Search This Blog

17.10.14

ஜாதி ஒழிய....பெரியார்

ஜாதி ஒழிய....


வைதீகத் திருமணங்கள் மூலம் பார்ப்பனர்கள் ஜாதி வேறுபாடுகளை நிலை நாட்ட ஒரு பிரசார முறையாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சடங்கு முறைகள் என்பவை ஜாதிகளை நிலைநாட்டவே ஏற்பட்டனவாகும். அவரவர்கள் நான் இன்ன ஜாதி, என்னுடைய குல ஆசாரம் இப்படித்தான் என்று ஒரு பெருமையாகக் கூடப் பேசிக் கொண்டு ஒவ்வொரு முறையைக் கையாளுகின்றனர். இதன் மூலம் அவரவர்கள் அடிக்கடி தன் ஜாதியை நினைவூட்டி அதை அவரவர்கள் அடிக்கடி மறந்துவிடாமல் உரிமை கொண்டாடி நிலைத்திருக்கச் செய்யும் வழியேயாகும்.

மேலும்
இன்றைக்கு நடைபெறும் திருமணம் கலப்புத் திருமணம் கலப்புத் திருமணம் என்ற பேரால் நடைபெறுகிறது. ஆனால், இதுவரை இதுபோன்ற கலப்புத் திருமண முறைகளுக்குப் பெரும் எதிர்ப்புகள் இருந்து வந்தன. இப்போது சாதாரணமாக எங்கிலும் இம்முறை நடைபெறுவதற்கு ஆரம்பித்துவிட்டன. ஆனால், இனிமேல் உண்மையில் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டுமானால், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் இருவருக்கும் நடைபெறும் திருமணம்தான் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டும். ஜாதிகளுக்குள் மிக உன்னத ஜாதி என்றும், கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து உள்ள ஜாதி என்றும் கூறப்படும் பார்ப்பனர் ஜாதிதான் தலைதூக்கி நிற்கிறது. அதற்கும் பார்ப்பனர் அல்லாத ஜாதிக்கும்தான் அதிக வேற்றமை கூறப்படுகிறது. இதையன்றி பார்ப்பனர் அல்லாத 'சூத்திரஜாதி' என்று கூறப்படுகிற ஜாதிதான் சமுதாயத்தில் மிகவும் கீழானது என்றும், சமுதாயத்தில் கடை ஜாதி என்றும் நிலை நாட்டப்படுள்ளது. இந்த வேற்றுமை ஒழிய வேண்டும். இவ்விரண்டு ஜாதிகளுக்கும் திருமணம் நடைபெறுவதைத் தான் கலப்புத் திருமணம் என்று கூறலாம்.

இப்போதுகூட மந்திரிகளும் அரசாங்கத் தலைவர்களும் ஜாதியைப் பற்றிக் கண்டித்துப் பேசி வருகிறார்கள். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் கூறுவதைச் செய்கையில் நடத்திக் காண்பிக்கப் போதிய திறன் இல்லாவிடினும் நாம் கூறுகிறதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளும் அளவுக்கு வந்துள்ளார்கள். மேலும் அவர்கள் கூறுவதை நம்புவதற்கும் முடியவில்லை. ஏனெனில் தேர்தல் நெருங்குதற்கு ஆரம்பிக்கவும், தேர்தலில் மக்களை வசப்படுத்தும் வழியில் ஈடுபட தந்திரமாகலாம். இதுவும் தேர்தல் பிரசார முறைகளில் ஒன்று என்று தான் கருத வேண்டியதாக இருக்கிறது.

ஏனெனில் அவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற உண்மை நோக்கத்துடன் கூறுவார்களானால் மதம், சாஸ்திர, புராணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.கடவுள்களை அழிக்க வேண்டும். கோவில்களை இடிக்க வேண்டும். ஆனால், இவர்களோ சாஸ்திர புராணங்களையும், கோயில்களையும், கடவுள்களையும் வைத்துக் கொண்டு எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?

எவற்றின் பேரால் ஜாதி உண்டாக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றனவோ அந்த மூலக்காரணத்தை அழிக்காமல் அவற்றை வைத்துக் கொண்டு, "ஜாதி ஒழிய வேண்டும்" என்று வாயினால் மட்டும் சொல்லிவிட்டால், ஜாதி ஒழிந்துவிடுமா? எனவே, அப்படிக் கூறுகிற வார்த்தை வீண் வாய் ஜால ஏமாற்று வித்தைக்கான வார்த்தைகள் என்றுதான் கருத வேண்டும்.

ஆனால், நாங்களோ ஜாதியை ஏற்படுத்திய மதம் ஒழிய வேண்டும். மதத்தை நிலைநாட்டும் கடவுள்கள், சாஸ்திர, புராணங்கள் ஒழிய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். ஆகவே, ஜாதி மட்டுல்ல, அதன் அடிப்படைகள் அத்தனையும் அழிக்கப்பட வேண்டும். அடியுடன் எரித்து சாம்பலாக்கப்பட வேண்டும். குப்பையில் போட்டு கொளுத்தப்பட வேண்டும். மூலைக்கு மூலை போட்டு உடைத்துத் தூளாக்கப்பட வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம்.


------------------------ 09.01.1956-இல் தூத்துக்குடியில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை.  “விடுதலை”, 18.01.1956

19 comments:

தமிழ் ஓவியா said...

தீபாவளி தமிழர் விழாவா? எப்பொழுது புகுந்தது தமிழ்நாட்டில்?



தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால், பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெரு நாள்... இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை.

சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை

- அ.கி. பரந்தாமனார் எழுதிய மதுரை நாயக்கர் வரலாறு - பக்கம் 433-434).

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே தீபாவளி நமது விழாவா? இப்பொழுது சொல்லுங்கள்!

இடையில் புகுத்த இந்த இடைச்செருகல் எப்படி நமது விழாவானது? ஒரே ஒரு கணம் சிந்தித்து புறக்கணிப்பீர்! புத்தியைப் பயன்படுத்துவீர்!

பொருள் இழப்பைத் தவிர்ப்பீர்!
பொழுதை வீணாக்காதீர்!

ஆரியர் திராவிடரை வீழ்த்திய நாளை திராவிடர்கள் கொண்டாடலாமா? கொண்டாடலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/89516.html#ixzz3GVYwxxh1

தமிழ் ஓவியா said...

சாமி த(க)ரிசனம்?


தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் ரெட்டி(48) தன் மனைவி, மகள், பெற்றோர் சகிதமாக திருப்பதி சென்று ஏழுமலை யானைத் தரிசிக்கக் காரில் சென்று கொண்டிருந்தார் ரேணிகுண்டாவையடுத்த மாமண்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது இவரது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதால் ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்ற 5 பேரும் பலியானார்கள். தரிசனம் செய்யச் சென்ற வர்கள்மீது ஏழுமலையானுக்குக் கரிசனம் இல்லையே! (அது என்ன செய்யும் அதுவெறும் சிலைதானே?)

Read more: http://viduthalai.in/e-paper/89515.html#ixzz3GVZfpJi8

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/89520.html#ixzz3GVZsOWch

தமிழ் ஓவியா said...

பெண்களின் திருமண வயது உயர்வை வரவேற்போம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றில் நீதிபதிகள் எஸ். மணிக்குமார், வி.எஸ். இரவி ஆகி யோர் ஒரு முக்கியமான கருத்தினைத் தெரிவித்தனர். பெண்களின் திருமண வயதினை 18லிருந்து 21ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் கருத்தாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தொலைக்காட்சிகளில் விவாதங்கள் களைகட்டத் தொடங்கின. நல்ல கருத்து என்று ஒரு தரப்பிலும் தேவையில்லாத கருத்து என்று இன்னொரு தரப்பிலும் ... அலசப்பட்டும் வருகிறது.

இப்பொழுது ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்குத் திருமண வயது 18 என்றும் சட்டம் இருக்கிறது.

ஒரு காலத்தில் பெண்கள் ருது ஆவதற்கு முன்பே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சாஸ்திர நம்பிக்கை இருந்ததுண்டு. பெண்கள் திருமண வயதை 13க்குக் கீழ்ப்படாமலும் 14 வயதுக்கு மேற்படாமலும் திருமணம் செய்விக்க வேண்டுமென்று சர் அலக்சாந்தர் முட்டிமன் ஒரு மசோதாவை அரசு சார்பில் கொண்டு வந்து 1925இல் நிறைவேற்றப்பட்டது.

வைதிகப் பார்ப்பனர்கள் பொதுவாக பெண்களின் திருமண வயதை உயர்த்தக் கூடாது என்பதில் பிடிவாதமாகவே இருப்பர். ஒரு பெண் ருது ஆவதற்கு முன் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பராசரர் கூறுகிறார். உங்கள் சட்டமோ அதற்கு மாறாகக் கூறுகிறது. நாங்கள் சட்டத்தை மீறி சிறைக்குச் சென்றாலும் செல்லுவோமே தவிர, ஒருக்காலும் சாஸ்திரத்தை மீறி ரௌரவாதி நரகத்திற்குச் செல்ல மாட்டோம் என்று கூறினார்கள் என்றால் நம் நாட்டின் சனாதனமும், வைதிகமும் எத்தகைய பிற்போக்குக் குணம் கொண்டவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் இப்படி பால்ய வயதில் கல்யாணம் செய்து வைப்பதால் சிறு வயதிலேயே பெண்கள் கருத்தரித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, நோயின் வடிவமாகக் காட்சி அளிப்பது குறித்து மிஸ்மேயோ என்ற அமெரிக்க மாது இந்தியாவைச் சுற்றிப் பார்த்து பல பிரசவ மருத்துவமனைகளையும் நேரில் கண்டு, கண்ணீர் வடித்துள்ளார்; அது மதர் இந்தியா என்ற நூலாகவே வெளி வந்தது.

9வயது சிறுமி கல்யாணமான மறுநாள் இடது கால் எலும்பு பிசகி விட்டது. கருப்பை கவிழ்ந்து விட்டது, உள்ளே புண்; 10 வயது சிறுமி; நிற்கக் கூட சக்தி இல்லை. பெண் குறியில் புண் உண்டாகி ரத்தம் பெருகி ஒழுகுகின்றது.

இன்னொரு 9 வயது சிறுமி; பெண்ணின் உறுப்பில் அதிக ரணம், இவளைத் தவிர இவள் புருஷனுக்கு இரண்டு மனைவிகள்; ஏழு வயது சிறுமி; சிற்றின்ப விஷயத்தில் புருஷனுடைய கொடுமை பொறுக்க முடி யாமல் உயிர் துறந்தார் என்று மேயோ எழுதியுள்ளார்.

இந்து - வைதிகத்தின் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டித் தாண்டித்தான் பெண்களுக்குத் திருமண வயது 18 என்று உயர்த்தப்பட்டது.

பெண் கல்வி என்பது நாளும் வளர்ந்து வருகிறது. 18 வயதில் திருமணம் என்று சொன்னால், அனேகமாக +2 என்கிற அளவில் அந்தப் பெண் கல்விக்கு மூடு விழா செய்து கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு பட்டப் படிப்பு ஒரு பெண் பெற வேண்டுமானால் கண்டிப்பாக 21 வயதை நெருங்க வேண்டும். மருத்துவம், பொறியியல் கல்லூரி படிப்புகளை முடிக்க வேண்டுமானால் இன்னும் கூடுதல் ஆண்டுகள் கூடத் தேவைப்படும்.

இந்தச் சூழலில் பெண்கள் வயது 18லிருந்து 21ஆக உயர்ந்தப்படுவது அவசியமும், நியாயமும், நேர்மை யுமாகும். பெண் என்றால் ஆணைவிட குள்ளமாக இருக்க வேண்டும். கணவனைவிட பெண் அதிகம் படித் திருக்கக் கூடாது; ஆண் சம்பாத்தியத்தை எதிர்ப்பார்த்து மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தான் பெண்ணின் திருமண வயதுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதைத் தான் கூறுகிறார். கணவனைவிட மனைவி அதிகம் படித்து அதிக வருவாய் உடையவராக இருந்தால் ஈகோ ஏற்படும் - எனவே அத்தகைய மனைவிகளை விட்டு வெளியேறுங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறவில்லையா?

இந்தப் பிற்போக்குத்தனங்களைப் பெண்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல; மேலாகவும் படிக்க வேண்டும்; பொருளாதாரத்தில் தன் காலில் நிற்க வேண்டும்; அந்தச் சூழல் வருமேயானால் பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தும் கொடுமை ஒழியும் என்பது தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.

எனவே மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத் திற்கு மாநில, மத்திய அரசுகள் பச்சைக் கொடி காட்ட வேண்டும் மகளிர் அமைப்புகளும் இதனை வரவேற்க முன் வர வேண்டுமென்று கேட்டுக கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/89522.html#ixzz3GVaAWkwh

தமிழ் ஓவியா said...

சுப்பண கவுண்டர்


கோபிக்கு அடுத்த கூகலூர் திருவாளர் கே. சுப்பண கவுண்டர் அவர்கள் காங்கிரசினிடமும், காந்தியினிடமும் அதிகப்பற்றுள்ளவராயிருந்தாலும் தீண்டாமை, வருணா சிரமம் ஆகியவைகள் ஒழிய வேண்டுமென்பதில் உண்மையாகவே பற்றும், உண்மையான ஊக்கமும், செல்வமும், செல்வாக்கும் கொண்ட ஒரு வேளாளப் பெரியாராவார்.

இவர் இரண்டு வாரத்திற்கு முன்பு தனது தோட்டத்துக் கிணற்றில் ஆதி திராவிடர்களைத் தண்ணீர் எடுக்க அனுமதித்ததினால் ஊரார் இவரைப் பகிஷ்காரம் செய்து இவர் வீட்டு வேலைக்கும், விவசாய வேலைக்கும் ஆள்களைப் போகாவொட்டாமல் தடுத்து விட்டார்கள்.

இதனால் வெளியூர்களில் இருந்து ஆள்கள் தருவிக்கப் பட்டு திரு. கவுண்டர் அவர்களின் குடித்தனம் கிரமமாய் நடைபெற்று வருகின்றதோடு அநேக அறிவாளிகளும், சில மிராசுதாரர்களும் திரு. சுப்பண கவுண்டருக்கு அனுகூல மாகவும் இருப்பதாகத் தெரிய வருகின்றது.

ஆனாலும், மூடப்பழக்கவழக்கங்களைக் கையாளும் அஞ்ஞானி களாயுள்ள சிலர் அந்த ஜாதிப் பெரியார்களான பட்டக்காரர்கள் என்பவர்களுக்குக் கடிதம் எழுதி கவுண்டர் வீட்டில் வேலை செய்யும் ஆட்களைச் சாதியைவிட்டு நீக்கும்படி கேட்டுக் கொள்வதாகப் பயமுறுத்துகின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

இந்த மாதிரியான காரியங்களில் எல்லாம் பட்டக்காரர் கனவான்கள் துணிந்து முன் வந்து அஞ்ஞானிகளுக்கு ஞான உபதேசம் செய்து இக்கால நிலைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாகரிகத்திற்கும் ஏற்றவண்ணமே நடந்து மக்களுக்கு சுதந்திரமும், சமத்துவமும் கிடைக்கும்படி செய்வதன்மூலம் தங்கள் பட்டத்திற்கும், ஸ்தானத்திற்கும் பெருமை விளைய செய்வார்கள் என்றே கருதுகின்றோம். கடைசியாக இவ்வளவு மேலான ஒரு காரியத்தைத் துணிந்துமேற்போட்டுக் கொண்டு செய்த திரு. சுப்பண கவுண்டர் அவர்களையும், இவ்விஷயத்தில் அவருக்கு உதவி செய்து துணையாய் இருக்கும் மற்ற கனவான்களையும் போற்றிப் பாராட்டுகின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 17.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbi0Lpk

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஒருவன் சமதர்மத்திற்கு உழைப்பதானால் அவன் முதலில் ஓர் உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று;

இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று இருப்பதை ஒழிக்க வேண்டும் - கிள்ளி எறிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை.

இதைச் செய்யும் வரையில் எவ்விதப் பொருளாதாரச் சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர். நினைப்போர், ஆசைப்படுவோர் மனத்தில் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbpO59D

தமிழ் ஓவியா said...

தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகத்சிங்

1. (a) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கை களுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம்மகாநாடு மனமாரப் பாராட்டுகின்றது.

(b) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக் கொள்கையும் கவர்ந்து கொள்ளும் படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத் தோடு வரவேற்கின்றது.

(c) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும், பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப் படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகின்றது.

விடுதலை சுதந்திரம்

2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கை களை ஒழித்து தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி பூமிக்கு உடையவன் - உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவைகளான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுகத் துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சம சுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.
பெண் உரிமை

3. (a) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டுமென்பதாக இம்மகாநாடு திட்ட மாய்க் கருதுகின்றது. (தீ) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் எனவும், தேகசக்திக்கும் செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற் காகக் கர்ப்பத்தடை முறைகளை அவசியம் கையாள வேண்டும் என்றும் இம்மாகாநாடு தீர்மானிக்கின்றது.

நம்பிக்கையில்லை

4.

1. மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கை களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினாலும்,

2. தனது செய்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்புமற்றுப் போவதாலும்,

3. வருணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழைய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாலும்

4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடைசெய்து வருவதாலும், 5. சமதர்மகொள்கைகளுக்கு விரோதமாய் இருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

குடிஅரசு - தீர்மானங்கள் - 12.04.193

Read more: http://viduthalai.in/page-7/89546.html#ixzz3GVbxfyee

தமிழ் ஓவியா said...

திருநெல்வேலி ஜில்லா 4ஆவது சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு.எஸ். இராமநாதன் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதாரகுமாரர். அவர் எம்.ஏ., பி.எல்., படித்துப் பட்டமும், சன்னதும் பெற்று, சென்னையில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர்.

ஒத்துழையாமையின் போது வக்கீல் வேலையையும் தனது சம்பாதனையையும் விட்டு வெளியேறி சிறைச் சென்றவர். இவர் சிறைச் சென்ற காலம் எது என்றால், இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மருமகனை போல் அளவுக்கும், தகுதிக்கும் மீறின மரியாதைகளும், சுக போகங்களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது.

திரு. இராமநாதன் அவர்கள் தலையில் கூடையும், கையில் மண்வெட்டியும் கொடுக்கப்பட்டு தெருவில் ரோடு போடும் வேலை செய்தவர். சிறை அதிகாரிகளால் பல நிர்ப்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல், தனி அறையில் அதாவது கூனுகொட்டடியில் போட்டு மக்களைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் இல்லாமல் வதைக்கப்பட்டவர்.

இதற்காக இவரைப்பற்றி மாத்திரம் சட்டசபையில் பலகேள்விகள் கேட்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். தவிர, சென்னை மாகாஜன சங்க காரியதரிசியாயும், தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் காரியதரிசி யாயும் இருந்தவர். இவ்வளவும் தவிர தமிழ் , கேரளம், கர்நாடகம் ஆகிய நாடுகளுக்கு கதர் போர்டு நிர்வாகக் காரியதரிசியாகவும் இருந்தார்.

திரு. காந்தியவர்களுக்கு உற்ற சீடராகவும் இருந்து, திரு. காந்தியவர்களால் மிகவும் போற்றப்பட்டவராகவும் இருந்தவர் இவ்வளவும் அல்லாமல், யாதொரு சுயநலப் பிரதிப்பிரயோஜனமும் எதிர்பாராமலும், தன் கைப்பொறுப்பிலேயே சகல செலவும் செய்து கொண்டு இவ்வியக்கத்தில் உழைப்பவர்.

அன்றியும் அவரது கொள்கையில் மயக்கமும், குளறுபடியும், சமயத்திற்குத் தகுந்த அர்த்த வியாக்கி யானமும் இல்லாமல் மிகத் தெளிவும், ஒரே நிலையும் உள்ளவர். ஆகவே, இப்படிப்பட்ட ஒருவர் இந்து மகாநாட்டுக்குக் கிடைத்திருப்பதால் மகாநாடு உண்மைச் சுயமரியாதை மகாநாடாக நடந்து உண்மையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு உண்மை யான வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை.

குடிஅரசு - சொற்பொழிவு - 12.04.1931

Read more: http://viduthalai.in/page-7/89545.html#ixzz3GVcU9gBT

தமிழ் ஓவியா said...

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் அய்ரோப்பிய ஒன்றியத்தை இந்திய அரசும் பின்பற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!


சென்னை, அக்.18_ அய் ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப்புலி கள் அமைப்பு மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் விடு தலைப்புலிகள் மீது விதித் திருந்த தடையைத் தற் போது விலக்கிக் கொண் டிருக்கிற அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், இந்திய அரசின் நடவடிக் கைகளையும் விமர்சித்துள் ளது.

இந்திய அரசு, இலங் கைப் பிரச்சினையில், ஒரு சார்பான அணுகுமுறை களைக் கொண்டிருக் கிறது என்றும், எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசு முன்வைக்கும் கருத்து களில் நம்பிக்கை இல்லை என்றும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளனர். விடுதலைப் புலிகள்மீது சிங்கள அர சும், இந்திய அரசும் எவ் வாறு அவதூறுகளைப் பரப்பிவந்துள்ளன என் பதை இதிலிருந்து சர்வ தேச சமூகத்தால் அறிந்து கொள்ள முடியும்.

சிங்கள இனவெறியர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருப்பதால், மிக இலகு வாக சர்வதேச நாடுகளின் ஆட்சியாளர்களை அணுகி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்ப முடிகிறது. ஒரு தரப்பு கருத்துகளை மட் டுமே கேட்கிற வாய்ப் பைப் பெற்ற நாடுகள், அவற்றை உண்மையென நம்பி, விடுதலைப் புலி களுக்கு எதிரான முடி வெடுக்கும் நிலையும் உரு வாகிறது. சிங்கள அரசுக் குத் துணையாக இந்திய அரசு விடுதலைப் புலி களுக்கு எதிரான அவ தூறுகளைப் பரப்பி சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளது.

அதனடிப் படையில், அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடு தலைப் புலிகள் மீது தடைவிதித்திருந்தது. தற்போது, சட்டபூர்வ மாக விசாரணை நடத்தி யதில் அய்ரோப்பிய ஒன் றியத்தின் நீதிபதிகள் அக் கருத்தை மாற்றிக் கொண்டு, புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளனர்.

இது சர்வதேச சமூகத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத் தும் என்பதுடன், புலி களின் மீது ஒரு புதிய பார் வையை ஏற்படுத்தும் என் றும் நம்புகிறோம். அய் ரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி பிற நாடுகளும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகும்.

அந்த வரி சையில், இந்திய அரசும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண் டுமென்றும் புலிகளின் மீதான தடையை விலக் கிக் கொள்ள வேண்டு மென்றும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக் கிறது.

அத்துடன், விடு தலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் எனவும் இந்திய அரசு அங்கீகரித்து ஏற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது. _ இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/89531.html#ixzz3GVcl7000

தமிழ் ஓவியா said...

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள்.

நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.

ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..!

இன்னும் சிலரோ ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்கு வார்கள். அதில் புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத் தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழு வதும் தரகு பெறுவார்கள். இது தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page2/89472.html#ixzz3GVdyJIZk

தமிழ் ஓவியா said...

மும்பையைத் தொடர்ந்து பெங்களூருவிலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்ற விளம்பரம்


2013 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டிட நிறுவனம் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் என்று விளம்பரமிட்டு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு புறப் பட்டதும் இவ்விளம்பரத்தை நீக்கி விட்டது. தற்போது பெங்களூருவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வேதிக் ஆசிரமம் என்ற பெயரில் ஒரு குடியிருப்புத் தொகுப்பு வீடுகளைக் கட்டிவருகிறது. இதன் விளம்பரத்தில் வேதிக் ஆசிரம வீடுகள் பார்ப்பனர்களுகாக உருவாக்கப்பட்டது என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுக் கப்பட்டுள்ளது.

பெங்களூரு--அய்தராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 1200 தொகுப்பு வீடு களைக் கொண்ட வேதக்கிராமத்தை தனியார் நிறுவனம் ஒன்று கட்டி வரு கிறது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப்பகுதி முழுவதுமே தொகுப்பு வீடுகளைக் கட்டி வருகிறது, இச்செயற்கை கிராமம் பார்ப் பனர்களுக்கு மாத்திரமாம்.

இது குறித்து இந்த கட்டுமான நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ராவ் தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் பார்ப்பனர் என்பது சாதியல்ல; அது ஒரு நல்ல எண்ணஓட்டம் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் குறியீடாகும். இதை பார்ப்பன சாதி என்று பார்க்காமல் பார்ப்பன அய்டியாலஜி (சித்தாந்தம்) என்று கூறுவதுதான் சரியானது. மேலும் இது போன்ற செயற்கை கிராமங்களின் மூலம் சமூகத்தில் எந்த சச்சரவும் இல்லாமல் அமைதியான சூழலில் வாழும் நிலையை நாம் உருவாக்க முடியும். தற்போதுள்ள சூழலில் அனைத்துப் பிரிவு மக்களும் பல்வேறு சிந்தனை கொண்ட வர்கள் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். அதனால் அங்குள்ள வர்களின் பழக்கவழக்கங்களினால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

இது போன்ற தனிக் குடியிருப்புகள் கட்டும் போது சச்சரவற்ற நிலையில் அமைதியான சூழலில் வாழ வகை யுண்டு. இதனால் பல நன்மைதான் உண்டு, வேண்டுமென்றால் பல்வேறு பிரிவு மக்கள் அவர்களுக்கு என்று குடி யிருப்புகளைக் கட்டிக்கொள்ளட்டும், இதில் எங்கும் பாகுபாடு என்ற பேச்சிற்கே இடமில்லை, ஒரே எண்ண ஓட்டம் கொண்டவர்கள் ஓரிடத்தில் வாழ்வது எப்படி பாகுபாடு ஆகும்? அடுத்தடுத்து இது போன்ற செயற்கைக் கிராமங்கள் உருவாக வேண்டும். அப்படி உருவாகும் போது சமூகம் அமைதியான சூழலில் வாழும் நிலை ஏற்படும் என்று கூறினார். இந்த திட்டம் ஆரம்பித்த உடனேயே 90 சதவீத வீடுகள் விற்றுத் தீர்ந்து விட்டன இதுவே எங்களின் திட்டத்திற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/89475.html#ixzz3GVeHrlS9

தமிழ் ஓவியா said...

பொதுபலசேனா -இலங்கை ஆர்.எஸ்.எஸ். - ஆர்.எஸ்.எஸ். இந்திய பொதுபலசேனா

சில நாட்களுக்கு முன்பு இலங்கையின் சிங்கள பயங்கரவாத இயக்கமான பொதுபலசேனா இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. மேலும் கீழை நாடுகளில் உள்ள பல்வேறு பவுத்த இயக்கத்துடன் பேசி வருவதாகவும், அடுத்த ஆண்டு வைசாக் அன்று இலங்கையில் பவுத்த இந்து அமைப்புகள் இணைந்து மாநாடு ஒன்று நடத்தவிருப் பதாகவும் செய்திகள் வந்தது.இதில் முக்கியமான அமைப்பு ஒன்று தானாகவே முன்வந்து கரம் கோர்த்துள்ளது, அந்த அமைப்பு கடந்த ஆண்டு பர்மாவில் உள்ள ரெஹிங்கோ இஸ்லாமிய கலவரத்தில் மறைமுகத்தொடர்பு கொண்ட மியன்மா 969 அமைப்பு என்ற அமைப்பாகும்.தெற்காசியப்பகுதியில் சமத்துவமற்ற அமைதியற்ற சூழலை உருவாக்க பொதுபலசேனா தயாராகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஈரான் பகுதிகளை இணைத்து அகண்ட பாரதம் என்ற கனவு காண்கிறேன், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்று கூறுகிறார். அதாவது தற்போது சில பழமைவாதக் குழுக்களால் மேற்கு மற்றும் மத்திய ஆசியப்பகுதியில் அமைதி குலைந்து இருப்பது போன்ற சூழ்நிலையை தெற்காசியாவிலும் உருவாக்க முனைவது இவர்களின் பேச்சிலும் போக்கிலும் நன்றாகத்தெரிகிறது. முக்கியமாக 2009 இலங்கையில் போர் முடிந்த பிறகு பொதுபலசேனா ஒரு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதில் இலங்கையில் உள்ள இஸ்லாமியர் மற்றும் இதர மதத் தவர் சிங்கள நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், என நேரடியாக மிரட்டும் தொனியில் அறிக்கை ஒன்றை விட்டிருந் தது. அன்றிலிருந்தே இலங்கையில் இஸ்லாமியர் மீதான விரோதப்போக்கு மெல்ல மெல்ல அதிகரித்து 2013- அக் டோபரில் கலவரத்தில் முடிந்தது.

அதா வது இந்தியாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இலங்கையில் இயங்கும் பொதுபலசேன இரண்டும் சிறுபான்மை மதத்தினருக்கு ஒரு அச்சுறுத்தலை தெற்காசியப்பிராந்தியத்தில் உருவாக் குவதை விரும்புகிறதோ என்றே தோன்று கிறது. ஒரு பழமைவாத மத அமைப்பிற்கு மற்றொரு பழமைவாத மத அமைப்பு என்றுமே ஒரு தீர்வாக இருக்காது. போட்டிக்கு போட்டி என்பது சமூகத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கி பிராந்தியத்தையே அச்சத்தில் வாழும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். இதை நாம் மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுகளில் கண்டு வருகிறோம். அங்கு அளப்பரிய எண்ணெய் வளம் இருப்பதால் பிற நாடுகளின் தலையீடு இருக்கிறது. ஆனால் இங்கே அழிந்து வரும் இயற்கை வளம் மற்றும் மூடப்பழக்கங்களில் உழலும் மக்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் இப்பழமை வாதிகளின் போக்கு மிகவும் மோசமான சூழலை உருவாக்கிவிடும். பொதுபல சேனாவின் இந்த வெளிப் படையான அறிக்கைக்கு இந்துத்துவத் தலைவர்களின் சிலர் முக்கிய காரணமாக இருக்கின்றனர். முக்கியமாக சுப்பிர மணிய சுவாமி மற்றும் சில வட இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் இலங்கையில் இஸ்லாமியத்தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதே போல் தமிழ் நாட்டில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் பாகிஸ் தானின் உளவாளிகள் என்று பத்திரி கையில் செய்திகள் வெளியாகின. மோகன் பகவத்தின் அக்டோபர் 3-இல் பேசிய பேச்சில் தெளிவாக இரண்டு வார்த்தைகளை குறிப்பிட்டார். அதாவது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தீவிர வாதிகளின் நடமாட்டம் உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புலிகள் இன்றும் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளை தொடரத் தயாராக இருக்கிறார்கள் என்று சிங்கள பத்திரிகை ஒன்று கடந்த செப்டம்பர் முதல் வாரம் செய்திவெளியிட்டிருந்த்து.

அதாவது இலங்கையில் பாதுகாப்பு மாநாடு நடந்து கொண்டு இருக்கும், போது இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது தீவிரவாதிகளின் நடமாட் டம் இருக்கிறது, புத்தமதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி வைக்கப்பட்டால் ஒரு உண்மை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் இருக்கும் தேரவாத புத்தம் என்பது பார்ப்பனிய வகைப்பட்ட புத்தவாதம். இன ஒதுக்குதலையும், இனவெறியையும் உள்ளே வைத்து செயல்படும் பவுத்தம் உன்மையான பவுத்தமல்ல. இங்கே தாழ்த்தப்பட்ட மக்களை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கரின் பெயரைக்கூறி சில சாதி அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சிக்கு பலியாகி இருப்பதுவும், தேசியம்-பாரதம்-இந்துப்புனிதம் என்று பேச ஆரம்பித்திருப்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும். இதில் ஒரு புறம் தமிழர்களை இந்துத்துவ மயமாக்க முற்படுவதும், மறுபுறத்தில் பவுத்த பேரினவாதத்திற்கு துணை போவதும் கவனிக்கப்படவேண்டியவை. இவ்விரண்டு பேரினவாத அமைப்பு களின் முக்கிய நோக்கம் தமிழர் அழிப்பு என்பதில் மய்யம் கொண்டு இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டியது இங்கே அவசியமாகிறது. அதாவது இத்தனை நாட்களாக தனித்தனியாக இயங்கிவந்த மதவாதக்குழுக்கள் ஆட்சி அதிகாரம் முழுமையாக கையில் வந்த பிறகு பிராந்தியத்தையே தங்கள் கைவசம் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கி விட்டது.

Read more: http://viduthalai.in/page2/89476.html#ixzz3GVePkkBC

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகும் உயிர் வாழச் செய்யுறாங்க....

போடி ஜே.கே. பட்டியில் சுந்தரபாண்டியன் என்பவர் திடீரென்று இறந்து போகவே கண்தானம் வழங்க சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடனே ரகுநாகநாதனுக்கு போன் பண்ணுங்க.. எனக் கூறியது வியப்பாக இருந்தது. அவர்களிடம் கேட்ட போது.... இறந்த பின்பும் உயிர் வாழத்தான் கண் கொடை என்றனர். சிறிது நேரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்களும் வீட்டிற்கு வந்தனர். சற்று நேரத்திலே அறுவை சிகிச்சை செய்து சுந்தரபாண்டியன் கண்களை கொண்டு சென்றனர். சரி ரகுநாகநாதன் யார் என்று கேட்டபோது, போடி பி.எச். ரோட்டில் குருதி, விழி, உடல் கொடைக் கழகம் நடத்தி வருகிறார்.

இனி ரகுநாகநாதன்....

இருக்கும்போது நாம் பலருக்கு உதவியாக இருக்கின்றோம். இறந்த பின் மண்ணுக்கு உரமாவது தவிர வேறு பயன் ஒன்றும் தருவதில்லை. ஆனால், இறந்த பின்பும் நம் உடல் உறுப்புகள் உடல் வாழ்வதற்கும், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித உடல் சம்பந்தமாக பயிற்சி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த நோக்கம் பிடித்துப் போனதால் குருதி விழி, உடல் கொடைக் கழகம் என்ற பெயரில் குருதி, கண், உடல் உறுப்புகள் கொடை பெற்று மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றோம். 10 பேர் கொண்ட நிர்வாகக் குழு மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு என்றார். இறந்த பின்பும் பிறர் உயிர் வாழ விழி, உடல் கொடை செய்ய ரகுநாதகநாதனை தொடர்பு கொள்ள - 98421 20321.

Read more: http://viduthalai.in/page2/89481.html#ixzz3GVf9hbPq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏனிந்த குழப்பம்

தீபாவளியின்போது தமிழ்நாட்டில் நாராய ணனையும், மகாலட்சுமி யையும், வழிபடுவார்கள். நேபாளத்தில் லட்சுமி யையும் ராஜஸ்தானில் ராமரையும், மத்தியப் பிரதேசத்தில் குபேர னையும், வழிபடுவர் வங் காளத்தில் காளிதேவி யையும், மராட்டியத்தில் மகாபலி சக்ரவர்த்தியை யும் வழிபடுகிறார்களாம்.

கிறிஸ்துமஸ் என்றால், ரம்ஜான் என்றால் சம்பந் தப்பட்ட மதங்களைச் சார்ந்தவர்கள் ஒரே மாதிரி யான தகவல்களைத்தான் சொல்லுவார்கள்; உலகம் முழுவதும் ஒரே நிலை தான் அவர்களிடத்தில். இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஏனிந்த குழப் பம்! குழப்பம்தானே இந்து மதம் என்கிறீர்களா? அது வும் சரிதான்.

Read more: http://viduthalai.in/page1/89439.html#ixzz3GVgjGCJP

தமிழ் ஓவியா said...

வெற்றிக்கு ஒரே ஒரு பாதை அல்ல; பல உண்டு

நாம் அனைவரும் அன்றாடம் நமது நலம் விரும்பிகளான பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்ப ஆலோசகர்கள் என்ற பலரும் கடுமையாக உழைத்தால், பொறுப்பான வகையில் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டால், எதையும் உரிய நேரத்தில் செய்தால் வெற்றி நம் வீட்டுக் கதவைத் தட்டும் என்று கூறுவர்.

கேட்டுப் பழகிய காதுகள் நம் முடையவை; இதனை ஏற்று, அதனைப் பின்பற்றி நாளும் சோர் வறியாமல் உழைத்து வெற்றிக் கனியைப் பறிக்கின்றவர்கள் பல ருண்டு, உண்மைதான்.

ஆனால், இந்த மாதிரி ஒரே வழியைப் பின்பற்றாமல் - பல்வேறு சூழ்நிலைகளாலும் - நெருக்கடி - நிர்ப்பந்தங்களாலும் வழமையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வாய்ப்பில்லாதவர்களிலும் பலர் வெற்றிப் படிக்கட்டுகளின் மீதே ஏறி நின்று, மற்றவர்களுக்குத் தாங்களும் கூட எடுத்துக்காட்டானவர்கள் - ரோல் மாடல்கள் தான் என்று காட்டுபவர்களும் உண்டு என்பதை நாம் மறந்திடக் கூடாது.

பள்ளிக்கூடம், கல்லூரிப் படிப்புகளை முழுமையாக முடிக்காமல், பெரிய பெரிய ஆய்வுப் பட்டங்களான முனைவர், அதற்கு மேல் உள்ள பட்டங்களைப் பெறாதவர்கள் உலகில் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க சாதனையாளர்களாக நம் காலத்திலேயே திகழ்கிறார்களே, அவர்கள் பெற்றது பெரு வெற்றி அல் லாமல் வேறு என்ன?

கணினித் துறையில் மிகப் பெரிய சாதனையாளராக உயர்ந்து நிற்கும் மைக்ரோசாஃப்ட் (“Microsoft’’) நிறுவனர் பில்கேட்ஸ் இடையில் கல்லூரிப் படிப்பை நிறுத்திய ஒரு(Dropout) தானே!

அவர் எத்தனைப் பெரிய பில்லியனர்! அவரும் அவரது வாழ்விணையர் மிலிண்டா பில்கேட்ஸ் தங்களது சொத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளையாக்கி, அந்தப் பொருளை, உலகின் கொடிய நோயான எய்ட்ஸ் (Aids நோயை ஒழிக்க மிகப் பெரிய அளவில் ஓர் இயக்கத் தினையே நடத்துவதன் மூலம்; உலகின் தொண்டறச் செம்மல்களாக உயர்ந் துள்ளனர்!

அதுபோலவே, அதிகம் படிக்காத, கடவுள் நம்பிக்கை அற்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவன - உரிமையாளர் ஸ்டீவ்ஜாப்ஸ் என்ன Ph.D. பட்டமா வாங்கியவர்?அவர் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் வேலைக்கு மனு போட்டால் அவரை நமது கல்வி அமைப்புகள் விரிவுரையாளர் பதவிக்குக்கூட தேர்வு செய்ய மாட்டாவே! இதுதான் இன்றைய படிப்பறிவுக்கும், பட்டறிவு - சுதந்தரச் சிந்தனைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளி!

ஆப்பிள் - 6, ஆப்பிள் 6 - பிளஸ், என்ற அண்மையில் வெளியான புது வகைக் கைப்பேசிகள் செல்போன் களுக்கு உலக சந்தையில்தான் எவ்வளவு கிராக்கி! காத்துக்கிடந்து போட்டி போட் டுக் கொண்டு அதனை விலை கொடுத்து வாங்குவதில் நான் முந்தி, நீ முந்தி என்ற போட்டி - அதுவும் ஜப்பான் போன்ற தொழில் வளர்ச்சியில் முந்தியுள்ள நாட்டினரும்கூட! இந்த வெற்றியின் ரகசியம் எதில் உள்ளது?

புரட்சிக் கவிஞர் சொன்ன இரு வரிகளில் உள்ளது என்பது நமது எளிய கருத்து.

அறிவை விரிவு செய் - அகண்டமாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு உலகை!

ஒவ்வொரு முறை மாற்றம், புதுமைக்குமேல் புதுமை செய்திட்ட நிலை - கவிஞரின் வரிகளுக்கு சான்று அல்லவா?

எனவே தேர்வில் அதிக மதிப் பெண் பெறவில்லை அல்லது முதல் முயற்சியிலேயே வெற்றிகிட்டிட வில்லை என்று மனமுடைந்து விரக்தியில் தற்கொலை முயற்சி அல்லது உலகமே இருண்டு விட்டது போன்ற கற்பனையின் உச்சி, விரக்தியின் விளிம்புக்குச் சென்று, வெறுப்பினால் மன உளைச்சல் எதுவும் கொள்ளாமல் வெற்றிக்கான இந்தக் கதவு மூடினால், இன்னொரு திறக்கப்படும் கதவைக் கண்டு வாழ்வினை வெளிச்சம் உள்ளதாக ஆக்கி, விரக்தி இருட்டை விரட்டி அடித்து, வெள்ளி முளைப்பதைக் கண்டு, வீறு நடை போடுவோம் என்று எழுந்து நடவுங்கள் - துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை அள்ளி அணையுங்கள்!



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/89429.html#ixzz3GVgtoi7F

தமிழ் ஓவியா said...

சுக வாழ்வில் இல்லை

ஒரு நாட்டின் பொது வாழ்வும், ஒற்று மையும் அந்நாட்டின் ஒவ்வொரு வகுப்பின் முன்னேற்றத்திலும், திருப்தி யிலும் தான் இருக்கிறதே ஒழிய, ஏதோ ஒரு வகுப்பின் மேம்பட்ட சுக வாழ்வில் இல்லை.
(விடுதலை, 8.9.1950)

Read more: http://viduthalai.in/page1/89427.html#ixzz3GVh8sHL1

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை

கடவுள் என்பது திருடர் களின் இரதத்திற்காக செய்யப் பட்ட கடையாணிப் போன்றது. - தந்தை பெரியார்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத் திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே. - பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை - குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்குக் கேவலம் ஒரு புழுவைப் படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான

கடவுளைப் படைக்கத் தெரியும். - ஒரு மேனநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே - வால்விச்மன்

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GViXNuyR

தமிழ் ஓவியா said...

மதத்திற்கு எதிராக..

தன்னுடைய அடிமைத் தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந் தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான்.

தொழிற்சாலை அமைப் பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான். சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான்.

இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது.

மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

Read more: http://viduthalai.in/page1/89465.html#ixzz3GVitM4QG

தமிழ் ஓவியா said...

குழந்தை மணம்


பெண்ணை ருதுகாலத் திற்கு முன்பு தக்கவரனுக்குக் கல்யாணம் செய்து கொடாத தந்தையும், மனைவியை ருது காலத்தில் புணராத கணவனும், கணவன் இறந்த பின்பு தாயைக் காப்பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப்படுவர்.
-மனுதர்மம் - அத்தியாயம் 9

குலம், நல்லொழுக்கம் இவைகளால் உயர்ந்தவரை யும், பெண்ணுக்குத் தக்க ரூபம் உடையவனாயும் இருக்கின்றவனுக்குத் தனது பெண் 8 வயதுக்கு உட்பட்டு இருந்தாலும் விதிப்படி விவா கம் செய்து கொடுத்து விட லாம்.
- மனுதர்மம் அத்தியாயம் 9

8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்ப வன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப் பெண்ணை விவா கம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவா கம் செய்து கொடுப்பவன் பிரம்மலோகத்தையும் அடை கின்றான். அதற்கு மேற் பட்டுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரௌர வாத நரகத்தை அடைகிறான்.
- பராசரர்

ஆஜ்மீர் - மொர்வாராத் தொகுதியில் இருந்து டில்லி சட்டசபைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ராய்சாகிப் ஹரிபிலாஸ் சாரதா என்பார் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயது சீர்திருத்த மசோதா” என்ற ஒன்றைக் கொண்டு வந்தார் (1.2.1927).

இது குறித்து வைதிகப் பார்ப்பனர்கள் பூமிக்கும் வானுக்கும் வானரமாய்த் தாவிக் குதித்தார்கள். நாக்கை நான்கு முழம் நீட்டி முழங்கும் அரசியல் பிரமுகரான திரு வாளர் சத்தியமூர்த்தி அய்யர் அப்பொழுது கூறினார்.

“அரசாங்கம் இந்துக்களு டைய விவாகத்தில் தலை யிட்டால் இந்துச் சமூகமே கெட்டு இந்து மதமே பாழாகி விடும். பெண்களுக்கு 10,12 வயதுக்கு முன்னமேயே விவாகம் செய்துவிட வேண் டும். இல்லையேல் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படு வோமா? அல்லது உங்கள் சட்டத்திற்குப் பயப்படு வோமா?” என்று கூறினார் என்றால் அவர்களின் வைதி கப் பித்துக்கு என்ன அளவு கோல் இதைவிடத் தேவை?

கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு இர்வின் வரை சென்று பார்த்தனர் 12 வயதுக்குப் பிறகு விவாகம் செய்தால் மதமே கெட்டுப் போய் விடும் என்று வைசி ராய்க்குச் சங்கராச்சாரியார் தந்தியே கொடுத்தார்.

“சாரதா சட்டம் என்பது மதப் பிரச்சினை, வகுப்புப் பிரச்சினை சம்பந்தப்பட்ட தல்ல. இது வைத்தியம் மற் றும் சுகாதாரம் சம்பந்தப்பட் டது என்று கூறி அவாள் கூக் குரல்களைக் குப்பைக் கூடை யில் ஒதுக்கித் தள்ளினார்.

சர்தார் பகதூர் காப்டன் ஹீராசிங் பிரார் என்ற பஞ்சா பியர் இதுகுறித்து இந்தியா சட்டசபையில் பேசினார்.

“நம் நாட்டில் சிசு மரணம் அதிகமாய் ஏற்படுவது பல கீனமான குழந்தைகளைப் பெறுவதால் தான்; இதற்குத் தாயும், தந்தையுமே காரணம். நிலைமை இவ்விதமிருக்க பெண்களும், ஆண்களும் தக்க வயதும், பருவமும் அடைந்த பின்னரே மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சித்தால், உடனே வைதீகர்களுக்கு ஆத்திரம் பொங்கி, அவர்கள் இதைப் பலமாகக் கண்டிக்கப் புறப்பட்டு விடுகின்றனர்.

9 அல்லது 10 வயதுள்ள ஒரு பெண்ணையும் பத்து அல்லது 12 வயதுள்ள ஓர் ஆணையும் மனைவி புருஷன் என அழைப்பது உங்களுக்கு வெட்கமில் லையா? என்று கேட்டபோது “இல்லை - இல்லை” என்று பார்ப்பனர்கள் சத்தம் போட்டனர். என்றால் பார்ப் பனர்களின் சட்டசபையில் பிற்போக்குத்தனத்தை எந்த வெட்கம் கெட்ட மையினால் எழுதித் தொலைப்பது?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/89581.html#ixzz3GazSY22g