Search This Blog

13.8.17

யோக்கியமாக சிந்திப்பீர்! கிருஷ்ண அவதாரத்தின் யோக்கியதை என்ன?

ஆயர்குல மாதர்கள் வழக்கம் போல் யமுனா நதிக்குக் குளிக்கப் போனால் நீரும் அவர்கள் அறியாதபடி பின் தொடர்ந்து, அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு ஆற்றிலிறங்கிக் குளித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அவர்களின் ஆடைகளை எடுத்து மரத்தின் மீது ஏறி வைத்துக் கொண்டு, அவர்களை எல்லாம் ஆடையின்றி நிர்வாணமாகப் பரிதவிக்கவிட்டு, நீர் மரத்திலிருந்து கொண்டே, அவர்களை இரு கையையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டால் தான் தருவேனென்று சொல்லுவதும், அவர்களும் வேறு வழியில்லாமல், உம்மிஷ்டப்படிச் செய்யவும், நீரும் அவர்களின் மர்மஸ்தானத்தைத் தரிசித்துப் பரவசமடைந்தவுடன் அவர்களின் புடைவைகளைத் திருப்பிக் கொடுத்ததுமான செயலிலிருந்தும் உமது வெட்கங்கெட்ட காமாந்தகாரமான செய்கையும், திருட்டுத்தனமும் விளங்கவில்லையா?
கிருஷ்ணன்:- நான் கிருஷ்ண அவதாரம் எடுக்க வேண்டியதற்கு முக்கியக் காரணம், மதுரை மாநகரில் கம்சன் என்னும் அரசன் செய்துவந்த கொடுமைகளையும், அஸ்தினாபுரியை அரசாண்டு வந்த துரியோதனாதிகள் செய்துவந்த கொடுமைகளையும் பொறுக்க முடியாமல், பூதேவி என்னிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டதால், அவள் கஷ்டத்தைத் தீர்க்க வேண்டி, நான் வசுதேவருக்கும், அவர் பத்தினி ரோகிணிக்கும் புத்திரனாய்ப் பிறந்து எம் தாய் மாமனாகிய கம்சனையும் கொன்று பாண் டவர்களையும், கவுரவர்களையும், சூதினாலும், தந்திரத் தினாலும் அவர்களுக்குள்ளேயே சண்டையிடுமாறு செய்து, டில்லி மாநகரம் என்னும் குருக்ஷேத்திரப் பூமி யில் அவ்விருவருக்குமுள்ள பதினெட்டு அக்ரோணி சேனைகளையும், பதினெட்டு நாளில் மடியவைத்து, என் மனைவியின் பூமிப் பாரத்தையும் தீர்த்து வைத்தேன். இதுதான் நான் கிருஷ்ணாவதாரம் எடுத்ததற்கு முக்கியக் காரணம்.
வினா- நீர் அடிக்கடி பூமிப்பாரம் தீர்க்க வேண்டியதற் காகப் பூலோகத்தில் வந்து பிறப்பதைப் பார்க்கப் போனால், ஒரு வியாபாரி தன் கையில் பிடித்த துலாக்கோல் எந்தப் பக்கத்தில் கூடுதல் குறைச்சலாகின்றதோ அந்தப் பக்கத்தைச் சமப்படுத்தி வைத்துக் கொள்வதுபோல், பூவுலகத்தின் பாரங்களைச் சமப்படுத்த அடிக்கடி நீர் வந்து பிறப்பதாகத் தெரிகிறது. அப்படியிருந்தாலுங்கூட, நீர் பூமிப்பாரம் தீர்க்க எடுத்த அவதாரமெல்லாம் பூலோகத்தின் கண்ணுள்ள ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா முதலிய பல கண்டங்களில் ஒன்றாகிய, ஆசியாக் கண்டத்தின் ஒரு பாகமாகிய பாரத பூமியில்தானே உம் மனைவிக்குப் பூபாரம் தீர்க்க முடியாமல் போவதும், அதைத் தீர்த்து வைக்க நீர் அவதாரபுருடனாய் பூமியில் பிறந்து பல கஷ்ட நஷ்டங்களை அடைவதுமான காரியம் நிகழ்கிறது! இது உம்மோடு மட்டும் நின்றபாடில்லாமல் உம் மைத்துனராகிய சிவபெருமான் கூட இந்திய நாட்டில் அதிலும் தென் கோடியிலுள்ள தமிழ்நாட்டில் 64 அவதாரம் எடுத்திருக்கின்றார்? அதன்றி உம் மகன் பிரமனும் மன்மதனும் கூடத் தென் நாட்டில்தானே அவர்களின் திரு விளையாடல்களைப் புரிந்திருக்கின்றார்கள்? ஏன் உங்களில் யாராவது ஒருவர் மேல்நாட்டுக்குப் போய் உங்களின் திருவிளையாட்டைக் காட்டியிருக்கக் கூடாது? அங்கே போய் உங்கள் நாடகத்தை நடித்தால், செருசலத்திலுள்ள யூதர்கள், கிறிஸ்து பெருமானைச் சிலுவையில் வைத்து, தலையில் முள் முடிதரித்துக் கால், கைகளில் ஆணியடித்து வைத்தது மாதிரி அடித்து விடுவார்கள் என்ற பயமா என்ன?
விடை:- அதற்கெல்லாம் பயந்து கொண்டு நாங்கள் இந்திய மண்ணில் பிறக்கவில்லை. பின் எதனால் மற்ற நாடுகளுக்குப் போகாமல் இந்தியாவில் பிறந்தோம் என்றால், உலகத்திலேயே இந்திய நாடுதான் மற்ற தேசங்களைவிடப் புண்ணிய பூமியென்று அழைக்கப்படுவதனாலும், ஒவ்வொரு தெருக்களிலும் கோவில் குளங்கள் நிறைந்ததும், அக்கோவில்களில் குடி, கூத்தி, கொலை, சூதுவாது முதலிய அதரும கைங்கரியத்தை நடத்தி வரும் நன்நாடு ஆனதனாலும், கல்விக்கரசியாகிய சரஸ்வதி பிறந்து உலகத்திலேயே அதிகப்படியாக நூற்றுக்கு மூன்று வீதம் படித்த பண்டிதமணிகளால் நிறைந்த நாடானதனாலும், செல்வத்திற்கரசியாகிய சீதேவி பிறந்து அரைவயிற்றுக் கஞ்சிக்கு அன்னக்காவடியெடுக்கும் புண்ணிய நாடானதினாலும், வீரம் செறிந்த சத்திதேவி பிறந்து பக்தியிற் சிறந்து முக்தியை நோக்கும் மக்களைப் போல் எலும்புக் கூடும், நரம்பும், தோலுமாய் நடைப்பிணங்களாய்த் திரியும் பாரத புத்திரர்கள் பிறந்த நாடானதனாலும், ஆண், பெண் என்ற இரண்டு சாதியை இரண்டாயிரத்திற்கு அதிகமாக உற்பத்தி பண்ணும் இயந்திர நாடு ஆனதனாலும், உலக மக்களிடத்திலே காணப்படாத, தீண்டாமை, பாராமை, நெருங்காமை, தெருவில் நடக்காமை முதலிய புனித கைங்கரியத்தை உருவகப்படுத்தித் திருத்தொண்டு புரிந்த நாடானதனாலும், ஒருவருக்கொருவர் மொழியொற்றுமை இன்றிப் பன்னூற்றுக்கணக்கான படைகளையுடைய பாரத நாடானதனாலும், மண்ணில் மடிந்து போன மக்கள் பார்ப்பனர் மூலமாகத் தலைமுறை தலைமுறையாக இவ்விடமிருந்து, சாப்பாடு சம்ரட்சணையைப் பெற்றுவரும் செல்வம்பொருந்திய நாடானதனாலும், நாற்பது கோடி மக்களும் சுயமரியாதையற்று அடிமைத்தளையின் ஆபரணத்தைப் பூண்ட நாடானதனாலும், மூடநம்பிக்கைக்கும், முட்டாள் தனத்திற்கும் முதல் பரிசு பெற்ற புகழ் வாய்ந்த நாடானதனாலும், தெய்விகம் மறைந்து வைதிகம் ஓங்கி மக்களை மாக்களாக்கும் திருவருள் சுரந்த நாடானதனாலும், பார்ப்பானுக்குப் பாக்கியத்தையும், பாட்டாளி மக்களுக்குக் கஷ்டத்தையும் கொடுத்து வரும் கடவுளர் பிறந்த நாடானதனாலும், இன்னும் இதுபோன்ற புனிதகைங்கரியத்தைக் கைக் கொண்ட நன்னாடானதனாலும் நாங்கள் இதில் வந்து பிறந்தோமே அன்றி வேறு காரணத்திற்காகவல்ல!
வினா- ஆகையினால் நீர் அவதரிக்கும் போதே கடவுள் பிரிவினை, சமூகப் பிரிவினை, ஜாதிப்பிரிவினை, பாஷைப் பிரிவினை, கோத்திரப் பிரிவினை, உடற்பிரிவினை, உடைப் பிரிவினை, உணவுப் பிரிவினை, தலைப் பிரிவினை, கல்விப் பிரிவினை, ஒழுக்கப் பிரிவினை, உயர்வு - தாழ்வுப் பிரிவினை, முதலிய பல்வேறு பிரிவினைகளை உள்ளடக்கியதனால், நீர் உம் தாயார் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே கொலை, களவுகள், காமம், சூது, வாது முதலிய கொடிய பாதகங்களைச் செய்து தண்டனை அடைபவர்கள் வசிக்கும் காராக்கிரமாகிய ஜெயிலில் பிறந்தீர் போலும். அல்லாமலும் உம்முடைய தந்தையாகிய வாசுதேவர் உம்மைத் திருட்டுத் தனமாகக் கொண்டு போய் இடையச் சேரியாகிய ஆயற்பாடியில் போட்டு விட்டு வரவும், கோகுல வாசிகளின் தலைவனாகிய நந்தகோபாலன் கண்டெடுத்துத் தன் மனைவி யசோதையிடத்தில் கொடுத்து வளர்த்து வந்ததனால் தான், தாயில்லாப் பிள்ளையாயிற்றே என்ற அனுதாபத்தினால் ஆயர்பாடியிலுள்ள சில பெண்கள் உமக்குத் தங்கள் முலைப்பாலைக் கொடுத்துப் பிரியமாய் வளர்த்து வரும் போது, அதிலொருத்தியாகிய பூதனி (பூதகி) என்ற பெண்ணின் ஸ்தன்னியத்தைக் கூடக் கடுமையாகக் கடித்து அவளுக்கு மரண வேதனையை உண்டாக்கி விட்டீர் அல்லவா?
விடை:- ஆம் வாஸ்தவந்தான். மார்பில் பால் சுரக்காவிட்டால் சிறுவர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் நானும் செய்திருக்கின்றேனே அன்றி வேறொன்று மில்லையே!
வினா- அதனால் தான் பெண்கள் உமக்குப் பால் கொடுக்காதபடி மாட்டுப்பாலைக் கொடுத்து வளர்த்து வந்திருக்கின்றார்கள். அப்படி வளர்த்துத் தான் உம்மையும் மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் மாடு மேய்க்கப் புலன்களுக்கு அனுப்பியதால், தங்க நிறம் போன்ற திருமேனியுடைய இராஜகுமாரனாக இருந்தும், அந்த வெயிலிலும் கானலிலும் அலைந்து திரிந்ததனால் இயல்பான பொன்னிறம்மாறி, சரீரம் கருத்துக் கரிக்கட்டை மாதிரி ஆனதனால்தானே உம்மைக் கோபாலகிருஷ்ணன் என்று பெயரிட்டு அழைத்து வந்தார்கள். (அதன் பொருளாவது: கோபசு, பாலன் சிறுவன், கிருஷ்ணன் கருப்பன் என்றபடி, மாடு மேய்க்கும் கருத்தப் பையன் என்பதுதான் அதன் அருத்தமாகும்). அப்படி இருந்தும் உமது பிறவிக் குணமாகிய திருட்டுப் புத்தி மட்டும் உம்மை விட்டபாடில்லை. சேரியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும், யாருங்காணாதபடி உட்புகுந்து, அவர்கள் வைத்திருக்கும் பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றைத் திருடித் தின்றுவிட்டு ஒடுவதைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்து, உரலில் கட்டிவைத்துத் தயிர் கடையும் மத்தால் உம்மை அடித்திருக் கின்றார்கள். அப்படியெல்லாம் பட்டும் புத்தி வராமல், ஒவ்வோர் இடையர் வீட்டிலும் புகுந்து புருடனில்லாத சமயம் பார்த்து அப்பெண்களை யெல்லாம் கற்பழித்திருக்கிறீர் அல்லவா? இதுதானா நீர் பூவுலகில் பிறந்து பூமிபாரம் தீர்க்க வந்த நேர்த்தி?
விடை:- அவர்கள் என் மீது மட்டற்ற காதல் கொண்டு என்னை விரும்பி வந்தபடியால் தான் நான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களின் காம இச்சையை நிறைவேற்றி வைத்தே னேயல்லாது, நான் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கவில்லை. இதனை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
வினா:- ஒகோ! அப்படியா சங்கதி! ஆனால் நீர் அவர்களை "பூனை மாமிசத்தைத் தள்ளினதுபோல்" தள்ளிவிட்டீராக்கும் என்றல்லவோ எண்ணினேன். அப்படியே நீர் சொல்லியது உண்மையாக இருக்குமானால், ஆயர்குல மாதர்கள் வழக்கம் போல் யமுனா நதிக்குக் குளிக்கப் போனால் நீரும் அவர்கள் அறியாதபடி பின் தொடர்ந்து, அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு ஆற்றிலிறங்கிக் குளித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அவர்களின் ஆடைகளை எடுத்து மரத்தின் மீது ஏறி வைத்துக் கொண்டு, அவர்களை எல்லாம் ஆடையின்றி நிர்வாணமாகப் பரிதவிக்கவிட்டு, நீர் மரத்திலிருந்து கொண்டே, அவர்களை இரு கையையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டால் தான் தருவேனென்று சொல்லுவதும், அவர்களும் வேறு வழியில்லாமல், உம்மிஷ்டப்படிச் செய்யவும், நீரும் அவர்களின் மர்மஸ்தானத்தைத் தரிசித்துப் பரவசமடைந்தவுடன் அவர்களின் புடைவைகளைத் திருப்பிக் கொடுத்ததுமான செயலிருந்தும் உமது வெட்கங்கெட்ட காமாந்தகார மான செய்கையும், திருட்டுத்தனமும் விளங்கவில்லையா?
விடை:- ஆம், அந்த வாலிப காலத்தில் எப்படிப்பட்டவர்களும் தவறி நடப்பது இயற்கைதானே! அதையெல்லாம் குற்றமாகப் பாவிக்கலாமா? உலகத்தில் யார் தான் நெறியுடன் பிறந்தது முதல் இறக்கிறபரியந்தம் நேர்மையுடன் நடந்திருக்கின்றார்கள்?
விடை:- நீர் சொல்வது வியப்பாக இருக்கின்றதே! சாதாரண மக்கள் தான் தவறிழைத்தாலும் உம்மைப் போன்ற பரத்துவம் வாய்ந்த கடவுள் கூட அப்படிச் செய்வது முறையாகுமா? என்றுதான் கேட்கின்றேன். சரி, இது போகட்டும். பிறந்தது முதல் உமக்குப் பாலூட்டிச் சீராட்டிப் பாதுகாத்து வந்த நந்தகோபன் மகன், பலராமனுடன் எப்பொழுதும் பொறாமையால், நீர் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும் அவன் தலையில் சுமத்திவிடுவதும், பலராமனுடைய தங்கையாகிய சுபத்திரையைத் துரியோதனனுக்குக் கொடுக்க வேண்டுமெனச் சொன்னதற்காக நீர் அதை மறுத்து, அர்ச்சுனனுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்லி ஒருவருக்கொருவர் சண்டை யிட்டு மண்டையுடைத்துக் கொண்டிருக் கின்றீர்களே. இதானது உங்களுடைய சகோதரத் தன்மைக்கு ஏற்புடைத் தாகுமா என்றுதான் கேட்கின்றேன்.
விடை:- ஆம், வாஸ்தவந்தான். சுபத்திரை பலராமனுக்கு மட்டும் தங்கையல்ல. எனக்கும் அவள் தங்கைதான் என்னை நந்தகோபன் பெறாவிட்டாலும், பெற்றவன் ஒரு பிதா, வளர்த்தவன் ஒரு பிதாவென்ற நீதி வாக்கியத்தின்படி, நான் பிறந்தது முதல் என் தாய் தந்தையரைப் பார்க்காமல் நந்தகோபனையும், அசோதையரையுமே என் சொந்தத் தாய் தந்தையாக நினைத்துக் கொண்டிருந்தபடியால், அவர்கள் பெண்ணும் எனக்குச் சகோதரிதான் ஆகவேண்டும். ஆதலால், திரியோதரனுடைய சுபாவ குணங்களும், செய்கையும் எனக்குப் பிடிக்காதபடியால் தான் அவனுக்குக் கொடுக்கும்படி வாதாடினேன். இதில் என்ன குற்றம்?
கிருஷ்ணாவதாரம்-சந்தேகமானது
வினா:- இதில் குற்றமொன்றுமில்லை. நீர் நல்லெண்ணத்துடன் தான் அர்ச்சுனனுக்குக் கொடுக்கும்படி சொன்னீர்.  ஆனால், எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்து குறுக்கிடுகிறது. அதாவது, முதலில் நீரே பலராமனாகப் பிறந்திருப்பதாக உமது சாட்சியத்தில் சொல்லி இருக்கின்றீர். இப்போது கிருஷ்ணனாகப் பிறந்ததாகவும் சொல்லுகின்றீர். இதில் நீர் கிருஷ்ணனாகப் பிறந்த வரலாறுக்கும், பலராமனாகப் பிறந்த வரலாறுக்கும், மலைக்கும் மடுவுக்குமுள்ள எவ்வளவோ வித்தியாசங்கள் காணப்படுவதும் அன்றி, நீங்களிரு வரும் உருவத்தாலும், குணத்தாலும், செய்கையாலும் மாறுபட்டவர் களாகவே காணப்படுகின்றீர்கள். அப்படி இருப்பதால், பரத்துவம் வாய்ந்த அவதாரம் பலராமானா? அல்லது கிருஷ்ணனா? என்ற சந்தேகத்திற்கு இடந்தருகிறதல்லவா? ஆகையால் இச்சந்தேகத்தைப் பற்றி என்ன சமாதானம் சொல்லப் போகின்றீர்?
விடை:- மவுனம் (பதில் சொல்லவில்லை)
வினா:- இதற்குத் தகுந்த காரணம் சொல்ல முடியாமல் மவுனம் சாதிப்புதனால் என்ன விளங்குகிறது என்றால், உமது சாட்சியமே நம்பிக்கையற்றதும், பொருத்தமற்றதுமாகவே இருக்கின்றது. உமது இராமாவதாரத்தில், பரசுராமனும், ராமனும் சண்டையிட்டதாகச் சொல்லியிருக்கின்றீர். இதில் நீங்களிருவரும் போர் தொடுத் திருக்கின்றீர்கள். நீர் எடுத்திருக்கும் பதினொரு பிறப்பில் ஒன்றை ஒளித்து விட்டு, பத்து அவதாரம்தான் என்று சொன்னீர். அல்லாமலும், இதில் நாலாவது அவதாரத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டீர். இதனால் உமது அவதார மகிமையில் கொஞ்சங்கூட நம்பிக்கை வைக்க இடமில்லாமலும் போய்விட்டது. அல்லாமலும், உம் தாய் மாமனாகிய கஞ்சனையும் நயவஞ்சகமாய்க் கொலை செய்திருக்கின்றீர். குருகுலத்து மன்னர்களையும் உம்முடைய கபடநாடகச் சூழ்ச்சியால், ஒருவருக்கொருவர் பிரிவினையை உண்டாக்கிப் பாண்டவர் பக்கம் நீர் சேர்ந்துகொண்டு, தருமமே உருவாக அவதரித்திருந்த தரும புத்திரன் மனத்தைக் கலைத்துத் தன் மாமன் சகுனியுடன் பஞ்சமா பாதகத்தில் ஒன்றாகிய சூதாட்டத்தை ஆடச் செய்தும், அதன் நிமித்தமாகத் தனது தர்மபத்தினியாகிய திரவுபதியை இராஜ சபையில் கொண்டு வந்து நிறுத்தி அவள் துகிலை உரிந்து நிர்வாணமாக விட்டு மானபங்கப்படுத்தியும், பாண்டவர் களைப் பதினான்கு வருடம் காட்டில் விரட்டிவிட்டு அவர்கள் பதினான்கு வருடம் கழித்துத் திரும்பி நாட்டுக்கு வந்தும், அவர்களுக்கு உரிய இராச்சியத்தைத் திருப்பிக் கொடுக்காமல், தூது செல்வதாகச் சென்று அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டிவிட்டு, குருக்ஷேத்திரத்திரம் என்று சொல்லக்கூடிய டில்லியில் பதினெட்டு நாள் வரையில் கடும்போரிட்டுப் பதினெட்டு அக்ரோணி சேனைகளையும் மடியவைத்து வேடிக்கைப் பார்த்துத்தானா நீர் இந்தப் பூமிப்பாரந் தீர்க்கவேண்டும்? "அரிதரிது மானிடராதலரிது" என்ற முதியோர் மொழிப்படி, மானிட ஜென்மமாகப் பிறக்கவேண்டியதற்குப் "புல்லாய்ப் பூடாகிப் புழுவாகி, கல்லாய், மரமாய், மிருகமாய், பறவை" முதலிய எத்தனையோ பிறவிகள் எடுத்துக் கடைசியில் மனிதப் பிறவி பிறக்கவேண்டி இருக்கின்றது. அப்படியிருக்க, இந்தப் பூமியிலுள்ள பாரத்தைக் குறைக்க, இந்தப் புனிதமான மானிடப் பிறவி தானே உமக்குக் கிடைத்தது. என் உலகத்தில் எண்ண முடியாத கல்மலை, கரிமலை, பனிமலை, மண்மலை, பொன்மலை, கருங்கல்மலை, செம்புராகல்மலை, சிலேட்டுமலை, சலவைக் கல்மலை, சுண்ணக் கல்மலை முதலிய எத்தனையோ வகை மலைகள் இருக்கின்றனவே! அவற்றில் சிலவற்றை எடுத்தெறிந்துவிட்டால் பூமிப்பாரம் தன்னால் குறைந்து போய்விடாதா? இதற்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்? அல்லது இதனால் உமக்காவது போற கதிக்கு நல்ல கதி கிடைத்ததா? ஒன்றுமில்லையே! கடைசியில் "தன்னப்பம் தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்" என்பது போலத் தானே நீர் செய்த கபட நாடகத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல், காட்டில் வேடன் கை வில்லாலடிபட்டு நடு ஆற்றில் எறியப்பட்டு, சாளக்கிராமம் என்னும் கல்லாய்க் கிடந்து நாளது வரையில் உருண்டு கிடப்பது தானே மிச்சம். சரி, அது எப்படியாவது போகட்டும். இந்த வியாச்சியத்தைப் பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?
விடை:- என் மைத்துனர் சிவபெருமான் சொன்னது தான் எனக்கும் தெரியுமேயல்லாது வேறொன்றும் தெரியாது.
வினா:- சரியிருக்கட்டும், உம் கிருஷ்ணாவதாரம் இத்துடன் முடியட்டும். அடுத்த அவதாரத்தையும் சொல்லி வாரும். அதையும் கேட்டுவிடுவோம்.
--------------------- "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்" நூலிலிருந்து

12.8.17

வந்தே மாதரம்! வாழ்த்துப்பாடலா?இசுலாமியர்களுக்கு இந்தப் பாடலின் மீது என்ன வெறுப்பு?

“வந்தே மாதரம்!” வாழ்த்துப்பாடலா?

உத்திரப்பிரதேச மாநிலம் ஜாமியத் உலாமா இ ஹிந்த் என்னும் இசுலாமியர் களின் அமைப்பு மூன்று நாள் மாநாட்டினை டியோ பாண்ட் எனும் இடத்தில் நடத்தி, ‘வந்தே மாதரம்’ பாடலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாடல் இசுலாத்துக்கு எதிரானது என்றும் தீர்மானம் கூறியது. அம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம்யெச்சூரி போன்றவர்கள் பங்கு கொண்டனர்.
‘வந்தே மாதரம்’ பாடல் தேசபக்திப் பாடல் என்றும், தாய்நாட்டை வணங்குகி றோம் என்பது பொருள் என்றும், அதனை எதிர்த்துத் தீர்மானம் போட்ட மாநாட்டில் எப்படி உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்கேற்கலாம் என்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார்க் கூடாரம் கூச்சல் போடுகிறது.
1) “வந்தே மாதரம்” பாடல் என்பது என்ன?
ஒரு தேச பக்திப் பாடலை இசுலாமி யர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அப்படி யென்றால் இசுலாமியர்களுக்குத் தேசபக்தி இல்லையா? சங்பரிவார் வகையறாக்கள் கூறி வருவது மெய்தானோ என்ற அய்யப் பாடு மக்கள் மத்தியில் நிலவுதல் இயற் கையே!
அந்தப் பாடல் எங்கிருந்து வந்தது? அதனை எழுதியவர் யார்?அதன் உள்ள டக்கம் என்ன?  என்பதுதான் முக்கியமாகும். வங்காளத்தில் கண்டபுரத்தில் 1838  ஆம் ஆண்டில் பிறந்து  1894-இல் மரணமுற்ற பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப் பனரால் வங்கமொழியில் எழுதப்பட்ட ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் இடம் பெற்ற பாடலே இந்த “வந்தே மாதரம்”
2) இசுலாமியர்களுக்கு இந்தப் பாடலின் மீது என்ன வெறுப்பு?
ஆனந்த மடம் நாவலில் காணப்படும் கதையம்சமும், உரையாடலும் இசுலாமியர் களுக்கு விரோதமானவை என்கிற அள வில் மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்கிற உணர்வுதான் இந்த நாவலின் அடி நாதமாகும்.
நாவலின் கதை நாயகன் பவாநந்தன் வங்காள முசுலிம் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்கப் படை திரட்டுகிறான்.
மகேந்திரன் என்ற ஒருவனைச் சந்தித்து தமது படையில் சேருமாறு அழைக்கின்றான். தாய்நாட்டை முசுலிம்களிடமிருந்து காப் பாற்ற வேண்டும் என்று கூறுகிறான். ஏன் முசுலிம் மன்னனின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்?  மகேந்திரனின் கேள்வி இது.
நமது மதம் போச்சு, நமது வருணாசிரம தருமம் போச்சு. ஏன், இப்பொழுது நமது உயிரக்குக்கூட ஆபத்து வந்து விட்டது. இந்த முசுலிம்களை விரட்டாவிட்டால் நமது இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது!  என்றெல்லாம் வீராவேசம் பேசுகிறான்.
உன் ஒருவனால் இதனை சாதிக்க முடியுமா?  மீண்டும் மகேந்திரனின் வினா இது. பவாநந்தன் பேசுகிறான். “வந்தே மாதரம்” பாடலிலிருந்து சில வரிகளை மட்டும் கம்பீரமாகப் பாடுகிறான். அதற்கு விளக்கமும் கூறுகிறான். “ஏழு கோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடி கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரத மாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதுதான் அந்தப் பாடல் வரிகளின் பொருள்.
மகேந்திரன் மசியவில்லை. முசுலிம் களின் வீரத்தையும், படைபலத்தையும் எடுத்துக் கூறுகிறான். விடவில்லை பவா நந்தன்.
“முசுலிம்களா? அவர்கள் பயங்காளிகள், கடைந்தெடுத்த கோழைகள். உயிருக்கு ஆபத்து நேரும்போது, ஆங்கிலேயர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட மாட்டார் கள். வியர்வை வடியத் தொடங்கும்போது முசுலிம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் வெடிகுண்டு விழுந்தால் போதும், முசுலிம்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!  என்கிறான் கதை நாயகன் பவாநந்தன். ஆனாலும் மகேந்திரன் அவன் விரித்த வலையில் வீழ்ந்தான் இல்லை.
முயற்சியைக் கைவிடவில்லை - அந்த முசுலிம் எதிரி. மறுநாள் என்ன செய்கி றான்? ஆனந்த மட ஆலயத்துக்கு அழைத் துச் செல்லுகிறான். ஒரு விஷ்ணுவின் விக்கிரகம், அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் உருவம்!
“யார் அந்தத் தேவி” கேட்கிறான் மகேந் திரன். “ஆ! அவள்தான் நம் பாரத மாதா. நாமெல்லோரும் அந்த பாரத மாதாவின் புத்திரர்கள்”  என்கிறான் கோயில் பூசாரி.
அடுத்து ஒரு காட்சி “ஜெகத்தாத்ரி” ஒளிமயமாகக் காட்சி அளிக்கும் ஒரு சிலை காட்டப்படுகிறது.
ஆதியிலே நமது பாரத மாதா இப்படித் தான் ‘ஜெகஜோதி’யாகக் காணப்பட்டாள். இப்பொழுது எப்படியிருக்கிறாள் தெரி யுமா? இதோ ஒரு காட்சி! நிர்வாணமாகக் காட்சியளிக்கும் ஒரு கருங்காளி. யார் இவள்?  கேட்கிறான் மகேந்திரன்.
“அன்று ஜெகஜோதியாகக் காட்சிய ளித்த நமது பாரத மாதா இப்போழுது இந்த அலங்கோலத்திற்கு ஆளானாள்” என்று கூறுகிறான்.
மூன்றாவது ஒரு காட்சி: பத்து கரங் களுடைய துர்க்காதேவி! “நமது எதிரிகள் முசுலிம்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால் நமது அன்னை பாரததேவி இந்தக் கண் கொள்ளாக் காட்சியைத் தருவாள்” என்றான் ஆனந்தமட பூசாரி.
அதோடு விடவில்லை. மூளையில் காவி சாயத்தை ஏற்ற வேண்டுமே! லட்சுமி, சரஸ்வதி விக்கிரகங்களையும் மகேந்தி ரனுக்குக்காட்டி, “பத்துக் கரங்களையுடைய துர்க்காவே” தாமரைமலர்மேல் வீற்றிருக் கும் லட்சுமிதேவியே! கல்வித் தாயான சரஸ்வதியே! போற்றி! போற்றி!!” என்கிற பூசாரி புளகாங்கிதமாகப் பாடி ஆனந்த தாண்டவமே ஆடுகிறான்.
இவ்வளவு வரைதான் தாக்குப்பிடிக்க முடிந்தது மகேந்திரனால். ஆம்! தடுமாறி விடுகிறான்  பவாநந்தன் விரித்த வலை யிலே முற்றிலுமாக சரணாகதி அடைந்து விடுகிறான்.
படைக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார் கள். திரட்டப்படுபவர்கள் ஒவ்வொருவரும் சனாதன தருமத்தைக் காப்பாற்றுவதற்காக உற்றார் உறவினரை மறந்து, உயிர்த்தியாகம் செய்யக்கூடத்தயார் என்று சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அந்தப் ‘புரட்சிக்காரர்கள்’ அனுப்பப் பட்ட கிராமப் பகுதிகளில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்களாம்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம் நாவலில் இப்படி வருணிக்கிறார்:
“சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா?  என இளைஞர்களைத் திரட் டிச் சென்று முசுலிம் கிராமங்களுக்குச் சென்று தீயிடுவார்கள். முசுலிம்கள் நாலா திசைகளிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். முசுலிம்களின் சொத்துக் கள் சூறையாடப்படுகின்றன. கொள்ளை யடிக்கப்படும் பொருள்கள் விஷ்ணு பக் தர்களுக்குக் காணிக்கையாக்கப்படுகின் றன. பொருள்கள் கிடைக்கக் கிடைக்க இந்தப் படையில் தாங்களும் சேர்ந்து கொள்வதாக பலரும் முன் வருகிறார்கள்.
ஆனந்த மடம் நாவல், எட்டாம் அத்தி யாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றி சொல்கிறது.
“திடீரென ஒரு முழக்கம். முஸ்லிம் களைக் கொல்லு!  கொல்லு! என ஒரே ஆர்ப்பரிப்பு! வந்தே மாதரம்”  என்ற பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.
அடுத்து ஒரு குரல் “சகோதரர்களே! மசூதிகளையெல்லாம் தரை மட்டமாக்கி, அந்த இடத்திலே ராதா மாதவர் ஆலயத் தைக் கட்டும் நாள் விரைவில் வரும்!”  என்று பிரசங்கம்.
“வந்தே மாதரம்” பாடலின் தாத்பரியமும் பின்புலமும் இதுதான்.
ஆனந்த மடம் நாவலின் நடுநாயகமான வந்தே மாதரம் பாடலினை முசுலிம்கள் கடுமையாக எதிர்ப்பதன் நியாயம் இப் போழுது புரிந்திருக்க வேண்டுமே!
ஒரு கால கட்டத்தில் இந்த வந்தே மாதரத்தைத் தூக்கிப் பிடித்தது காங்கிரசு! அப்பொழுது காங்கிரசு என்றாலே, பார்ப் பன தர்பார்தானே! - அன்றைய பா.ஜ.க. சங்பரிவார் என்றுகூட அதனைச் சொல்ல முடியும்.
பாரதியார் கூட வந்தே மாதரத்துக்கு வக்காலத்து வாங்கியவர்தான்!
நொந்தே போயினும்
வெந்தே மாயினும்
நந்தேசத்தவர்
உவந்து சொல்வது
வந்தே மாதரம்
பாரதியைத் தொற்றிப் பிடித்த பார்ப்பன வாடைக்கு இந்த ஒருசோறு பதம்போதும்.
3) சட்டமன்றங்களில் என்ன நடந்தது?
1937-இல், ஒரிசா சட்டப் பேரவையில், “வந்தே மாதரம்” தேசியகீதமாகப் பாடப்பட் டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. அமர்ந்தேயிருந்தனர். இது சட்டப் பேர வைத்தலைவரிடமும் முறையிடப்பட்டது. தேசிய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப் பதும் எழுந்திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறிக் கழன்று கொண்டு விட்டார் சபாநாயகர்.
ஒரிசாவில் மட்டுமல்ல அதே காலகட்டத் தில் (1938-இல்)சென்னை மாநிலத்தில் என்ன நடந்தது? சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) அப்பொழுது பிரதமர். (அப்பொழுது பிரதமர் என்றுதான் பெயர்)
சட்டப் பேரவைத் தலைவராக இருந் தவர் ஆந்திரப் பகுதி  - கிழக்கு கோதாவரி யைச் சேர்ந்த புலுசுசாம்பமூர்த்தி  வழக்கு ரைஞர்  சுதந்திரப் போராட்டத்துக்காக அத்தொழிலை உதறி எறிந்தவர் - மேல் சட்டை கூட அணியாதவர்.
வந்தே மாதரம் பாடலை சட்டமன்றம் தொடங்கப்படும் போது பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் ஆசை! ஆசை நிறைவேற்றப்பட்டது. முசுலிம் லீக் உறுப் பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்.
வறட்டுத்தனமாகக் கூச்சல் போட வில்லை அவர்கள்; வளமான காரணத்தை யும் எடுத்துக் கூறினார்கள். இந்துக் கடவுள் களைப் போற்றித் துதிக்கும் ஒரு பாடலை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்க் கேள்வி வைத்தார்கள்.
பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய இந்து மத முத்தேவிகளும் அப்பாடலில் துதிக்கப்படுகிறார்கள். எனவேதான் இந்த எதிர்ப்பு. குல்லுகப்பட்டர் ஆச்சாரியார் (ராஜாஜி) பிரதம அமைச்சர்ஆயிற்றே! இதற்கு ஏதாவது ஓரு வழி செய்ய வேண் டாமா? அப்படி செய்யாவிட்டால் அவர் எப்படி ராஜாதந்திரி யாவார்?
சபை அலுவல் தொடங்கும் நேரம் காலை 11.00 மணி; இதற்குமுன்னதாக “வந்தே மாதரம்” பாடிவிடலாம்; மற்றவர்கள் இதற்குப் பின் சபைக்கு வரலாம்  என்பது தான் அந்த சமாதான நடவடிக்கை.
இன்னொன்றையும் கூட அவர் சேர்த் துக் கூறினார்: வேண்டுமானால் வந்தே மாதரத்துடன் மற்ற மதத்துப்பாடல்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்!  என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார்.
ஆனால் முசுலிம்களிடம் அந்தப் பருப்பு வேகவில்லை. சட்டமன்றத்தில் குறிப்பிட்ட மதத்தின் கடவுள்கள் பெயரில் பாடல் இடம் பெறக் கூடாது என்பதிலே மிக உறுதியாக இருந்தார்கள்.
வேறுவழியில்லை, வந்தே மாதரம், கைவிடப்பட்டது. கெஞ்சினால் மிஞ்சுவா ர்கள். மிஞ்சினால் கெஞ்சக் கூடியவர்களா யிற்றே பார்ப்பனர்கள்.
72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது.
சவுத்துப்போய்க் கிடக்கும் சங்பரிவார்க் கூடாரம் இதனைக் தூக்கிப்பிடித்து உயிர் தப்பித்துக் கொள்ளலாமா என்று முண்டிப் பார்க்கிறது. இது ஏதோ குறிப்பிட்ட முசுலிம்களின் பிரச்சினை மட்டுமல்ல.
மதச்சார்பற்ற சக்திகளின் மகத்தான பிரச்சினையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்திலே உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்றித் தீர வேண் டிய பிரச்சினையும் கூட!
4) பார்ப்பனியத்தின் நிலைப்பாடு என்ன?
சங்பரிவார் என்பது ஒரு முகமூடி; அதனுள் உறைந்திருப்பது பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப்பனியம். அதற்குள் பதுங்கிக் கிடப்பது ‘ஆனந்த மடங்கள்’ என்பதை மறந்துவிடக்கூடாது.
முசுலிம் மசூதிகளை இடியுங்கள்! அந்த இடத்திலே ராதா மாதவரின் ஆலயத்தைக் கட்டுங்கள்!  என்று ‘ஆனந்தமடம்’ நாவலில் கேட்ட அதே சூளுரை தானே 1992 டிசம்பரில் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பின் போது கேட்டோம்.
அன்றைக்கு “வந்தே மாதரம்” பாட வேண்டும் என்று வலியுறுத்திய அதே குரலைத்தான் பாரதிய ஜனதா ஆட்சியின் போது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ‘சரஸ்வதி வந்தனா’ பாடவேண்டும் என்ற குரலாக ஒலித்தது.
காலம் மாறலாம்; ஆனால் காவிகளின் பார்ப்பனியத்தின் கபடநெஞ்சம் மட்டும் மாறுவதில்லை; மாறுவதேயில்லை!
           ************************************

முசுலிம்கள் பன்றிகளாம்!


"அண்ணா! மகமதியப் பயல்களுடைய பள்ளிவாசல்களை இடித்துத் தள்ளி, அந்த இடத்தில் ராத மாதவரின் (கிருஷ்ணன்) ஆலயத்தைக் கட்டுங்காலம் வருமா?
என்ன இது? 1838-ஆம் ஆண்டில் வங்கநாட்டின் கண்டபுரத்தில் பிறந்து, 1894-இல் மறைந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் ‘வங்கமொழியில் யாத்த’ ஆனந்த மடம்' என்ற புதினத்தில் இடம் பெறும் உரையாடல் பகுதியே இது. அவ் வுரையாடலின் இறுதியில் எழுந்த பாடல்தான் "வந்தே மாதரம்"
மேம்போக்கில், இதன் பொருள் “மாநிலத் தாயை வணங்குவோம்" என்றாலும் இதன் ஆழமான பொருள் “துருக்கர்களைத் துரத்துவோம்" என்பதுதான்
பங்கிம் சந்திரப் பார்ப்பனரின் ஆனந்த மட நூலுக்கு அடிப் படைக் கரு, இந்நாட் டில் முசுலிம்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற பகைமை வெறியுடன், வங்காளத்தில் 1773-இல் ஹிந்துப் பரதேசிக் கூட்டங்கள் பண்ணிய கலகமே.
எனவே, "இத்தாடிப் பயல்களைத் தேசத்தைவிட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமுண்டு என்று எவனும் நினைக்கக்கூடாது என்ற பச்சை யான நச்சுக் கருத்தினையே சட்டர்ஜிப் பார்ப்பனன் தன் நூலில் வெளியிட்டிருப் பதில் வியப்பெதுவுமில்லை.
இம்மகமதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து, ஆற்றில் விடக் கருதி னோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்ப லாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம். நண்பர் களே அதற்கான காலம் வந்துவிட்டது புதினத்தில் வரும் இந்த ‘வீரவுரை’யின்படி அழிவு வேலைக்கான காலம் சென்ற நூற்றாண்டிலேயே வந்துவிட்டதாம்!
கொடுமொழி தொடர்வதைக் கேளுங்கள்.
வாருங்கள், நாம் சென்று அந்த இசுலாமி யப் பாவிகளின் இருப்பிடங்களை அழிப் போம். அப்பன்றிகளை அடைக்கும் பட் டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளையெல்லாம் காற்றில் பறக்கவிடுவோம். பகவன் நாம ஸ்தோத் திரம் செய்வோமாக!"
இவ்வளவு கடுமையான மொழிகள் எவ்வளவு கொடு¬ மயான உள்ளத்தி லிருந்து வர முடியும் என்பதைக் கற்பனை செய்கையில், நடுநிலையாளர் நெஞ்சம் நடுங்காதிருக்குமா? கயமை குடிகொண்ட ஆரியர் மனத்திலிருந்துதான் இத்தகைய சொற்கள் வெடி கொள்ள முடியும்.
"இம் முகமதியர்களை நிர்மூலம் செய்து விட வேண்டும் என்பதுவே எங்கள் கருத்து” என வெளிப்படையாகவே பறைசாற்றுகிற இந்நெடுங்கதையில், அடிக்கடி இசைக்கப் படுவதாக அதுவும் பதினாயிரம் இந்து மக் களால் ஒரே குரலாக இசைக்கப் பெறுவதாகக் குறிப்பிடப்படும் பாட்டுத்தான் 'வந்தே மாதரம்" கீதம்.
எனவேதான் வங்கப் பெரு மக்களாகிய எம்.என். ராய், ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் முதலியோர் முசுலிம் வெறுப்பை உட்கொண்டிருக்கும் இப் பாடலை ஏற்க மறுத்தனர். என்றாலும் அன்றைய இந்துத்துவப் பேராயக் கட்சி (காங்கிரஸ்) முரட்டுத்தனமாக இப்பாடலைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்தி பயிற்சி யளித்து விடாப்பிடியாக இன்றுவரை பாடப் பெறும் நிலைமையை உண்டாக்கி விட்டது!
ஆக - ‘வந்தே மாதரம்’, முசுலிம் மக்க ளும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலப்பகுதியில் பாடப்படுவதற்குரிய தகுதி படைத்த பொதுவான நாட்டு வணக் கப் பாடல் அன்று இசுலாமிய உடன்பிறப் புக்களின்மீது அளவிறந்த கசப்பு - காழ்ப்பு - வெறுப்பு - பகைமையை தன்னுள் அடக் கிக் கொண்டிருக்கும் ஒருசார்புப் பாடல் அது. மதச் சார்பின்மையை விடாது கடைப் பிடிப்பதாகக் கதைக்கப்படும் நாட்டில், அப்பாடலின் வரலாறு பின்புலம் - உட் கிடக்கை தெரியாமலேயே கோடிக்கணக் கானோர் அதைப் பாடிக் கொண்டிருக்கின் றனர். எவ்வளவு அருவருப்பு - அவலம்!

(இந்தச் செய்திகள் தமிழில் பண்டிதர் சி திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு 1919-ஆம் ஆண் டில் சென்னை தம்பு செட்டித் தெருவில மைந்த (பார்ப்பன) கணேஷ் அண்ட் கம்பெனியாரால் இரண்டாம் பதிப்பாக அச் சிடப்பட்ட "ஆனந்த மடம்" புதினத்தின் 41, 88, 112, 162-ஆம் பக்கங்களில் இடம் பெற்றவை)

------------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் 12-08-2017 ‘விடுதலை’ ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

Read more:
 http://viduthalai.in/page-1/148028.html#ixzz4pXJXztxG