Search This Blog

8.1.14

பொங்கலோ பொங்கல்!


 








பொங்கல் திருவிழா தமிழர் பண்பாட்டுத் திருவிழா உலகெங்கும் நடைபெறும் அறுவடைத் திருவிழாவுக்கு (Harvest Festival) ஒப்பானது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் என்றார் திருவள்ளுவர்.

அதையும் கடந்து, உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து என்றும் வள்ளுவர் பெருமான் கூறியுள்ளார்.

உழவைத் தவிர்த்து வேறு தொழிலைச் செய்பவருக்கும் உணவைத் தந்து உதவுவதால் உழவுத் தொழிலைச் செய்யும் பெருமக்களே உலகிற்கு அச்சாணி என்று மிக அழகாகக் கூறியுள்ளார்.

இந்த உழவுக்கு ஒரு மேன்மை வந்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த உழவர் திருநாளாம் பொங்கல் புதுநாளை - பொன்னாளை சங்கராந்தி என்று சமஸ்கிருதப் பெயர் சூட்டி, சூரிய பகவானுக்குப் படையல் என்று திரித்து, மதச் சாயத்தைப் பூசி விட்டனர் பார்ப்பனப் பதர்கள்.

பார்ப்பனர்களின் மகா சாத்திரமான மனுதர்மம் என்ன கூறுகிறது?

பயிரிடுதலை மேலான தொழிலென்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதனைப் பாராட்டவில்லை. ஏனெனில், இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி, இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 10 சுலோகம் 84).

உலகத்தில் உழவுத் தொழிலை இவ்வளவுக் கேவலமான முறையில் கொச்சைப்படுத்தியவர்கள் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இப்படி சாஸ்திரம் எழுதி வைத்திருக்கின்ற பார்ப்பனர் கள். அந்த உழவுத் தொழிலால் உருவாக்கப்படுகின்ற உணவுப் பொருள்களை உண்பதில்லையா?

பெரிய ஜீவகாருண்ய சீலர்கள் போல எழுதி வைத்திருக்கிறார்களே - பூமியை வெட்டுவதால் சிறிய உயிரினங்களை வெட்ட நேரிடுகிறதாம் - இப்படி எழுதி வைத்துள்ள இந்தப் பார்ப்பனர்கள் யாகம் என்ற பெயரில் நெருப்பில் ஆடு, மாடு, குதிரை, கோழி, ஏன் மனிதர் களைக்கூட நெருப்பில் போட்டுப் பொசுக்கியிருக்கின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு அல்து கி.பி. 2ஆம் நூற்றாண்டில் மனுதர்மம் எழுதப்பட்டதாகச் சொல்லு கிறார்களே - அதைக்கூட, தள்ளி வைப்போம்.


நம் கண்முன்னே வாழ்ந்தாரே காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் என்ன சொன்னார்? எப்படி நடந்து கொண்டார்?

1921ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் கும்பகோணம் சங்கராச்சாரியார் (கும்பகோணம் மடம்தான் - பிறகு காஞ்சி மடமானது என்பதையும் கருத்தில் கொள்க!) அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன்வந்தார்கள். ஆனால், சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியாது என்று கூறி விட்டார்.

(ஆதாரம் தமிழ்நாட்டில் காந்தியார் பக்கம் 378)

இப்படிச் சொன்னவர்தாம் ஜெகத்துக்கே குருவாம் - அவர் உளறுவது எல்லாம் தெய்வத்தின் குரலாம்!

உழவுத் தொழிலை இப்படி கொச்சைப்படுத்து பவர்களால், உழைப்பை சிறுமைப்படுத்துபவர்களால் உழவின் சிறப்பைக் குறிக்கும் தைத் திருநாளை ஆண்டுப் பிறப்பாகவோ, பொங்கல் விழாவைத் தமிழர் விழாவா கவோ ஏற்றுக் கொள்ள முடியுமா?


அதனால்தான் அதனைச் சங்கராந்தி என்று பெயர் சூட்டி இந்திரன் - வருணன் சண்டை என்று புராணக் கதையாக்கி விட்டனர்.


தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தான் அந்தக் கறையைப் போக்கி, தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவை தமிழர்களுக்கு ஆக்கிக் கொடுத்தனர்.

உண்மையான திராவிடர் ஆட்சியை நடத்தும் மானமிகு கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து சட்டம் செய்தது - தமிழர் பண்பாட்டுப் புரட்சியில் மிகச் சிறந்த இடத்தை வகிக்கக் கூடியதாகும்.

ஆனால், பார்ப்பன ஏடுகள் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை. காரணம் வெளிப்படையான தாகும். உழவினை - பயிர்த் தொழிலைப் பார்ப்பனர்கள் பாவத் தொழிலாகக் கருதுவதுதான் - அவர்களின் சாஸ்திரங்கள் அவ்வாறு கூறுவதுதான் இதற்கு விழுமிய காரணமாகும்.

இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ளும்போதுதான் பொங்கல் விழாவை முன்னிலும் மிடுக்காக - வீரியமாகக் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்ற எழுச்சி பீறிட்டுக் கிளம்புகிறது.

தமிழர்களின் மீட்சி என்பதே இதுபோன்ற உணர் வோடு ஆரிய எதிர்ப்பு என்ற தடத்தின்மீது வீறு நடை போடுவதேயாகும்.




தை முதல்நாள் முதல் மூன்று நாள்களும் தமிழர்கள் தங்கள் இனத் திருவிழாவை எல்லா வகையிலும் பெரு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

பிள்ளைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல்வேறு வகையிலும் மகிழ்ச்சியின் மலர்ச்சியாக நடக்கட்டும்; நடக்கட்டும்!

பொங்கலோ பொங்கல்!

அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!
                --------------------------"விடுதலை” 14-1-2011

8 comments:

தமிழ் ஓவியா said...


மதக் குறி என்பதுமாட்டுக்குறியே!


மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.

(குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/73309.html#ixzz2prAswES4

தமிழ் ஓவியா said...


இராமன் பாலம் என்பது ஆர்.எஸ்.எஸின் குரலே!


தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை அறவே கூடாது என்ற நிலைப்பாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா அம்மையார்.

திருவாளர் சுப்பிரமணியசாமியும், இதில் சங்கமமாகி உள்ளார்.

இனம் இனத்தோடு சேர்கிறது என்றாலும், அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு திராவிட இனக் கலாச்சாரப் பெயரையும் பயன் படுத்திக் கொண்டு இதனைச் செய்வது சரிதானா? அறிவு நாணயமா? என்பதுதான் நமது கேள்வி.

இதே அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும், ஆதாம் பாலம் என்றும், மணல் திட்டு என்றும் சொல்லப்படவில்லையா?

சந்தர்ப்பவாதம் என்பது நாகரிகமான ஒன்றல்ல; கொள்கையில்லாத வெறும் கூட்டைத்தான் இந்த வார்த்தைகளால் அழைப்பது வழக்கம். அதன்படி செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ. அ.தி.மு.க. என்பது கொள்கைக்கோட்பாடுகள் இல்லாத ஒரு கூடாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த அளவுக்கு அம்மையார் சென்றார் தெரியுமா?

தான் உருவாக்கிய ராமர் பாலத்தை, ராமபிரான்தானே தகர்த்தார் என்று ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை. ராமபிரானைப்பற்றிய அனைத்து அம் சங்களையும் மக்கள் நம்பலாம்; ஆனால், ராமர் பாலம் மட்டும் நம்பிக் கைகளுக்கு அப்பாற்பட்டதா?

காஷ்மீரில் ஹஸ்ரத்பால் திருத் தலத்தில் திருடப்பட்ட புனிதப் பொருள் மீட்கப்பட்டது போன்றும், வின்ஸ்கோட் திரைப்படம், கிறிஸ்தவர்களின் மன தைப் புண்படுத்துகிறது எனத் தடை செய்யப்பட்டது போன்றும், ராமர் பாலம் நம்பிக்கையையும் நம்பவேண்டும்.

இறைத் தூதர் முகம்மது நபிகளின் புனிதப் பொருள் மதிப்புக்குரியது என்றும், கிறிஸ்துவப் பெருமக்களின் விசுவாச விஷயங்களை மதித்துப் போற்றுவது போன்றே இந்துக்களின் இறை நம்பிக்கையையும் புராதனச் சின்னங்களையும் மதிக்கிறேன்.

ராமர் பாலம் குறித்து மத்திய அரசு முரண்பாடான தகவல்கள் ராமர் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங் கள் ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும்.

(அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., நாள்: 26.7.2008).

இந்து முன்னணி ராமகோபாலனும், பி.ஜே.பி. இல.கணேசனும் கூறுவதுபோல இல்லையா?

அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும், தம் கட்சியில் வைத்துக்கொண்டுள்ள ஜெ.ஜெய லலிதா கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?

புத்த மார்க்கத்திற்கு ஏற்பட்ட ஊடுருவல் திராவிட இயக்கத்திலும் நிகழ்ந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?

ராமர் பாலம் - மதக் கலவரம் என்றெல்லாம் ஒருவர் பேசுகிறார் என்றால், அவரின் மனப் பான்மை எத்தகையது என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.

அண்ணாவின் கொள்கையை இவர் காப் பாற்றுவார் - திராவிட இயக்கத்தின் கொள்கை இவரிடம் பாதுகாப்பாக இருக்கும் என்று உள்ள படியே நம்புகின்றவர்கள் யாராவது ஒருவர் அ.இ.அ.தி.மு.க.வில் இருந்தாலும் அவர்கள் அறிவு நாணயத்தோடு சிந்திக்கக் கடமைப்பட்டுள் ளார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73310.html#ixzz2prB8lRCb

தமிழ் ஓவியா said...


சன் டி.வி. வீரபாண்டியனுக்கு அச்சுறுத்தல்: கண்டனம்


சென்னை, ஜன. 8- மத வாத அரசியல் குறித்துக் கருத்துக் கூறிய ஊடக வியலாளர் சன் டிவி வீரபாண்டியன் மீது பாஜக தொடுத்துள்ள தாக்குதல் தொடர்பாக அரசியல் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் சமூகச் செயல்பாட்டா ளர்களும் கண்டித்து செவ்வாயன்று (ஜன. 7) வெளியிட்ட கூட்ட றிக்கை:

மதவாதத்திற்கு எதி ராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் வீர பாண்டியனை பணியிலி ருந்து நீக்க வேண்டுமென மதவாத சக்திகள் வலி யுறுத்தியுள்ளதை மதச் சார்பின்மை மீது நம் பிக்கை கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில், முசா பர் நகரில் சிறுபான்மை யினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரபாண்டி யன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் மாநில அலுவலகச் செயலாளர் திரு.கி.சர்வோத்தமன் சன் தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்கு நருக்கும் டிசம்பர் 23 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வீரபாண்டியன் பேச்சு இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும், வீரபாண்டியன் தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சிகள் நடுநிலையோடு இருக் காது எனவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக் கும்படி கோரியுள்ளார்.

அவர் முன்நின்று நடத்தும் விவாத நிகழ்ச் சிகளில் பா.ஜ.க. சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித் துள்ளதாக தெரிய வரு கிறது.

இதன்பின்னர், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பப் படவில்லை. இந்த அணு குமுறை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண் டோராகிய எங்களுக்கு மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது.

ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடு நிலையாக இருந்து கருத் துரைக்க வேண்டுமென் பதுதான் அறம். அதனா லேயே அவருக்குச் சொந்த கருத்தோ அல்லது அர சியல் பார்வையோ இருக் கக் கூடாது என்பது தவ றானது. இதர குடிமக்க ளுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.

பல்வேறு வகையில் அனைத்துத் தரப்பு மக் களின் கருத்துகளுக்கும் இடமளித்து வரும் சன் தொலைக்காட்சி நிர்வா கம் வீரபாண்டியன் நடத் தும் அரசியல் விவாத நிகழ்ச்சி தொடர ஆவன செய்து, கருத்துரிமை, பேச்சுரிமைக்கு தொடர்ந்து மதிப்பளித்திட வேண் டும் என கேட்டுக் கொள் கிறோம்.

இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடுத்து செயல்பட்டு வரும் மத வாதக் கட்சிகள் இது போன்று ஊடகவிய லாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்கள் விடுப்பதை அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் கண்டிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த கூட்ட றிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அறிக்கையில் கி.வீர மணி (தி.க.), ஞானதேசி கன் எம்.பி. (காங்.), மத் திய அமைச்சர் இ.எம். சுதர்சன் நாச்சியப்பன், தா.பாண்டியன் (சிபி அய்), தொல்.திருமாவள வன் (விசிக), எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., (மமக), கே.எம்.காதர் முகைதீன் எம்.பி., (முஸ் லீம் லீக்), சுப.வீரபாண் டியன் (திஇதபேரவை), தமஎகச மாநிலத் தலை வர் ச.தமிழ்ச்செல்வன், கவிக்கோ, அப்துல் ரஹ் மான், பேரா.அ.மார்க்ஸ், கவிஞர் மனுஷ்யபுத்தி ரன், ஜே.எஸ்.ரிபாயி (தமு முக), பேராயர்கள் எஸ்றா.சற்குணம், தேவ சகாயம், பத்திரிகையா ளர்கள் அ.குமரேசன், ஞாநி, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73343.html#ixzz2prBHvfZS

தமிழ் ஓவியா said...


தீக்கதிர் தலையங்கம் சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?


சிதம்பரம் நடராசர் கோவில் நிர் வாகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது செல்லாது என்றும், நிர் வாகம் பொது தீட்சிதர்களின் கைகளில்தான் இருக்கவேண்டு மென்றும் உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு மெச்சத்தக்கதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்கத்தில்தான் இந்தக்கோவில் இருக்க வேண்டும் என்று நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அமைப்பு கூறியுள்ளது சமூகநீதி சக்திகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்றுபோற்றப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலின்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட, சிவனடியாரான ஆறுமுகசாமிக்கு தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப் பட்டது. தொடர்ந்து பலஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பின்னணியில்தான் 2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப் படுத்தியது. இதை எதிர்த்து தீட்சி தர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமான்கள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரி செய்ய கோவில் நிர் வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார் வையிடலாம் என்று கூறியுள்ளனர். இந்த முரண்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை.

சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பரிந்துரை வழங்கலாம். ஆனால் அதை ஏற்க வேண்டுமென்ற அவசியம் எதுவும் தீட்சிதர்களுக்கு இல்லை என்றாகிறது. சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார் கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படவும் இல்லை.

தமிழகத்தில் ஏராளமான கோவில் கள் பல்வேறு ஜாதியினரால் நிர்வகிக் கப்பட்டு வந்தநிலையில் தமிழக அரசு அந்தக் கோவில்களை அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. ஆனால் இப்போதைய தீர்ப்பு அனைத் துக் கோவில்களும் மீண்டும் ஜாதி களின் கையில் செல்லவும், அறநிலை யத்துறையே அர்த்தமற்றுப் போகவும் வழிசெய்யும் ஆபத்து உள்ளது.

தேவாரப் பாடல்களை பதுக்கி வைத்தது, நந்தனாரை தீயில் தள்ளிக் கொன்றது, வள்ளலாரை கோவில் கருவறைக்குள் அனுமதிக்க மறுத்தது, சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து நொறுக் கியது நகைகள் திருட்டு என்று சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வரலாற்று காலந் தொட்டு ஏராளமான புகார்கள் உள்ளன.

கோவில் சொத்தை நிர்வகிப்பதிலும் வெளிப்படையான கணக்கு வழக்கு இல்லை. இந்த கோவில் நிர்வாகத்தை ஏற்ற தமிழக அரசு வழக்கை நடத்து வதில் உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது. சேது சமுத்திர திட்ட வழக்கிலும் கூட நம்பிக்கை என்பதற்கு கொடுத்த அழுத்தத்தை வளர்ச்சிப்பணி என்பதற்கு உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.

இந்த வழக்கிலும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (மறு சீராய்வு) செய்வதன் மூலம் நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும்.

நன்றி: தீக்கதிர், தலையங்கம், 8.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/73311.html#ixzz2prBt86JK

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

அகமதாபாத்,ஜன.8- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எதி ராக துப்புரவுத் தொழிலாளர்கள் மாபெரும் பேரணி நடத்தினார்கள்.

குஜராத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வரும் இந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து மோடி அரசு மறுத்து வருகிறது.

இஎஸ்அய், பிஎஃப் உள்ளிட்ட சட்ட சலுகைகளையும் அமல்படுத்த குஜராத் அரசு மறுத்து வருகிறது. தொடர்ந்து சமூகத்தில் பின் தங்கியிருக்கும் துப்புரவு தொழிலா ளர்களை கொத்தடிமைகள் போலவே மோடி தலைமையிலான அரசு நடத்தி வருகிறது. இதனைக் கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை மோடி அரசு மிரட்டி பணிய வைக்கவும், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்ப வேண்டும். அல்லது துப்புரவுப் பணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுவோம்.

வேறு நபர்களுக்கு வேலை வழங்கி விடுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் தொடர்ந்து தொழிலாளர்களை மோடி அரசு மிரட்டி வருகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். தொடர்ந்து 8 ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக மோடி அரசை கண்டித்து அகமதாபாத் நகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினர்.

சிலைக்குப் பல்லாயிரம் கோடியா?

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்காமல் படேல் சிலை அமைக்க பல கோடி ரூபாய்களை அரசு வீணடிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஏழை மக்களுக்கு நன்மை செய்யப் போவதாக நாடு முழுவதும் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் துப்புரவுத் தொழிலாளர்களை கண்டு கொள்ளவில்லை.இதனால் ஏமாற்றம் அடைந்த துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் மாபெரும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம சாலையில் அவர்கள் பேரணியாக சென்றார்கள். வழியில் உள்ள காந்தியார் சிலைக்கு அவர்கள் பாலபிஷேகம் நடத்தினார்கள். குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசின் அசுத்தத்தை கழுவும் வகையில் பாலபிஷேகம் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பேரணியில் நகராட்சி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், குஜராத் தொழில் பாதுகாப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர். காந்தியார், சர்தார் வல்லபாய் பட்டேல் மீது தேர்தலுக்காக போலி அன்பு காட்டும் மோடிக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட் டனர்.பேரணி காந்தியாரின் சபர்மதி ஆசிரமம் அருகில் சென்று முடிவடைந்தது.

அங்கு அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் பேசியவர்கள், பட்டேல் சிலை அமைப்பதற்காக குஜராத் அரசு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது. அந்த பணத்தை குஜராத்தில் உள்ள ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்கு செலவிடலாம் என்று வலியுறுத்தினர்.

Read more: http://viduthalai.in/e-paper/73308.html#ixzz2prCM3pSQ

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை


பதவியிலிருக்கும் நீதிபதியே ஆஜரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.9-சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன பட்டி யலைத் திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போ துள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் வருகை தந்து வாதிட்டதால் நீதி மன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு நீதிபதி ஆஜரானது இதுவே முதல்முறை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக 13 நீதிபதிகள் பதவி இடங்கள் உள்ளது. இதற்கு 12 பேரின் பெயரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு தேர்வு செய்து அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இந்த பட்டியல் நியாயமான முறையில் தயாரிக்கப்படவில்லை என்றும் பட் டியல் தயாரிப்பில் வெளிப்படையான நிலை பின்பற்றப்படவில்லை என்றும் வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற வர லாற்றில் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மற்ற நீதிமன்றத்தில் விசா ரணை நடந்துகொண்டிருக்கும்போது வருகை தந்து வாதிடுவது இதுவே முதல் முறை என்று நீதிபதி கர்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கூடுதல் பிரதிநிதித் துவம் தரப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப் படையான நிலை இல்லை என்றும் அதனால் இந்த பட்டியலை திருப்பப் பெற வேண்டும் எனக் கோரி மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக் கையுடன் வழக்குரைஞர் எஸ்.துரை சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி அகர் வால், சத்தியநாராயணன் முன்னிலை யில் கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவர்கள் விசாரிக்க மறுத்துவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

இதையடுத்து, நீதிபதி பால்வசந்த குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்களும் இந்த வழக்கை விசாரிக்க மறுத்தனர். இதனால் வழக்கு நீதிபதிகள் ராஜேஸ் வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன் நேற்று முன்தினம் விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் எஸ்.பிரபா கரன் ஆஜராகி புதிய நீதிபதிகள் பட்டியலைத் திரும்பப் பெற வேண் டும் என்று வாதிட்டார். அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இந்த டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கக் கூடாது என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நீதிபதி கள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி சார்பாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

பிரபாகரன் வாதிடும்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. தற்போது 12 பேரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். குறிப் பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு தர வேண்டும். தற்போது சிபாரிசு செய் யப்பட்டவர்களில் பலர் நீதிமன்றத் தில் அதிகமான அளவில் வருகை தந்ததில்லை. நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை களை சரியாக பின்பற்றவில்லை. எனவே திறமையான வழக்குரைஞர் கள் பெயரை சிபாரிசு செய்ய வேண் டும். இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய பட்டியலைத் திரும்ப பெற வேண்டும்.

இந்த பட்டியல் சமூக நீதியை கவனிக்கத் தவறிவிட்டது. நீதிபதிகள் குழு பட்டியலைத் தயாரிக்கும் முன் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யவில்லை. பரிந் துரை செய்யப்பட்டவர்களில் ஒரு வரும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவு களைப் பெறவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் இந்த நடைமுறை மிக வும் அத்தியாவசியமாகும் என்றார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏராளமான வழக்குரை ஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குரைஞர்களின் வாதங்களை கேட்டனர். அப்போது, நீதிபதி சி.எஸ். கர்ணன் திடீரென நீதிமன்றத்துக்குள் தனது உதவியாளர்களுடன் வந்தார். அவரைப் பார்த்த வழக்குரைஞர்கள் ஆச்சரியப்பட்டனர்.

நீதிமன்றத்துக் குள் வந்த நீதிபதி கர்ணன், நீதிபதிகள் தனபாலன், கே.கே.சசிதரன் ஆகி யோரிடம், நீதித்துறையில் நானும் ஒரு அங்கம். நீதிபதிகள் பட்டியல் தயா ரிப்பு சரியாக, நியாயமான முறையில் நடைபெறவில்லை. இதை எதிர்த்து நான் தனியாக எனது பெயரில் மனு தாக்கல் செய்து வாதிடப்போகிறேன். நான் கூறியதை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:

இந்த வழக்கில் மனுதாரர்களின் வாதங்களின் அடிப்படையில் புதிய நீதிபதிகள் பட்டியல் மீதான மேல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. விசாரணை நாளை பிற்பகல் 2.15க்கு தள்ளி வைக்கப் படுகிறது. அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page-2/73364.html#ixzz2px9HznDB

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம்!


கொழும்பு, ஜன. 9- அய்.நா. மனித உரிமை கவுன் சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசா ரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009 ஆம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க் குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ் மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்க வில்லை.

அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அய்.நா. புள்ளிவிவரம் கூறு கிறது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டதும், அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த 2012, 2013 ஆண்டு களில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர் மானங்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களி டையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை களை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத் தின.

ஆனால் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பல இடங்களில் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் அடைபட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வாழ்கிற நிலைதான் உள்ளது. நல்லிணக்க சூழல் ஏற்படவில்லை. இந்த நிலையில், உலக குற்ற நீதித்துறை அமைப்பில் அமெரிக்க தூதராக உள்ள ஸ்டீபன் ராப், இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவர் வடக்கு மாகாணத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இன்னும் இரண்டு நாள் கள் அவர் அங்கே தங்கி இருந்து தமிழர் தலைவர் கள், அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா தனது மூன்றாவது தீர்மானத்தை மார்ச் மாதம் தாக்கல் செய்யும் என அவர் தன்னிடம் கூறியதாக தமிழ் தேசிய கூட்டணி யின் மூத்த தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம், போர்க்குற்ற நடவடிக்கைகளில் இலங்கையை பொறுப்பேற்க வைக்கவும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் ஏற் படுத்த நடவடிக்கை எடுக்கவும் சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதுமட்டுமல்ல, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வழிவகுக்குமா என்பதும் தெரிய வரும்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மூன்றாவது தீர்மானம் கொண்டு வர இருப்பதாக ஸ்டீபன் ராப் கூறியது குறித்து, சிங்கள அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான கெஹ லிய ரம்புக்வெல்லாவிடம் கருத்து கேட்டபோது அவர், நிலைமையை எதிர்கொள்ள ராஜ்ய ரீதியில் இலங்கை தயாராக உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை முழுமையாக அறியும். அதில் ரகசியம் எதுவும் இல்லை என கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73401.html#ixzz2pxAsc7wc