Search This Blog

29.4.15

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னார் என்று கூறுவது அறியாமை! தவறான செய்தி!

மனித நேய இயக்கம் திராவிடர் கழகம்: மதவெறி கும்பல் அறியுமா?

-

திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும்! சொல்வது யார்? காந்தியையே சுட்டுக்கொன்ற, பாபர் மசூதியை இடித்த, தேவாலயங் களைத் தகர்த்த, இஸ்லாமியர்களை, கிறித்தவர்களைக் கொளுத்திக் கொன்ற மதவெறி அமைப்புகளைச் சேர்ந்த மதவெறியர்கள்.

பலமுறை தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட வர்கள்.

திராவிடர் கழகத்தை உருவாக்கிய தந்தை பெரியார் என்றால் என்ன பொருள் தெரியுமா?

பெரியார் = மனிதநேயம்

மனிதத்தின் மறுபெயர் பெரியார்!

மனிதனை மானமும் அறிவும் உள்ளவனாக மாற்றுவதே தன் வேலை யென்று பொதுவாழ்விற்கு வந்தவர்.

எனக்கு நாட்டுப்பற்றோ, மொழிப் பற்றோ, மதப்பற்றோ, சாதிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது. மனிதப் பற்றே என் இலக்கு என்றவர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த மண்ணின் உரிமையாளர்க ளான திராவிடர்கள் ஆரிய பார்ப் பனர்களால் அடக்கி ஆதிக்கம் செலுத்தப்படுவதை எதிர்த்தும் திரா விட மக்கள் இழிமக்களாக நடப் பிலும், சாஸ்திரங்களிலும் நடத்தப் படுபடுவதைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தைத் தொடங்கினாரே ஒழிய. திராவிட மக்கள் மட்டும் வாழ்ந்து மற்றவர்கள் விரட்டப்படவேண்டும் என்பதற்காக அல்ல.

இதை பெரியாரே சொல்கிறார் பாருங்கள்

பார்ப்பனர்கள்இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் செயல்திட்டமும் அது வல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பது தான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

தவிரவும் பார்ப்பனர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்கள் அனுசரிக் கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும் நாங்கள் எதிர்க்கி றோம். இது அவர்கள் மனம் வைத் தால் மாற்றிக்கொள்வது பெரிய காரியம் அல்ல.

விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பா னேன்? ஆகவே உள்ள பேதம் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபடுகின்றேன். நம்மிடையே பேதவுணர்ச்சி வரக்கூடாது என்பதில் எனக்குக் கவலையுண்டு.

எனவே முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலையுண்டு.

காலம் எப்போதும் ஒன்றுபோல இருக்க முடியாது. நம்மில் இரு தரப் பிலும் பல அறிஞர்களும் பொறுமை சாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்பிற்கிடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர்கழக பின் சந்ததிகளும், பார்ப்பனர்களின் பின் சந்ததிகளும் இப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆகவே, அதிருப்திகளுக்குக் கடின மானவற்றை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம். எனவே கால வளர்ச்சிக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று சென்னை இராயப்பேட்டை, இலட்சுமிபுரத்தில் பார்ப்பனர் சங்கக் கூட்டத்திலே (5.1.1953) பேசியவர் பெரியார் அவர்கள்.

                                                               -----------------------------------------------(விடுதலை: 8.1.1953)
அது மட்டுமா?

16.1.1946 மாலை 4.30 மணிக்கு சின் னாளப்பட்டியில் பொதுக்கூட்டம். பெரியார் பேசிக்கொண்டிருக்கிறார். பெரியாரை எதிர்க்கும் காலிகள் கூச்சலிடுகிறார்கள். என்றாலும் ஒலி பெருக்கி உதவியால் கூச்சலைப் பொருட்படுத்தாது பெரியார் தொடர்ந்து பேசுகிறார். காலிகள் ஆத்திரம் மேலிடகற்களை வீசு கிறார்கள். உடனே பெரியார் சால் வையை தலையில் பாதுகாப்பிற்காகக் கட்டிக் கொண்டு பேசினார். ஆனால் காவல்துறையினர் கேட்டுக்கொண் டதை மதித்து கூட்டத்தை முடித்தார்.

இது எதைக்காட்டுகிறது? பெரியார் எதற்கும் அஞ்சாத வீரர் என்பது மட்டுமல்ல; காவல் துறையை மதித்து நடக்கும் கட்டுப்பாடு உடையவர்; சட்டத்தை மதிக்கும் கண்ணியமான வர் என்பதல்லவா?

12.5.1946 இல் முதலாவது மாகாண கறுப்புச் சட்டைப்படை மாநாட்டுப் பந்தலை, வைத்தியநாத அய்யர் தூண்டுதலில் காலிகள் கொளுத்திய போதும், கருஞ்சட்டைத் தொண்டர் களை (பெண்கள் உள்பட) காலிகள் அடித்து நொறுக்கிய போதும், நிதா னம் இழக்காமல் பொறுமையைக் கடைப்பிடித்தார் பெரியார்.

அன்றைக்கு கருஞ்சட்டைத் தோழர் 20 ஆயிரம்பேர் கூடியிருந் தனர். பெரியார் கண்ணை அசைத் திருந்தால் எதிரிகள் முற்றிலும் அழிக் கப்பட்டிருப்பர்.

வலிமையிருந்தும் வீரம் இருந்தும் மனிதம் காத்தவர் பெரியார். அதனால் தான் திரு.வி.க. அவர் கள், ஈரோட்டில் திராவிட நாடு படத்தை திறந்து வைத்து திராவிட மக்களுக்கு நல்வழிகாட்ட பெரியார் அவர்கள் நம் அடிமை வாழ்வை மாற்றி இன்ப வாழ்வை அமைத்துக் கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார்.

காந்தியாரையும் மிஞ்சிய அஹிம் சர்வாதியாகவும் சாக்ரட்டீசை மிஞ்சிய அளவுக்கு சமுதாய சீர் திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார். என்று புகழ்ந்தார்.

                                                             ----------------------------(30.10.1948 விடுதலை) 

கடலூர் மஞ்சக்குப்பத்தில் முட்டை ஓட்டில் மலத்தை நிரப்பி பெரியார் மீது வீசினர். அதன் பின்னர் செருப்பையும் பாம்பையும், பாலம் அருகில் வீசினர். அப்போது தொண்டர்களைக் கட்டுப்படுத்தி அமைதி காத்தவர் பெரியார். இதுவரை பெரியாரோ திராவிடர் கழகமோ எந்த வன்முறையிலாவது ஈடுபட்டார்கள் என்று யாராவது ஆதாரத்துடன் கூறமுடியுமா?

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னார் என்று கூறுவது அறியாமை! தவறான செய்தி!

அதுவொரு வடநாட்டுப் பழ மொழி என்பதும் பலமுறை விளக்கப் பட்டுள்ளது.

பெரியார், ஆதிக்கம் எங்கிருந் தாலும் அதை எதிர்த்தார். மனித நேயத்திற்கு எதிரானது ஆதிக்கம் என்பதால் அதைச் செய்தார்.

பார்ப்பனர்கள் சாதியாலும், சாஸ்திரத்தாலும், கல்வியாலும், பழகும் முறையாலும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதோடு, இழிவு படுத்தியதாலும் அவர்களை எதிர்த்தார்.

பெண்களை அடிமைப்படுத்து வதை, பெண்ணுரிமையைப் பறிப் பதை, பெண்களை போகப்பொரு ளாக, பிள்ளை வெறும் கருவியாகக் கருதுவதை எதிர்த்தார்.

சாதியை எதிர்த்தார், மூடநம் பிக்கையை எதிர்த்தார். பதவியை வெறுத்தார், ஏற்றத்தாழ்வை மறுத்தார். சமதர்மத்தை வளர்த்தார்.
பெரியார் இயக்
கமும் தொண்டர்களும் அதையே செய்கின்றனர். தன் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு தன்காசைச் செலவிட்டு இழிவையும், ஏச்சையும் பரிசாகப் பெற்று மனிதங்காக்கும் திராவிடர் கழகம் ஒரு மனிதநேய இயக்கம் மறவாதீர். அப்படிப்பட்ட இயக்கத் தைத் தடைசெய்யச் சொல்பவர் களைத் தடைசெய்ய வேண்டும்!

  ----------------------------மஞ்சை வசந்தன் ------------”விடுதலை” 29-04-2015

Read more: http://www.viduthalai.in/page-2/100558.html#ixzz3YhEsOer8

0 comments: