாரியார் மீது கொண்ட ஆழமான மதிப்பை எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை. இப்போதும் மாற்றிக் கொள்ளவில்லை, இனியும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

தமிழ் ஓவியா said...


இயக்க வரலாற்றில் தஞ்சைக்குள்ள சிறப்பு


தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங்

தஞ்சை, டிச.7- தஞ்சாவூரில் வர லாற்றுச் சிறப்பு மிக்க கழக நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்றுள்ளன. பெரியார் உலகம் நிகழ்ச்சிக்கு ஆயிரம் சவரன் தங்கம் வழங்கும் விழாவும், இங்கு நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது என்றார் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, பெரியார் பேருருவச் சிலைக்கு நிதி வழங்கும் விழாவின்போது (2.12.2013) தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை:

வரலாற்றுச் சிறப்புமிக்க முப்பெரும் விழாக்களின் தலைவர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களே! தந்தை பெரியாரை இழந்த மானுடம் பெரும் ஆறுதல் பெறுவது இவரிடம் என்று சொல்லத்தக்க வண்ணம் - பெரியார் உலகைக் காண நாளும் உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய விழா நாயகர் தமிழர் தலைவர் அவர்களே! விரைவில் இங்கு வருகை தரவிருக்கும் திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களே! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தமிழ் மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களே! திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப.வீரபாண் டியன் அவர்களே!

தந்தை பெரியார் அவர்கள் கருத்துக் களை ஒடியா மொழியில் மொழி பெயர்த்த - பல்கலைக்கழக பேரா சிரியர், ஒடிசா மாநில பகுத் தறிவாளர் கழகத் தலைவர் தானேஸ்வர் சாகு அவர் களே! திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், மேனாள் அமைச்சருமான மானமிகு கோ.சி.மணி அவர்களே! நூல்களை வெளியிட்டுப் பெருமை சேர்க்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் மானமிகு எஸ்.எஸ். பழனி மாணிக்கம் அவர்களே! மூத்த வழக் குரைஞர் தஞ்சை அ.இராமமூர்த்தி அவர்களே, மேனாள் அமைச்சரும் தஞ்சை நகர திமுக செயலாளருமான மானமிகு எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களே! பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் - இந்த விழா விற்காக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே! பெரியார் பன்னாட்டு மய்யத் தின் துபாய்க் கிளை துணைத் தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்களே! அறிமுகவுரை ஆற்றவரும் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே! தொடக்கவுரை ஆற்றவிருக்கும் முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரி கோ.தங்கராஜ் அவர்களே! விழாவிற்கு முன்னிலை வகிக்கக்கூடிய கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களே! செய லவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே! பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திர சேகரன், வீ.அன்புராஜ், தஞ்சை இரா. செயக்குமார், உரத்தநாடு இரா.குண சேகரன் ஆகிய தோழர்களே! அமைப்புச் செயலாளர் களே, இளை ஞரணி, மாணவரணி, மகளிரணி, தொழி லாளர் அணி மற்றும் மண்டல மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே! தலைமைச் செயற்குழு உறுப்பினர்களே! நன்றி யுரையாற்ற விருக்கும் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டி ருக்கும் டாக்டர் க.அன்பழகன் அவர்களே! வெள்ளம் போல கூடி யிருக்கும் தமிழ்ப் பெருமக்களே, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருக்கக் கூடிய கழகக் குடும்பத்தினரே!

உங்கள் அனைவருக்கும் மண்டல, மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அன்புகனிந்த நல்வரவேற்பையும் வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சைக்குள்ள தனிச்சிறப்பு

1957இல் தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள் அளிக்கப்பட்ட இதே தஞ்சையில்தான்! பெரியார் நூற்றாண்டு விழவில் 100 சவரன் தங்கத்தை இதே தஞ்சையில் தான் அளித்தோம். அது பெரியார் நூற்றாண்டு விழா பாலிடெக்னிக்காக ஒளி வீசித் திகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

இதே தஞ்சையில்தான் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் அளிக்கப்பட்டது. அது இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பெரியார் மய்யமாகப் பட்டொளி வீசிக் கொண் டிருக்கிறது.

தமிழர் தலைவர் அவர்களின் இந்த பிறந்த நாள் விழாவில் முதல் தவணையாக ஆயிரம் சவரன் தங்கத்துக்கான நிதியை அளிக்க இருக்கிறோம்.

அது பெரியார் உலகமாக - அங்கே 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச் சிலையாக நின்று உலகத் திற்கே புத்தொளிப் பரப்பும் பகுத்தறிவு பகலவனாக காட்சி அளிக்கப் போகிறார்.

பெரியார் உலகத்தை சிறுகனூரில் தமிழர் தலைவர் தலைமையில் நிறுவப் போகிறோம். அதற்கான அச்சார விழா வரலாற்றில் என்றென்றும் பதிவாகும் விழா இது.
அத்தகைய விழாவினை தஞ்சையில் நடத்திட சிறப்பான வாய்ப்பினைக் கொடுத்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, அனைவரையும் வருக வருக என மீண்டும் வரவேற்று விடைபெறுகிறேன்.

தமிழ் ஓவியா said...


மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள்


தமிழக மூதறிஞர் குழு சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கூட்டம்

மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள்

நீதியரசர் எஸ்.மோகன், மணிசங்கர் அய்யர் எம்.பி., தமிழர் தலைவர் உரையாற்றினர்


சென்னை, டிச.7- தமிழக மூதறிஞர் குழு சார்பில் நேற்று (6.12.2013) சென்னை பெரியார் திடலில், அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள் என்ற தலைப்பில் நீதியரசர் எஸ்.மோகன், எம்.பி. மணி சங்கர்அய்யர், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டம் நேற்று (6.12.2013) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டமாக மாலை 6.45 மணியளவில் நடைபெற்றது.

நெல்சன் மண்டேலாவிற்கு
இரங்கல் தெரிவிக்கப்பட்டது

இக்கூட்டத்தின் தொடக்கத்தில், மறைவுற்ற கறுப்பினத்தின் உரிமைப் போராளி நெல்சன் மண்டேலா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் அதன் செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ் ஜோதி இரங்கல் அறிக்கையை வாசித்தார். பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்தனர்.

மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்கள்

இதைத் தொடர்ந்து மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழக மூதறிஞர் குழுவின் துணைத் தலைவர் வரியியல் அறிஞர் எஸ்.ராஜரத்தினம் அவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். தமிழக மூதறிஞர் குழுவின் தலைவரும், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான எஸ்.மோகன் அவர்கள் உரையாற்றுகையில், இந்தியா ஒரு சிறந்த மதச்சார்பற்ற நாடு என்ற பெயர் வரவேண்டும் என்றால் தந்தை பெரியார் அவர் களின் கருத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய, காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த திரு.மணி சங்கர் அய்யர் எம்.பி., அவர்கள், நாட்டின் அடையாளத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் தற்போது ஆபத்து ஏற் பட்டுள்ளதை பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்து ரைத்தார்.

நிறைவுரையாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை நிகழ்த்தினார். தமிழக மூதறிஞர் குழுவின் செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி நன்றி கூறினார்.

மணிசங்கர் அய்யர் எம்.பி.க்கு
சிறப்பு செய்யப்பட்டது

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாக உரை யாற்றிய திரு. மணிசங்கர் அய்யர் எம்.பி., அவர் களுக்கு,தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் அதன் தலைவர் நீதியரசர் எஸ்.மோகன், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் சால்வை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கி சிறப்பித்தனர்.

தமிழர் தலைவருக்கு மணிசங்கர் அய்யர் சிறப்பு

81ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுக்கு, திரு. மணிசங்கர் அய்யர் எம்.பி., அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்து, சிறப்பித்தார்.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன் (காங்கிரஸ்), தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வ நாதன், வழக்குரைஞர் வீரமர்த்தினி, முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் மற்றும் கல்வியாளர்கள், கழகத் தோழர் - தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

யார் பொய்யர்?

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர், ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் வீட்டில், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளின் தேவதாசிகளின் தீர்மானம் விஷயமாய்ப் பேசிக் கொண் டிக்கும்போது, கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளைப் பற்றியும், மற்றும் பல விஷயங்களைப்பற்றியும் பேசிய பேச்சுக்களை இல்லை என்று மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு பத்திரிகை, அய்யர் சொன்னதாக குறிப்பிட்ட விஷயங்களை ருஜுப்படுத்து வதாக பந்தயம் கூறிற்று. அய்யர் அடங்கிவிட்டார். ஸ்ரீமதி முத்து லட்சுமி அம்மாளும், அய்யர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரீ களைப்பற்றி பேசியதும், மற்றும் தமிழ்நாடு பத்திரிகையில் கண்ட விஷயங்களும் உண்மை யென்று ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் அவர்களும் மேலொப்பம் இட்டிருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாடு நிருபர், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள், ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் ஆகிய இம்மூவர்கள் சொல்வது பொய்யா அல்லது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் சொல்வது பொய்யா என்பதை உணர பொது ஜனங்கள் ஆவலாயிருப்பார்கள்.

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் இதற்குமுன் எத்தனையோ தடவைகளில் பொய்யர் பட்டம் வாங்கி தேறியிருக்கின்றார். அல்லாமலும், தமிழ்நாடு பந்தயம் கூறினபிறகும், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அய்யரின் யோக்கியதையை வெளிப் படுத்திய பிறகும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி உலர்ந்த மாமிசம் திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் பேசாமல் இருப்பதால், அய்யர்தான் பேசிவிட்டு இப்போது இல்லை என்று சொல்லுகின்றார் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க நியாயமில்லை. இம்மாதிரி அடிக்கடி பேசிவிட்டு இல்லை என்று சொல்லிக் கொண்டே வருவதைவிட கண்ணியமாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தால் அது மிகுதியும் நன்மையாயிருந்திருக்கும். இப்போது பேசிய குற்றமொன்று, அதை மறுத்து இல்லையென்று பொய் சொல்லும் குற்றம் ஒன்று. ஆக இரண்டு குற்றத்தைச் சுமந்திருக்கிறார். இவர்தான் இந்திய அரசியல் கட்சியின் தலைவருள் பிரதானமானவராம். கவர்னருக்கும், சட்டமெம்பருக்கும் மந்திரிக்கும் அந்தரங்க விசுவாசியாம்.
- குடிஅரசு - கட்டுரை - 20-11-1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பன சூழ்ச்சி

நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள், நாட்டில் தங்களுக்கும், இக்காரியத்திற்கும் ஆதரவு இல்லையென்பது தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்கள் பெயரை வைத்துக்கொண்டு வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இது காங்கிரசின் போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங்களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்துவிட்டால், நாளைக்குப் பார்ப்பனக் கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக் கிரகத்திற்கும், ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரியமென்றுமே சொல்லுவோம். இனியும், எத்தனை நாளைக்குத் தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும், ஏமாற்றமும் செய்யக் கூடுமென்பதையும், இக்கூட்டத்திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவிசெய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக.

- குடிஅரசு - கட்டுரை - 13.11.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பன சூழ்ச்சி

நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள், நாட்டில் தங்களுக்கும், இக்காரியத்திற்கும் ஆதரவு இல்லையென்பது தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்கள் பெயரை வைத்துக்கொண்டு வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இது காங்கிரசின் போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங்களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்துவிட்டால், நாளைக்குப் பார்ப்பனக் கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக் கிரகத்திற்கும், ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரியமென்றுமே சொல்லுவோம். இனியும், எத்தனை நாளைக்குத் தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும், ஏமாற்றமும் செய்யக் கூடுமென்பதையும், இக்கூட்டத்திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவிசெய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக.

- குடிஅரசு - கட்டுரை - 13.11.1927

தமிழ் ஓவியா said...

சந்தேகம் உறுதியாய்விட்டது

ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு அம்மாள், பார்வதி அம்மாள் ஆகிய இரு பெண்கள் பேரால், பொட்டுக்கட்டும் வழக்கத்தை நிறுத்துவதால் தங்கள் சமூகத்திற்குக் கேடு வரும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களது மசோதாவுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்ய வந்த காரியங்களை நாம் பார்த்த உடனேயே, இக்காரியங்கள் அவர்களால் நடைபெறுவதல்ல என்றும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு கூட்டம் ஆள்கள் இருந்து செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகப்பட்டோம். அப்படி சந்தேகப்பட்டது சரி என்று மெய்ப்பிக்க இப்போது ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. என்னவென்றால், சுயராஜ்ஜிய கட்சி உயிர் நிலையான ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அவர்கள் சுயராஜ்ஜியக் கட்சி தலைவர் வீட்டில் பேசியபோது குறிப்பிட்ட வாசகங்களிலிருந்தே ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கூட்டத்தாருடைய தூண்டுதலாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்ப இடமேற்படுகிறது. ஆதலால் இம்மாதிரி ஆட்சேபங்களைப் பொது ஜனங்கள் லட்சியம் செய்ய மாட்டார்கள் என்றே எண்ணுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 13.11.1927

தமிழ் ஓவியா said...

ராயல் கமிஷனும் சுயமரியாதையும்

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு ராயல் கமிஷன் விஷயத்தில் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய தன்மையைப்பற்றி ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தனது அபிப்பிராயமாக தெரிவித்துக் கொண்டிருக்கும் செய்தியாவது:-

பிரிட்டிஷாரின் ஏகபோக ஆதிக்கத்தை இந்தியர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிற வரையில், இம்மாதிரியான ராயல் கமிஷன்களில் இந்தியர்களுக்குப் பதவி அளிக்காதது, நம்மவர்களின் சுயமரியாதையை பாதிக்கக் கூடியதாயிருக்கின்றது என்று எண்ணுவதில் கொஞ்சமாவது அர்த்தமில்லை.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஓர் அம்சமாகவே, இந்த கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கின்றது. இந்தியரின் சுயமரியாதையை அடியோடு அழித்ததான பஞ்சாப் அநீதிபோன்ற காரியங் களில் ஒன்று சேர்ந்து பரிகாரம் தேட சம்மதிக் காத ஒரு கூட்டத்தார், இப்போது பகிஷ்காரத் தைப் பற்றி வீண் கூப்பாடு போடுவது கேலிக் கிடமானதென்றே சொல்லவேண்டும்.

உண்மையில் ராயல் கமிஷனை பகிஷ் கரிப்பது என்பது, எந்த அரசாங்கத்தாரால் இந்த ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டதோ, அதே அரசாங்கத்தின் அம்சங்களான சட்டசபை களையும், மந்திரி முதலிய பதவிகளையும் உத்தியோகங்களையும் பகிஷ்கரிக்கத்தக்க கொள்கையுடையதாயிருக்க வேண்டும். அப்படிக் கில்லாமல், ஒரு விதமான தியாகத்திற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாத தான, வெறும் வார்த்தையளவில் பகிஷ்காரம் என்று கூச்சல் போடுவதானது சுயமரியாதை உள்ள தேசத்தார் என்பவர்களுக்குக் கொஞ்சமும் அழகாகாது. உண்மையிலேயே, முழு விடுதலைக்கும் நம்முடைய நாட்டார் தயாராயிருக்கின்றார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால், அந்தக் காலத்தில் பார்ப்பனரல்லாதாரே முன்னணியில் நின்று விடுதலைப்போர் புரிவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

ராஜீய விஷயங்களில் சாத்தியமானதும், காரியத்தில் நடக்கக் கூடியதுமான துறையில் பாடுபடும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், வேண்டு மென்றே பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக மற்ற கட்சியார் செய்யும் சூழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது அறிவுடைமையாகாது.

கோயமுத்தூரில் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க மகாநாட்டில் மாகாண சுயாட்சி கிடைக்கும் வரையிலும் பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்திருக் கிறார்கள்.

ஆதலால், முழு சுதந்திரமும் கேட்கக் கூடியகாலம் வரும் வரை ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் மாகாண சுயாட்சிக்காகவும் நம்முடைய நாட்டிலுள்ள எல்லா வகுப்பாளர் களுக்கும் சமமான நீதியும், பங்கும் கிடைக்கும் படியாகவும், ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்று கொண்டாடும் பாத்தி யதையை நிராகரிக்கவும் ஒரே நிலையாக இருந்து பாடுபட்டு வரவேண்டியவர்களாவார்கள், ஜஸ்டிஸ் கட்சியாரின் வெளிப்படையான இந்தக் கொள்கையை நம்முடைய தேசமக்களிடமும், மற்றும் அந்நிய நாட்டாரிடமும், அவர்களால் ஏற்படுத்தப்படும் சபைகளின் முன்னிலையிலும் ஸ்தாபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

கமிஷன் அங்கத்தினர்களில் இந்திய அங்கத்தினர்கள் ஒருவரும் இல்லாதது ஒரு கெடுதியாகக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை, கவர்ன்மெண்டார் ஒரு சமயம் இந்தியர் களில் யாரையாவது நியமிப்பதானால் இப்போ தைய நிலைமையில், நியமனம் பெறக்கூடிய இந்தியர்கள் பொதுவாக பிராமணரல்லா தாருக்கு தீங்கிழைக்கக் கூடியவர்களாகத்தான் இருக்க முடியும்.

தவிர, ஆதியில் ரவுலட் கமிட்டியில் இந்தியர் ஒரு அங்கத்தினராயிருந்துங் கூட அக்கமிட்டி யின் சிபாரிசானது இந்திய மக்களை அரசாங் கத்தோடு ஒத்துழையாமை செய்யவேண்டிய அளவுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது. பொதுவாக யோசிக்குமிடத்து கமிஷனில் அங்கம் பெறக் கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர் களான பார்ப்பனர்களாகவே இருந்து விடக்கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கிய மென்றே சொல்லவேண்டும்.

- குடிஅரசு -கட்டுரை - 27.11.1927

தமிழ் ஓவியா said...


பாலியல் புகார்: நீதிபதி கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் தாக்கீது


புதுடில்லி, டிச.7- சட்ட பயிற்சி மாணவி கூறிய பாலியல் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக தாக்கீது அனுப்பியுள்ளது. சட்ட பயிற்சி மாணவி ஒருவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று தமது வலைபக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் நீதிபதி ஏ.கே. கங்குலி என தெரியவந்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் அக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வெளியிட்ட அறிக்கை யில், கங்குலி மீதான புகாருக்கு முகாந்திரம் இருக்கிறது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஏ.கே. கங்குலி மீதான புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும் தம் மீதான புகார் குறித்து ஏ.கே. கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு தாக்கீது அனுப்பி வைத்திருக்கிறது. அத்துடன் சட்ட பயிற்சி மாணவியின் புகார் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கேட்டு டில்லி காவல் துறையினருக்கும் மகளிர் ஆணையம் தாக்கீது அனுப்பி வைத்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...


கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

இஃது உலகநீதிச் செய்யுள்களில் ஒன்று. இதன் பொருள் வருமாறு:-

கோயில் - = அரசியல்; இல்லா -= இல்லாத ஒழுங்குமுறையமையாத ஊரில் = ஊரிலே குடியிருக்க வேண்டாம் =- குடியிருக்கக் கூடாது என்பது பொருள்

கோயில் என்பது அரசன்; அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதை பழம் தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும்.

"மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்"
என்ற சிலப்பதிகார அடிகளை நோக்குக!
அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன?
அது அமையாத இடம் என்றால் என்ன என்பதை ஆராய வேண்டும்.

பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத் தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான்.

இவ்வாறு ஒழுங்கு முறை வகுக்கபடாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது. அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது. ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது.

_- பாரதிதாசன் கட்டுரை, குயில், 18-.10.-1960

இப்படி ஒரு அர்த்தத்தில் சொன்ன உலகநீதி செய்யுளை நம்ம ஆட்கள் கடவுளை, மதத்தை பரப்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்...ஏதும் அறியாத அப்பாவி மக்கள் கடவுள் என்று சொன்னாலே கண்ணை மூடிக் கொண்டு நம்புவதால் இப்படி எத்தனை புளுகுகள் புராணத்தில், வரலாற்றில் புதைத்து வைத்திருக்கிறார்களோ?

சிந்தியுங்கள் தோழர்களே!
- க. பரணீதரன்

தமிழ் ஓவியா said...


ஓர் வயது முதிர்ந்த நாத்திகனின் கருத்துகள்

தந்தை பெரியாரின் ஆதாரபூர்வ மான கருத்தாழம் மிக்க நாத்திக, பகுத் தறிவு கொள்கைகளை 63 ஆண்டு களாக கேட்டு, படித்து, அறிவுபெற்ற நான் சில கருத்துகளை எழுத விழை கிறேன். தந்தை பெரியாரின் சொற் பொழிவுகள் குடி அரசு, உண்மை, விடுதலை ஆகிய இதழ்களில் வந் துள்ளதை பல தலைப்புகளில் நூல் களாக, சுயமரியாதைப் பிரச்சார நிறு வனம் குறைந்த விலையில் வெளியிட் டுள்ளதைப் படித்து லட்சக்கணக் கானோர் தெளிவுபெற்றுள்ளதை யாவரும் அறிவர்.

தந்தை பெரியாருக்குப் பிறகு அவ ரது மனிதாபிமான கொள்கைகளைத் தொடர்ந்து பட்டிதொட்டிகளிலும், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தனது உடல் நலத்தையும் கவனியாது சூறாவளிப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் கடவுள், மதம், முதலியவை பற்றிக்கூறிய பல கருத்துகள் ஆங்கில மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், வடநாட்டிலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்தம் கொள்கைகளை ஆய்வு செய்து, வெளிநாட்டுப் பல் கலைக்கழகங்களில் டாக்டர் பட்டங் கள் பெற்ற இந்தியரும், வெளி நாட்டவரும் உண்டு. இத்தொண்டு களினால் பொதுச் செயலாளர், தந்தை பெரியாரின் சிறந்த மனிதாபிமானக் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பிவருவது மிகவும் போற்றத்தக்கது.
கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தம் சொற்பொழிவுகளில் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு விஞ் ஞான ரீதியாக அளிக்கும் விளக்கங்கள், ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் தனித் தன்மை வாய்ந்தவை. அவர்கள் (பொதுச்செயலாளர்) மனிதாபிமான பகுத்தறிவு, நாத்திகம், பார்ப்பனியக் கலாச்சார ஆதிக்கம், இன்றைய அரசியல், சமுதாய நீதி, சட்ட நுணுக் கங்கள் ஆகிய எந்த பொருள்களில் சொற்பொழிவு ஆற்றினாலும் அவை, தக்க ஆதாரத்துடன் கேட்போருக்கு அலுப்பு ஏற்படாத வகையில், வார்த்தைகளை அளந்து பேசுவதில் அவருக்கு அவரே உதாரணம்.

இந்த வகையில் எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால், தந்தை பெரி யார்-சேலம் கல்லூரியில் சொற்பொழி வாற்றிய தத்துவ விளக்கங்கள் என்ற இந்த அரிய நூலின் ஆழ்ந்த கருத் துக்களைப்பற்றி பொதுச்செயலாளர் ஆற்றிய உரைகள், விளக்கங்கள் ஆகியவை. பொதுச்செயலாளரின் புலமை மிக்க சிறப்புகளை எடுத்துக் காட்டுவதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தர் டாக்டர் அனந்த கிருட்டிணன் அவர்கள் உலகில் பல பல்கலைக்கழகங்களின் பட்டங்களைப் பெற்ற ஓர் சிறந்த அறிஞர், அவர் சில மாதங்களுக்கு முன்னர் பெரியார் திடலில் நடந்த ஒரு சிறப்புக்கூட்டத்தில் சொற்பொழி வாற்றியபோது, அவருக்கு முன்னதாகப் பேசிய பொதுச்செயலாளரின் கருத் துக்களைப் புகழ்ந்து, பொதுச் செயலாளரின் பேச்சுக்களை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று பெருமிதத்தோடு சொன்னார்கள் என்றால், வேறு விளக்கங்கள் தேவையில்லை. நீதி அரசர் அறிஞர் வேணுகோபால் அவர்களும், பொதுச்செயலாளரின் மேன்மையான சொற்பொழிவுகளைப் பற்றிப் பல சமயங்களில் புகழ்ந்துள் ளார்கள்.

ஆகவே, குறைந்தது சென்ற பத்து ஆண்டுகளாக, விடுதலை, உண்மை, போன்ற இதழ்களில் வெளியிடப்பட் டுள்ள பொதுச்செயலாளரின் சொற் பொழிவுகளையும், அறிக்கைகளையும், தலையங்கங்களையும், இவ்விதழ்களி லிருந்து மேற்படி பக்கங்களை எடுத்து, ஓர் ஆல்பமாக பைண்டு செய்து வைத்தால் அவைகளிலிருந்து நாத்திகம் மனிதநேயம், சமுதாய நீதி - அவை களுக்கெதிரான பார்ப்பனிய நூல்களின், தேன் கலந்த நச்சுகளை யாவரும் புரிந்து கொண்டு, அவைகளை வெறுத்து ஒதுக்கும் வண்ணம் பயன்படும். அந்த ஆல்பங்களிலிருந்து தனித்தனி தலைப் புகளில், பொதுச்செயலாளரின் ஆதார முள்ள கருத்துக்களை, நூல்களாக வெளியிடலாம். அவைகளை ஆங்கி லத்திலும், இந்தி முதலான மற்ற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடலாம்.

அதனால் தந்தை பெரியாரின் மனிதாபிமான கொள்கைகளுக்கு உண்மையான விளக்கங்கள், மேலும் உலகம் பூராவும் பரவ நல்ல வாய்ப் பாகும்.

இந்தப்பணிகளை உடனடியாகத் தொடங்கினால் மிக்க நன்மை பயக்கும் என்பது, என்னைப்போன்றோரின் தாழ்மையான எண்ணம்.

- விடுதலை (5.2.1993)

தமிழ் ஓவியா said...


அடித்து நொறுக்காமல்....


- வா.நேரு -

சுத்தியலெடுத்து கல்லை
அடித்து நொறுக்குவதுபோல
மனதிற்குள் அந்த உணர்வை
அடித்து நொறுக்காமல்
அகலாது சாதி உணர்வு !

மூளைக்குள் போட்ட
விலங்கு என்றார் பெரியார்
மூர்க்கத்தனமாய்
உழைப்பவரை ஒடுக்க
பார்ப்பான் ஏற்படுத்திய
ஏணிப்படி அமைப்பே
சாதி என்றார் அண்ணல் .

வாழும்போதும்
வெந்து சாகும் போதும்
பின்னிப் பிணைத்திருக்கிறான்
பார்ப்பான் தமிழரின் பிணம் தின்னும் கழுகுகளாய்
சாதிக்கொரு சடங்குகளை! கை நகத்தில் மறைந்திருக்கும்
அழுக்குகள் போல
நீ செய்யும் சடங்குகள்
ஒவ்வொன்றிலும் உன்
ஜாதி இழிவு ஒளிந்திருக்கிறது !

பார்ப்பனன் உயர்வென்பதுவும்
உழைப்பவன் தாழ்வென்பதுமே
எழுதப்படாத விதி
எல்லாச்சடங்குகளிலும் !

சாதியால் கொழுக்கும்
பார்ப்பான்
சடங்குகளால் பிழைக்கிறான் !
நம்மை இன்னும்
கருவறைக்குள் விடுவதை
கடுமையாக எதிர்க்கிறான் !

பூணூலை எதிர்க்காமல்
ஒரு நூல் கூட
நம் இனத்தின்
முன்னேற்றம் இல்லை !

சடங்குகளை மறுத்து
அதன் மிச்ச சொச்சங்களைத்
தூக்கி நெருப்பில் போடு !

பார்ப்பானை வைத்துக்
கல்யாணம்,
காது குத்தல், கருமாதி,
தெவசம், திதி
அது இது, இது அது
அனைத்தையும் மறு !
அப்போதுதான்
தந்தை பெரியாரை
அண்ணல் அம்பேத்கரைச்
சொல்லும் தகுதி உண்டு
என்பதனை உணர் ! உணர்த்து !

தமிழ் ஓவியா said...


நாத்திகத்தை ஆன்மீகம் நாடும் முறை


- மு.வி.சோமசுந்தரம்

பீட்டர் ஹிக்ஸ்யுடன் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானிக்கும் சேர்த்து இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பீட்டர் ஹிக்ஸ் (றிமீமீக்ஷீ பிவீரீரீ) ஒரு நாத்திகர். 1960-ஆம் ஆண்டு ஹிக்ஸ், அணுவில் உள்ளடக்கி யத்துகள் உள்ளது என்ற உண்மையை அவரின் ஆராய்ச்சி மூலம் கூறினார். இதனை ஹிக்ஸ் போசோன் (பிவீரீரீ - ஙிஷீஷீஸீ) என்று அழைத்தார்.

ஒன்றுமே இல்லை என்ற கூற்றி லிருந்து மாறுபட்டு, அறிவு பூர்வமாக ஒன்று உண்டு என்பதை ஹிக்ஸ் - போசோன் கூறுகிறது. சுவிட்சர்லாந் தில் விஞ்ஞானிகள் நடத்திய பிரமிக்க வைத்த ஆழ்துளை ஆய்வுக்கூட சோதனை மூலம் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டது.

இந்த நிரூபணத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், ஹிக்ஸ் - போசோன் துகள் என்பதைக் கடவுள் துகள் என்று அழைப்பதை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. விஞ்ஞானியாகவும் நாத்திகரு மான, ஹிக்கிளின் எதிர்ப்பு (கடவுள் துகள்) என்று கூறுவதற்கு நியாய மானதே.
தனிப்பட்ட குறைகளுக்காகவோ, தனிப்பட்ட பாதிப்புக்காகவோ (எனக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை, கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?) கடவுள் மறுப்பு கூறாமல், அழுத்தமான, அறிவு பூர்வ மான விவாதத்தின் அடிப்படையில் கடவுள் மறுப்பு கூறுவது, நாத்திகத் தத்துவமாக அமைகிறது. ஆன்மீக வழியில் உண்மையைத் தேடுவோர் கூறும் எல்லைக்கப்பால் என்ற கருத்து, இரண்டுக்கும் ஒரு பொதுத்தன்மை உள்ளதை உணர்த்துவதாக இருக்கிறது. எல்லை என்று ஒன்று இல்லாது, எப்பொழுதும் நீடித்துக்கொண்டே இருக்கும் உணர்வை எல்லைக்கப்பால் என்று கூறலாம். விஞ்ஞானிகள், அவர்களின் அறிவின் அடிப்படையிலும், ஆராய்ச்சிக் காரணத்தின் அடிப்படை யிலும் நாத்திகர்களாக விளங்குபவர்கள், எல்லை ஒன்று இல்லாத ஒன்றைத் தேடிச் செல்வதால், எல்லை கடந்த வர்கள் என்று அழைக்கப்படலாம். பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி, தன் கண்டுபிடிப்பு முழுக்க முடிவின் நிரூபணம் என்பதை விட இந்த உலகில் புதைந்து கிடக்கும் பலவற்றைத் தேடும் துவக்கம் என்று கூறிய முதல் மனிதர்.

கடவுள் துகள் கண்டுபிடிப்பில் அமைந்த பிரச்சினை, கடவுள் என்ற எல்லையைத் தாண்டி, லட்சுமணன் கோடு உள்ளது போல் நினைத்து, கடவுள் நம்பிக்கையாளர்களை ஒதுக்கியிருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையாளர்கள், கடவுளின் செயல்பாடுகளை அறிய வேண்டிய வேலை இல்லை. கடவுள் எண்ணத் துக்குக் கட்டுப்பட்டு போகவேண்டும். அனைத்தையும் கடவுளிடம் ஒப் படைத்து விடு என்பதாகும்.

நாத்திகத்தில் கூறுவது போல் விஞ்ஞானத்தில் கடவுள் இல்லை, எல்லை வரையறை கிடையாது. மணலில் கோடு போட்டு, அதைத் தாண்டிப் போகக்கூடாது என்று கூறுவது இல்லை, மணலில் தடை கோடு போடுவது, அதைத்தாண்டி போக வேண்டும் என்று தூண்டி விடுவதாக மாறி விடுகிறது. மேலும் செல்லத்தான் தூண்டிவிடும்.

இது போலவே, நாத்திக தத்துவம் உணர்வின் விரிவாக்கத்துக்கு எல்லை வகுப்பதில்லை. கல்லில் செதுக்கப் பட்டுள்ள விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகளைகேள்வி கேட்கக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

கடவுள் துகள், கடவுள் மறுப்புத் துகள் என்று பெயர் சூட்டப்படுமா னால் ஒரு வேளை ஹக்ஸ் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா: 24.10.2013 இதழின், ஜிலீமீ ஜீமீணீளீவீஸீரீ க்ஷீமீ கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழ் ஓவியா said...


ஓய்வறியா எம். தலைவர் திட்டம் வெல்க


எண்பத்தொரு வயதினிலும் இளமைத் தோற்றம்
எடுத்துவைக்கும் அடியிலெல்லாம் இனிமை தோன்றும்.
தொண்டு செய்து பழுத்தபழம் பெரியார் தன்னை
தொல்லுலக மக்களெல்லாம் போற்று கின்ற
பெரும்பணியை செய்துவரும் தலைவர், அய்யா
பேருருவ சிலைவடிக்கும்திட்டம் கண்டார்.
பெரும்வெற்றி அதில் கண்டார். நிகரே இல்லா
பெரியார் உலகத்தை, உலகே போற்றும்.

யார்க்குவரும் யார்க்குவரும் இந்த எண்ணம்
அகிலமெல்லாம் அகிலமெல்லாம் வியக்கும் வண்ணம்.
கூர்மதியால் தீட்டியவோர் திட்ட மன்றோ
பெரியார் கொள்கைதனை உலக மெல்லாம்
ஓர்வழியாய் கொண்டு செல்லும் நோக்க மன்றோ
ஓய்வறியா எம்தலைவர் திட்டம் வெல்க.
வேர்விட்டு வளர்ந்திடட்டும் பெரியார் கொள்கை
வெளிச்சத்தில் வாழ்ந்திடட்டும் உலக மக்கள்

தங்கத்தை தாவென்றால் தருவோம் நாங்கள்
தலைவணங்கா தலைவருக்கா இல்லை என்போம்.
எங்கள்மன மகிழ்ச்சியெல்லாம், தலைவர் என்றும்
இன்றுபோல் இளமையுடன் வாழ வேண்டும்
தங்குதடை இல்லாமல் பெரியார் கொள்கை
தரணியெங்கும் பரவி ஒளி வீச வேண்டும்
உங்கள்கை விரலசைவில் தமிழர் எல்லாம்
ஒன்றாகி ஓரணியில் நிற்க வேண்டும்.

- சி. சுப்பிரமணியன், (மாவட்ட தலைவர், சேலம்)

தமிழ் ஓவியா said...


தமிழைக் கொண்டாடும் ரஷியா

தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி இது. ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது' என்ற தலைப்பில் ஓர் இணையதளம் கீழ்க்காணும் செய்தியை வெளியிட்டுள்ளது. "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசி னாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய் விட்டது நம் மொழி. ஆனால், தமிழ் மொழியின் அருமையை தமிழர்கள் அனைவரும் தெரிந்திருக்கிறார்களோ இல்லையோ, பிற நாட்டினர் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது.

அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக் கில் இல்லை. உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மிகச்சரியான, தகுதியான மொழியாக, வரலாற்றுச் சிறப்பும் இலக் கியச் செழுமையுமுள்ள மொழியான தமிழ்மொழி எங்களுக்குத் தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று. வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

- முகநூல் நண்பர் (தென்னரசு - செப்டம்பர் 2013, பக்கம் - 2)

தமிழ் ஓவியா said...


தாயாரின் இறுதிச் சடங்கில் மகனின் திருமணம்


அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது நல்லுடலின் முன்னிலையில் தாலி கட்டினார் மகன்.

இந்த திருமணம் மலேசியாவில் உள்ள பெர்சியாரான் ராஜா மூடா மூசா என்னும் இடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடந்தது என மலேசிய பத்திரிகைகள் தெரிவித்தன.

கோலக்கிள்ளானைச் சேர்ந்த நாராயணியின் (வயது 47) மகன் பி.சஞ்சீவிராஜனுக்கு இம்மாதம் 30-ஆம் தேதி அந்த ஊரில் உள்ள சிறீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

மகனி; திருமணத்துக்காக புடவைகள், அணிகலன் கள் வாங்குவதற்காக கணவர் பெருமாளுடன் நாராயணி கடந்த வாரம் சென்னை சென்றார். அங்கு அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது நல்லுடல் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.

அவரது அகால மரணத்தால் பெரும் அதிர்ச்சிக் குள்ளாகி இருந்த மணமகன் குடும்பத்தினர், மண மகளின் குடும்பத்தினருடன் கலந்து பேசி புரோகி தர்களின் ஆலோசனைகளையும் கேட்டு தாயின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

காலையில் நல்லுடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட் டதும் வரவேற்பறையில் உடல் வைக்கப்பட்டு சடங் குகள் நடத்தப்பட்டன. தாயின் சவப்பெட்டி அருகே தந்தை பெருமாள் நிற்க, மணமக்கள் இருவரும் பாதபூசை செய்தனர்.

பின்னர் இரு புரோகிதர்கள் மந்திரம் ஓத, மணமகள் சசிகலா (வயது 25) கழுத்தில் மணமகன் சஞ்சீவிராஜன் (வயது 28) தாலி கட்டி, சவப்பெட்டியை வலம் வந்தார். திருமணச் சடங்கு முடிந்ததும் நாராயணியின் நல்லுடல் அங் குள்ள இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் என ஏறக்குறைய 2,000 பேர் இச்சடங்கில் பங்கேற்றனர்.

மரணமடைந்த நாராயணிக்கு இரு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு மணமாகி விட்டது. சஞ்சீவி ராஜன் இரண்டாவது மகன்.

- தகவல்: ஆரூர் சபாபதி (சிங்கப்பூர்)

தமிழ் ஓவியா said...


அன்றிருந்த நிலை


1915-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் பார்ப்பனரல்லாதாரின் சமூக நீதி இயக்கம் தோன்றிய காரணத்தையும், அவசியத்தையும் நன்கு உணர முடியும். 1915-இல் கல்வி இலாகாவில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. அந்த 518 இடங்களில் அமர்ந்திருந்த பார்ப்பனர் 399 பேர், கிறித்துவர்களும், ஆங்கிலோ இந்தியர்களும் 73 பேர், முஸ்லிம்கள் 18 பேர் (ஆதிதிராவிடர் உட்பட).

ஆம்! அவ்வளவு உத்தியோகங்களிலும் நாட்டுக்குரிய திராவிட மக்களுக்கு 18 உத்தியோகங்கள் தான்.

மக்கள் தொகையில் 100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு 399 உத்தியோகங்கள் கிடைத்திருக்கையில், 100க்கு 81 பேர்களாக உள்ள - பார்ப்னரல்லாத இந்துக்களுக்கு 18 உத்தியோகங்கள் தான் கிடைத்திருந்தன.

பார்ப்பனர்களுக்கு 399 உத்தியோகங்கள், அவர்களைப் போல் 30 மடங்கு மக்கள் தொகை கொண்ட சமூகத்தாருக்கு 18 உத்தியோகங்கள் தான். இதற்குப் பெயர்தான் அரசாங்கக் கல்வி இலாகா அக்கால நீதிப்படி 1915-இல் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 100-க்கு 7 அல்லது 8 பேரே ஆவர். அதில் 3 சதவீதம் உள்ள பார்ப்பனரோ தங்களில் 100-க்கு 75 சதவீதத்திற்குக் குறையாமல் படித்திருந்தனர். மற்ற மக்கள் எல்லோருமே 100-க்கு 5 சதவீதத்தினரே படித்திருந்தனர். பார்ப்பனரல்லாத இந்துக்களோ 100-க்கு 3 சதவீதத்தினர் தான் படித்திருந்தனர்.

(பேராசிரியர் பெருந்தகை அவர்களின் வகுப்புரிமை போராட்டம் நூலில் 13-ஆம் பக்கத்தில்)

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி